தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனை எதிர்த்து தமிழ்நாட்டில் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். எனவே இதனையடுத்து ஒரே நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அவர்கள் இந்த சம்பவத்தை கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்… “அந்தப் பொண்ணோட அழுகுரல் கேட்டதுல இருந்து மனசு பதறுது. நிர்பயாவுக்கு நடந்த கொடுமையைக் கேட்டு ஊர் உலகமே ஒண்ணா திரண்டப்போ, தமிழக முதல்வர் ஒரு அறிக்கை விட்டாங்க.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கொடூரக் குற்றங்களாகக் கருதப்பட்டு, உயர்மட்ட போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள்.
அந்தப் பெண்மணியின் பெயரால் ஆட்சி செய்யும் அரசாங்கம், எப்படி இவ்வளவு மெத்தனமாகவும், கவனக் குறைவாகவும் இருக்க முடியும்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லேன்னு சொல்றதுல இருக்கிற மும்முரம், குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனையை தமிழக அரசாங்கம் உறுதி செய்யும்னு சொல்றதுல இல்லையே.
குற்றவாளிகள் எல்லா வீடியோக்களையும் அழிச்சிட்டதா சொன்ன பிறகு அந்த வீடியோ மட்டும் எப்படி வந்தது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்றேன்னு சொன்ன தலைமையை (ஜெயலலிதா) பாக்கெட்ல போட்டோவா வெச்சிருக்க நீங்க, பெண்களுக்கு எதிரா நடக்கிற இந்த அநியாயத்துக்கு நீங்க என்ன பண்ணிருக்கீங்க.
நான் கேட்குற கேள்வியெல்லாம் உங்களுக்கு மிஸ்டர். சீ.எம். மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக கேக்கல. இரண்டு பொண்ணுங்களோட அப்பாவா கேக்குறேன். என்ன பண்ணி, செஞ்ச தப்புகளுக்குப் பரிகாரம் பண்ணப் போறீங்க?
மகாபாரதமும் ராமாயணமும் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைப்பதற்கான போர்களைப்பற்றியது. தன் பொண்டாட்டிக்காக போருக்குப் போற கடவுளார்கள் வாழற இந்த நாட்டுல உங்க அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானத்தை எப்படி துடைக்கப் போறீங்க சாமி” என்று முதல்வர் எடப்பாடிக்கு எச்சரிக்கை விடும் வகையில் கடுமையாக பேசியுள்ளார் கமல்ஹாசன்.
Kamals angry speech on Pollachi sexual abuse crimes