தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முரசொலி நாளிதழின் 75 ஆம் ஆண்டு பவளவிழா சென்னையில் நடைபெற்றது.
இதில் பத்திரிகையாளர்கள் மற்றும் கமல், ரஜினி, வைரமுத்து, பிரபு உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டனர்.
இவ்விழாவில் ரஜினி கலந்துக் கொண்டாலும் நான் மேடையில் ஏறி பேசமாட்டேன். பார்வையாளர்களில் ஒருவராகவே அமர்வேன் என ஸ்டாலினிடம் நிபந்தனை விதித்திருந்தாராம்.
ஆனால் ரஜினியை அழைத்து அவருக்கு நினைவுப் பரிசை ஸ்டாலின் வழங்கினார்.
அதன்பின்னர் விழாவில் கமல் பேசும்போது…
“நான் கற்ற தமிழ் எல்லாம் செவி வழியே கற்றவைதான். செவிவழி கற்றத்தில் இரண்டாவது குரல் கருணாநிதியுடையது. ஏன் இரண்டாவது என்று சொல்கிறேன் என்று சொன்னால் நான் கேட்டு வளர்ந்த முதல் குரல் நடிகர் சிவாஜியுடையது.
இவ்விழாவில் ரஜினியை போல் நானும் மேடையில் பேசாமல் இருந்துவிடலாம் என்றிருந்தேன்.
ஆனால் என் வீட்டில் கண்ணாடியில் பார்த்தபோது, “தற்காப்பு அல்ல முக்கியம்; தன்மானமே முக்கியம்” என்று முடிவு செய்தேன். அதனால் இதுபோன்ற மேடையில் பேச நினைத்தேன்.” என்று பேசினார்.
இவ்வாறு கமல் பேசியதால் ரஜினி ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தலைவர் ரஜினி அந்த விழா மேடையில் பேசாமல் இருந்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் நண்பரான கமல் அவர்கள் ஏன்? இப்படி பேசினார்? என ரஜினி ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Kamal speech at Murasoli 75th year Rajini fans disappointed