தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜல்லிக்கட்டு பிரச்சினையின் போதே கமல் தன்னுடைய பல கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து தமிழக முதல் அமைச்சர் பதவிக்கு அதிமுகவில் எழுந்த மோதலை தொடர்ந்து ஓ. பன்னீர் செல்வத்திற்கு தன் ஆதரவை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது சட்டசபையில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
ஆனால் அவையில் கடும் அமளி நடைபெற்று வருவதால் அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்கெடுப்பு நடைபெறும் முன்பே தன் கருத்தை கமல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்…
அதில் ‘இன்று காண்போம் நரி பரியாகும் விந்தை. வெல்வது நல்ல மக்களின் மந்திரமா அந்தச் சொக்கனின் தந்திரமா பார்ப்போம்’ என்று பதிவிட்டுள்ளார்.
Kamal tweets about Tamilnadu Assembly majority issue