தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஓரிரு தினங்களுக்கு முன் கர்நாடக முதல்வர் குமாரசாமியை கர்நாடக மாநிலத்தில் சந்தித்து பேசினார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி காவிரி மேலாண்மை வாரியம் உள்ள நிலையில் கமல் எதற்காக அந்த மாநில முதல்வரை சந்தித்தார் என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும் பல கட்சியினர் கமலின் இந்த சந்திப்பை கண்டித்திருந்தனர்.
இந்நிலையில் தமிழக விவசாயிகள் அமைப்புடன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் கமல்ஹசன்.
அப்போது அவர் இதுகுறித்து கூறும்போது…
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் யார் வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கு ஒரு கட்சித் தலைவராக இருக்க வேண்டிய அவசியமில்லை.
எல்லாம் பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண முடியும். அதன் அடிப்படையில்தான் கர்நாடக முதல்வர் குமாரசாமி அவர்களை சந்தித்தேன்.
நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான் மகாத்மா காந்தி எல்லாம் செய்தார். அவர் ஒரு கட்சித் தலைவர் இல்லை.
அப்படியென்றால் காந்தியை கேள்வி கேட்பீர்களா? என்னை கேட்பது ஏன்?” என பேசினார் கமல்ஹாசன்.
Kamalhassan clarifies his meeting with Karnataka CM Kumarasamy