தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அண்மைக்காலமாக கன்னட படங்களுக்கு இந்திய அளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
‘தியா’, ‘கருட கமனா விருஷப வாகன’, ‘777 சார்லி’, ‘கேஜிஎப் 1 & 2’ உள்ளிட்ட படங்களின் வருகைக்குப் பிறகு கன்னட படங்களை விரும்பி பார்ப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி கன்னட சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள திரைப்படம் ‘கந்தாரா’ (Kantara).
ரிஷப் ஷெட்டி என்பவர் இப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இவருடன் தமிழ் நடிகர் கிஷோர் (கறாரான வனத்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.) நாயகியாக சப்தமி கவுடா ஆகியோர் நடித்துள்ளனர்.
நில அரசியல்.. அரசு நிர்வாகம்.. பழங்குடியின மக்கள் என முக்கோண கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.
பண்ணையாருக்கும் பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்சினை மோதலை தோலுரிக்கும் படமாகும்.
இந்த நிலையில் படக்குழு தற்போது படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது .
இது தொடர்பான அறிவிப்பு அக்டோபர் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மினி ரிவ்யூ..
1980களில் பெரும் செல்வாக்கு கொண்ட அரசர் நிம்மதி தேடி அலைகிறார். அப்போது பழங்குடியின மக்கள் வழிபடும் கடவுளை தனக்கு தருமாறு கேட்கிறார். அதற்கு பதிலாக ‘தன் நிலங்களை உங்களுக்கு தருகிறேன்” என்கிறார்.
சில 100 ஆண்டுகளுக்குப் பிறகு அரசர் பரம்பரையில் வந்தவர்கள் தங்களுக்கு நிலத்தை தருமாறு பழங்குடியின மக்களிடம் சண்டை போடுகின்றனர். இந்த மோதல் தொடர்பான கதைக்களமே இந்த படம்.
கூடுதல் தகவல்…
‘கந்தாரா’ படத்தை “தலைசிறந்த படைப்பு” என்று பாராட்டி இதன் மலையாள பதிப்பை கேரளாவில் வாங்கி வெளியிடப் போவதாக நடிகர் பிருத்விராஜ் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Kannada movie Kantara will be dubbed in Indian languages