புரட்சிக்கு 3 நிமிடம் போதும்..; பொள்ளாச்சியில் பொங்கிய கமல்

புரட்சிக்கு 3 நிமிடம் போதும்..; பொள்ளாச்சியில் பொங்கிய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Just 3 mins enough for Revolution says Kamal at Pollachiமக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை அண்மையில் தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன்.

அந்த கட்சி பணி தொடர்பாக மக்கள் பயணம் என்ற பெயரில் தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து வருகிறார்.

அதன் படி இன்று மாலை பொள்ளாட்சி சென்று அங்கு பொதுவெளியில மக்கள் மத்தியில் பேசவிருந்தார்.

ஆனால் கமல்ஹாசனுக்கு தமிழக காவல்துறை முதலில் அனுமதி தரவில்லை.

அதன்பின்னர் 10 நிமிடங்கள் மட்டும் பேசிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் அனுமதிக்க முடியாது என போலீஸ் கூறியுள்ளது.

இதுகுறித்து பேசிய கமல்ஹாசன்…. ‘எனக்கு இங்கு பேச பத்து நிமிடங்கள் மட்டுமே அனுமதி கொடுத்துள்ளார்கள். ஆனால் புரட்சிக்கு மூன்று நிமிடங்கள் போதும். எனக்கு இடைஞ்சல் கொடுத்தவர்களுக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன்” என பேசினார்.

Just 3 mins enough for Revolution says Kamal at Pollachi

தனுஷ் ட்வீட்; பிரபுதேவா டான்ஸ்… மகிழ்ச்சி மழையில் அம்ரீஷ்

தனுஷ் ட்வீட்; பிரபுதேவா டான்ஸ்… மகிழ்ச்சி மழையில் அம்ரீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music composer Amrish excited about Chinna Machan song super hitசின்ன மச்சான் செவத்த மச்சான் என்ற பாடல் சார்லி சாப்ளின் 2 படத்தில் இடம் பெற்றிருந்த பாடல் இது.

அம்ரீஷ் இசையில் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி பாடிய இந்த பாடல் இன்று உலகம் முழுவதும் பாப்புலராகியுள்ளது.

யூடியூபில் சுமார் 53 லட்சம் பார்வையாளர்கள் கண்டு களித்திருக்கிறார்கள்.

இது பற்றிய சந்தோஷத்தை பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர் தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் T.சிவா இசையமைப்பாளர் அம்ரீஷ் இயக்குனர் ஷக்திசிதம்பரம்.

டி.சிவா பேசும் போது…

இந்த பாடல் விஜய் டிவியில் செந்தில் கணேஷ் ராஜலட்சுமியால் பாடப் பட்ட போதே இது சூப்பர் ஹிட் ஆகும் என்று அவர்களிடம் பேசி ரைட்ஸ் வாங்கி வைத்து விட்டேன். அதற்கு பிறகு தான் அந்த பாடலுக்காக அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

அந்தப் பாடலை சார்லி சாப்ளின் 2 படத்திற்காக அம்ரீஷ் இசையில் உபயோகப்படுத்திக் கொண்டோம்.

இயக்குனர் ஷக்திசிதம்பரம் பேசியதாவது…

அம்ரீஷ் நல்ல இசை ஞானம் உள்ளவர். இன்று இந்த ஒரு பாடலே பட்டையை கிளப்பி இருக்கு எனும் போது அடுத்து வருகிற பாடல்கள் எல்லாம் இன்னும் பட்டையை கிளப்பும் என்றார்.

இசையமைப்பாளர் அம்ரீஷ் பேசும் போது…

இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் சிவா சார், இயக்குனர் ஷக்திசிதம்பரம் சார் பிரபுதேவா சார் ஆகியோருக்கும் இந்த பாடலை ட்விட் மூலம் மேலும் பாப்புலராக்கிய தனுஷ் சாருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

பிரபு தேவா சார் எவ்வளவோ டியூனுக்கு வித விதமான டான்ஸ் ஆடி இருக்கிறார். வெற்றி பெற்றிருக்கிறார். சின்ன மச்சான் பாடல் மூலம் அவர் ஆடி நான் வெற்றி பெற்றிருக்கிறேன்.

எனக்கான ஒரு இடம் சினிமாவில் ராகவா லாரன்ஸ் மூலம் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் மூலமாகவும், பிரபுதேவா சாரின் சார்லி சாப்ளின் 2 மூலமும் எனக்கு கிடைத்திருக்கிறது எனும் போது பெருமையாக இருக்கிறது.

மிகப் பெரிய இசையமைப்பாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எனக்கும் ஒரு இருக்கை கிடைத்திருக்கிறது என்பது சந்தோஷமே. அடுத்து சார்லி சாப்ளின் 2 படத்தில் இன்னும் 4 பாடல்கள் இருக்கு…அதுவும் மக்களின் ஆதரவோடு வெற்றி பெறும் என்று நம்பறேன்.

சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் எல்லா சோசியல் மீடியாவிலும் முதல் இடத்தை பிடித்து டிரெண்டிங்கில் இருக்கு என்பது எங்கள் குழுவினருக்கு கிடைத்த வெற்றி என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சரிகம ஆடியோ நிறுவனத்தை சேர்ந்த ஆனந்த் தியாகராஜன் கலந்து கொண்டார்.

