தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘ஜெயிலர்’ படம் ரிலீஸ் ஆவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ஆன்மீக சுற்றுப்பயணத்திற்காக இமயமலை ஹரியானா உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று இருந்தார்.
அங்கு பாபா குகையில் தியானம் செய்தார். அதன் பின்னர் அங்குள்ள ஆசிரமத்தில் தங்கி அங்கு உள்ள சன்யாசி துறவிகளை சந்தித்தார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தன.
இந்த நிலையில் நேற்று ஆகஸ்ட் 21ஆம் தேதி தன்னுடைய பயணங்களை முடித்துவிட்டு சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.
அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
‘ஜெயிலர்’ படத்தை மிகப்பெரிய வெற்றிபெற வைத்த என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ்நாட்டு மக்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றி படத்தை எனக்கு வழங்கிய கலாநிதி மாறன், இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோருக்கும் மனமார்ந்த நன்றி.
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன் என நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்தவர்… வயது குறைவானவர்களாக இருந்தாலும் யோகிகள், சன்னியாசிகள், காலில் விழுவது என்னுடைய பழக்கம்.
உத்திரபிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரை நட்பு அடிப்படையில் மட்டுமே நான் சந்தித்து பேசினேன் என தெரிவித்தார் ரஜினிகாந்த்.
அதன் பின்னர் அரசியல் குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது.. “அரசியல் கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை என கூறி சென்றார் ரஜினிகாந்த்.
It is my habit to fall at feet of sanyasis or Yogi even they are younger to me said Rajini