தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கேரளா திருவிதாங்கூர் தேவசம் போர்டு, 63 அர்ச்சகர்களைப் புதிதாக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இதில், 36 பேர் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அர்ச்சகர்கள் தேர்வில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டுள்ளதாகவும் தகுதி, திறமை அடிப்படையில் தேர்வு நடைபெற்றதாகவும் கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்திருந்தார்.
அதுபோல் சபரிமலை கோயிலில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் பூசாரிகளாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
நாட்டில் முதன்முறையாக, பிராமணர் அல்லாதோர் திருவிதாங்கூர் தேவசம் போர்டால் அர்ச்சகராக நியமிக்கப்பட்ட சம்பவத்துக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த முறை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த பட வேண்டும் என வைகோ, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பான செய்தியை வெளியிட்டு கேரள முதல்வருக்கு தன் நன்றியினை தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
இதன்மூலம் பெரியாரின் கனவு நிறைவேறியதாகவும் அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
Kamal Haasan hails non Brahmin priests appointment in Kerala
Kamal HaasanVerified account @ikamalhaasan
திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாத அர்சகர்கள் நியமனம். நன்றி கேரள முதல்வருக்கும் தேவஸ்தானத்துக்கும். வைக்கம் வீரர்க்கு வணக்கம்.
Bravo Travancore Dewasom board.Salute to Kerala CM Mr. Pinarayi Vijayan.4 appointing 36 non-Brahmin priests. Periar’s dream realized