Music composer Amrish excited about Chinna Machan song super hit

charlie chaplin 2 press meet

தன்னை சந்திக்க விரும்பிய தினேஷின் மருத்துவ செலவை ஏற்ற சூர்யா

தன்னை சந்திக்க விரும்பிய தினேஷின் மருத்துவ செலவை ஏற்ற சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaநடிகர் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் தென்னிந்திய அளவில் உள்ளனர்.

திரையுலகைத் தாண்டியும் இவர் சமூக பணிகளில் ஈடுப்பட்டு வருவதால், இவரின் மீதான நன்மதிப்பு பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சூர்யாவை பார்க்க வேண்டும் என ஒரு சிறுவன் ஆசைப்பட்டுள்ளான்.

அந்த சிறுவனம் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தான்.

சிறுவனின் ஆசையை அறிந்த சூர்யா அவனை தன் வீட்டிற்கு அழைத்து அவனிடம் சிறிது நேரம் செலவிட்டுள்ளார்.

சிறுவனுக்காக சிவகுமார் தான் வரைந்த ஓவியம் ஒன்றை பரிசளித்துள்ளார்.

அப்போது சூர்யாவுடன் அவரது தம்பி நடிகர் கார்த்திய்யும் இருந்துள்ளார்.

மேலும் அந்த சிறுவனின் மருத்துவச் செலவு முழுவதையும் தான் ஏற்கவுள்ளதாக சூர்யா தெரிவித்துள்ளார்.

மீண்டும் சிவகார்த்திகேயன்-மித்ரனுடன் இணையும் யுவன்

மீண்டும் சிவகார்த்திகேயன்-மித்ரனுடன் இணையும் யுவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and yuvan shankar rajaவிஷால் தயாரித்து நடித்து இரும்புத்திரை படத்தை மித்ரன் இயக்கியிருந்தார்.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெறவே மித்ரனின் அடுத்த பட ஹீரோ யார்? என்ற கேள்வி நெடு நாட்களாக பேசப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை அதிரடி அறிவிப்பாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 15வது படத்தை மித்ரன் இயக்கவுள்ளதாக வந்த செய்திகளை நம் தளத்தில் பார்த்தோம்.

இப்படத்தை சீமராஜா படத்தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தயாரிக்கவுள்ளார்.

தற்போது இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்களை பார்க்கலாம்.

ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டங்கை செய்யவுள்ளார்.

படத்தின் இசையை யுவன் சங்கர் ராஜா மேற்கொள்கிறார்.

2013ல் சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கு யுவன் தான் இசையமைத்திருந்தார். அதுபோல் இரும்புத்திரை படத்திற்கும் யுவனே இசை.

தற்போது 2வது முறையாக சிவா மற்றும் மித்ரனுடன் யுவன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகும் மக்கள் நீதி மய்யம்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகும் மக்கள் நீதி மய்யம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanஅடுத்த 2019ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்குமா? அல்லது ராகுல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு வருமா? என இந்திய தேசமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலை சந்தித்த செய்தியாளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்று கேட்டனர்.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களை செய்து வருகிறோம். தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறோம்.

வெவ்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்று தேர்தலை எதிர்கொள்வது பற்றி அறிவுரை வழங்கினார்கள்.

உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்தவில்லை; பெரிய அளவில் வீச்சு இருக்க வேண்டும் என கருதுகிறோம். ” என்றார்.

*ஸ்கெட்ச்* பட தயாரிப்பாளருடன் இணையும் அரவிந்த்சாமி-ரெஜினா

*ஸ்கெட்ச்* பட தயாரிப்பாளருடன் இணையும் அரவிந்த்சாமி-ரெஜினா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arvind Swamy and Regina Cassandra teams up for Rajapandis Kallapartவிக்ரம் நடித்து வெற்றி பெற்ற “ ஸ்கெட்ச் “ படத்தை தயாரித்த மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் தற்போது அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் “ கள்ளபார்ட் “ படத்தை மிக பிரமாண்டமாக தயாரிகிறார்கள்.

என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார்.

வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த படத்திற்காக ஏ.வி.எம் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைக்கப்பட்டு இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. தொடர்ந்து முப்பது நாட்கள் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் பா.ரங்கநாதன்.எம்.எல்.ஏ , தொழிலதிபர்கள் எஸ்.செல்வம், சிவசங்கர், பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், இயக்குனர்கள் விஜய் சந்தர், ஜெயபிரகாஷ், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, குட்டிபத்மினி ஆகியோர் கலந்துகொண்டனர்.

வசனம் – ராதாகிருஷ்ணன்
ஒளிப்பதிவு – அரவிந்த்கிருஷ்ணா
இசை – நிவாஸ் கே.பிரசன்னா
கலை – மாயபாண்டி
எடிட்டிங் – இளையராஜா
ஸ்டன்ட் – மிராக்கில் மைக்கேல்
தயாரிப்பு மேற்பார்வை – வி.ராமச்சந்திரன்
தயாரிப்பு – எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன்.
திரைக்கதை எழுதி இயக்குகிறார் – ராஜபாண்டி.

Arvind Swamy and Regina Cassandra teams up for Rajapandis Kallapart

More Articles
Follows