தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முரளி மற்றும் சிம்ரன் இணைந்து நடித்த கனவே கலையாதே என்ற படத்தை 1998ல் இயக்கியவர் கௌதமன்.
அதன் பின்னர் 12 ஆண்டுகளுக்கு பின்னர் மகிழ்ச்சி என்ற திரைப்படத்தை இயக்கி தானே ஹீரோவாக நடித்தார் இவர். இதில் சீமான், அஞ்சலி ஆகியோரும் நடித்திருந்தனர்.
அதன்பின்னர் தமிழகத்தில் நிலவும் ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு, விவசாய பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.
தற்போது அவர் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.
கட்சியின் பெயர், கொடி, கொள்கைகள் குறித்து 2019 பொங்கல் சமயத்தில் அறிவிக்க இருக்கிறாராம்.
இது குறித்து அவர் கூறியதாவது…
தமிழ் மொழியை, தமிழர் பண்பாட்டை அழிக்க எவர் வந்தாலும் அவர்கள்தான் எங்கள் எதிரிகள். எங்களை பிறர் ஆண்டதெல்லாம் போதும் என்ற நிலைக்கு நாங்கள் வந்துவிட்டோம்.
ரஜினியையும், கமலையும் திரைக்கலைஞர்களாக மிகப்பெரிய அளவில் மதிக்கிறோம். ஆனால் அரசியல் களத்தில் அவர்களை எதிர்ப்போம்.
எங்களைப் போன்று தமிழர்களுக்காக, தமிழர் நலனுக்கு ஆதரவாக காவல்துறை அடக்குமுறையை எதிர்த்து அவர்களால் சிறைக்குச் செல்ல முடியுமா?
ரஜினிகாந்த் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட நின்றாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். எங்கள் இனத்தை, மொழியை காக்கவும், எங்கள் உரிமையை நிலைநாட்டுதற்காகவும் அரசியல் இயக்கம் தொடங்குகிறோம் என்றார் கௌதமன்.
I will oppose Rajini in Public election says New Party leader Gauthaman