ரஜினியின் பிரம்மாண்ட படத்தை இயக்கியவருடன் இணையும் கமல்..?

ரஜினியின் பிரம்மாண்ட படத்தை இயக்கியவருடன் இணையும் கமல்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் இயக்கி வரும் ‘விக்ரம்’ படத்தை தயாரித்து அதில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.

லோகேஷ் படத்தை முடித்துவிட்டு ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார்.

இதன்பின்னர் மகேஷ் நாராயணன் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறாராம் கமல்.

இந்த படங்களை முடித்துவிட்டு ரஞ்சித் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

கமலின் பிறந்தநாள் சமயத்தில் ரஞ்சித் அவரை சந்தித்து பேசியதாகவும் அப்போது ரஞ்சித் சொன்ன ஒன் லைன் கமலுக்கு பிடித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினியின் பிரம்மாண்ட படங்களான கபாலி மற்றும் காலா படங்களை இயக்கியவர் ரஞ்சித்.

அண்மையில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை என்ற படத்தை இயக்கியிருந்தார்.

தற்போது காதலை மையப்படுத்தி நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார் ரஞ்சித்.

இதில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர்.

Kamal Haasan joins this Rajini film hit director ?

தன் குடும்ப தயாரிப்பில் ‘வாஷி’ பிடித்து நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

தன் குடும்ப தயாரிப்பில் ‘வாஷி’ பிடித்து நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை கீர்த்தி சுரேஷின் குடும்பம் ஒரு நட்சத்திர குடும்பம்.

இவரது பாட்டி ‘தாதா 87’ படத்தில் சாருஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

கீர்த்தியின் அம்மா மேனகா 1980களில் வெளியான நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

கீர்த்தியின் அப்பா சுரேஷ் மலையாள சினிமாவில் ஒரு பிரபல தயாரிப்பாளர்.

இந்த நிலையில் சுரேஷின் தயாரிப்பு நிறுவனமான கலாமந்திர் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு ‘வாஷி’ என டைட்டில் வைத்துள்ளனர். மலையாளத்தில் வாஷி என்றால் பிடிவாதம் என்ற பொருளும் உண்டு.

இந்த படத்தை கீர்த்தியின் அக்கா ரேவதி தயாரிக்கிறார்.

இது அவர்களின் தயாரிப்பில் உருவாகும் 34வது படைப்பாகும். இதற்கு முன்பே இவர்கள் தயாரிப்பில் உருவான படங்களில் குழந்தை நட்சத்திரமாக 3 படங்களில் நடித்திருக்கிறாராம் கீர்த்தி.

தற்போதுதான் முதன்முறையாக இவர்கள் குடும்ப தயாரிப்பில் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தில் நாயகனாக டோவினோ தாமஸ் நடிக்கிறார். இவர் மாரி 2 படத்தில் தனுஷ்க்கு வில்லனாக நடித்திருந்தார்.

பிரபல சினிமா போட்டோகிராபர் கோபாலகிருஷ்ணனின் மகன் விஷ்ணு என்பவர் இந்த படத்தை இயக்க வருகிற 17ம் தேதி ‘வாஷி’ சூட்டிங் தொடங்கவுள்ளது.

Keerthy Suresh and Tovino thomas joins for Vashi

அதிக வலு பெறும் அஜித்தின் ‘வலிமை’.; தல பேன்ஃஸ் வேறமாரிதான்..

அதிக வலு பெறும் அஜித்தின் ‘வலிமை’.; தல பேன்ஃஸ் வேறமாரிதான்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘வலிமை’.

யுவன் இசையமைத்து வரும் இந்த படத்தில் நாயகியாக ஹீமா குரேஷி நடிக்க, வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளார்.

இதனிடையில் ‘நாங்க வேற மாறி…” என்ற சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்கள் கவர்ந்துள்ளது.

இந்த படத்தை 2022 அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிடவுள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

இந்த படத்தை தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ‘வலிமை’ திரைப்படத்தை இந்தி மற்றும் தெலுங்கிலும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

எனவே உடனடியாக ஹிந்தி டப்பிங் பணிகளை தொடங்குமாறு போனி கபூர் உத்தரவிட்டுள்ளாராம்.

அதன்படி 2022 பொங்கலுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ‘வலிமை’ வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Thala Ajith’s Valimai to release in Hindi and Telugu ?

புனித் ராஜ்குமாருக்கு சிகிச்சையளித்த டாக்டரை மிரட்டும் ரசிகர்கள்.; போலீஸ் பாதுகாப்பு

புனித் ராஜ்குமாருக்கு சிகிச்சையளித்த டாக்டரை மிரட்டும் ரசிகர்கள்.; போலீஸ் பாதுகாப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த‌ அக்டோபர் மாதம் 29‍-ம் தேதி திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் (வயது 46). இது இந்திய திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்தது.

தற்போது அவருக்கு இறுதி நேரத்தில் சிகிச்சையளித்த டாக்டர் ரமணராவ் என்பவரை அவரது ரசிகர்கள் மிரட்டத் தொடங்கியுள்ளனர்..

புனித் ஆபத்தான நிலையில் இருந்தபோது அவரை ஏன் ஆம்புலன்ஸில் அனுப்பவில்லை? இது டாக்டரின் அலட்சியமே என கூறி அவரை மிரட்டியும் சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகின்றனர்.

இந்த புகார் குறித்து டாக்டர் ரமணராவ் கூறியுள்ளதாவது…

”புனித் என் மகனைப் போன்றவர். அவரது இறப்பு ரசிகர்களைப் போலவே எனக்கும் வேதனையான ஒன்றுதான்.

புனித் என் கிளினிக்கு வந்தபோது இ.சி.ஜி. எடுக்கப்பட்டது.

அப்போது ஹார்ட் அட்டாக் அறிகுறி தென்பட்டதால், அவரது மனைவி அஸ்வினியிடம் தகவல் தெரிவித்து விக்ரம் மருத்துவமனைக்குக் கொண்டு போக சொன்னேன்.

அப்போது ஆம்புலன்ஸ் வரவழைத்து இருந்தால், டிராப்பிக்கில் வருவதற்கே குறைந்தபட்சம் 10-15 நிமிடங்கள் ஆகியிருக்கலாம்.

பின்னர் இங்கிருந்து அங்கு செல்வதற்கு 10 நிமிடங்கள் ஆகியிருக்கும்.

எனவே தான் அவரது காரிலேயே விக்ரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அதற்குள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார்.

புனித் சிகிச்சையில் எவ்வித தாமதமும் அலட்சியமும் காட்டவில்லை” என டாக்டர் ரமணராவ் தெரிவித்துள்ளார்.

இதனிடையில் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சதாசிவநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் புனித் ரசிகர்கள். இல்லையெனில் பெங்களூருவில் போராட்டம் நடத்துவோம் எனவும் எச்சரித்துள்ளனர்.

இதனால் கர்நாடக மாநில தனியார் மருத்துவமனைகளின் கூட்டமைப்பினர் “டாக்டருக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும்”என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து டாக்டர் ரமணராவ்வின் வீடு மற்றும் மருத்துவமனைக்கு துப்பாக்கி ஏந்திய‌ போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Puneeth Rajkumar’s doctor given police protection after protests by his fans

டைரக்டர் & டைட்டில் மாற்றம்.; தயாரிப்பாளர் சங்கத்தில் கௌதம் கம்ப்ளைண்ட்

டைரக்டர் & டைட்டில் மாற்றம்.; தயாரிப்பாளர் சங்கத்தில் கௌதம் கம்ப்ளைண்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வாரம் பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட படம் ‘அன்புசெல்வன்’.

இந்த படத்தை வினோத் குமார் என்பவர் இயக்கவுள்ளதாகவும் கௌதம் மேன்ன் நாயகனாக நடிக்கவுள்ளதாகவும் பர்ஸ்ட் லுக் வெளியானது. இந்த போஸ்டரை இயக்குனர் ரஞ்சித் வெளியிட்டார்.

ஆனால் இந்த படத்தில் நான் நடிக்கவில்லை எனக்கே இது ஷாக் நியூஸ் என தெரிவித்தார் கவுதம் மேனன். இதனால் தனது டுவிட்டர் பதிவை நீக்கினார் பா.ரஞ்சித். இந்த பரபரப்பான செய்திகளை நம் தளத்தில் பார்த்தோம்.

இதன்பின்னர் படக்குழு கௌதம் மேனன் நடித்த காட்சிகளை வீடியோவாக வெளியிட்டனர்.

வினா என்ற படத்தின் பெயர் தற்போது அன்பு செல்வன் என மாற்றப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அன்பு செல்வன் குழுவினர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் கௌதம் மேனன் புகார் அளித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: ஜெய் கணேஷ் இயக்கத்தில் வினா என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

2018ம் ஆண்டில் சில நாட்கள் அதன் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டேன்.

ஆனால் அதன்பின்னர் எந்த பணிகளும் நடக்கவில்லை.

தற்போது வினோத் குமார் இயக்கத்தில் படத்தை மீண்டும் தொடங்கலாம் என்றனர். நான் ஜெய்கணேஷ் இயக்கத்தில் மட்டுமே நடிப்பேன் என்றேன்.

இந்த ஒப்பந்தத்தை மீறி, படத்தின் தலைப்பு, இயக்குனரை மாற்றி அன்புசெல்வன் என்ற பெயரில் விளம்பரம் செய்து வருகின்றனர்.

அதனை தடுத்து நிறுத்துவதோடு, சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகாராளித்துள்ளார் கௌதம் மேனன்.

Director Gautham Menon complains Anbu Selvan team

ட்டான்னு.. ட்டான்னு.. ‘டான்’ பட டப்பிங்கை முடித்த சிவகார்த்திகேயன்

ட்டான்னு.. ட்டான்னு.. ‘டான்’ பட டப்பிங்கை முடித்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘டாக்டர்’ பட ரூ 100 கோடியை வசூலித்த மகிழ்ச்சியில் உள்ளார் நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது நடித்து வரும் “டான்” படத்தை சிபி சக்ரவர்த்தி என்பவர் இயக்கி வருகிறார். இதிலும் டாக்டர் பட நாயகி பிரியங்கா நாயகியாக நடித்து வருகிறார்.

இவர்களுடன் எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் சூட்டிங் பணிகள் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது சென்னையில் ஓயாமல் மழை பெய்து வந்தாலும் “டான்” படத்திற்கான தனது டப்பிங் பணிகளை முடித்துவிட்டார் சிவகார்த்திகேயன்.

எனவே விரைவில் பட போஸ்டர்கள், டீசர், சிங்கிள் ட்ராக் லான்ச் உள்ளிட்வைகளை எதிர்பார்க்கலாம்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தோடு இணைந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan completed his dubbing portion of Don

More Articles
Follows