தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய்சேதுபதி நடித்துள்ள கருப்பன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகிறது.
இப்படம் தொடர்பான பிரஸ் மீட்டில் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
அப்போது விஜய்சேதுபதியிடம் ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசம் பற்றி கருத்து கேட்கப்பட்டது.
அவர் பதிலளித்தாவது…
மத்திய அரசு நம்மை நசுக்கி கொண்டிருக்கிறது. ரயில் டிக்கெட்டில் நமது தமிழ் மொழியை எடுத்துவிட்டார்கள். அதுவே பெரிய வருத்தம்.
நிறைய கோபம் வருகிறது. நாம் உணர்ச்சிவசப்படுதால் நிறையப் பேர் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
உணர்ச்சிவசப்படுதலைக் குறைத்து செயலில் இறங்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
ஏன் நடிகர்களை பார்த்து அந்த கேள்வியை கேட்க வேண்டும். அந்த கேள்வியில் எனக்கு உடன்பாடில்லை.
மக்கள் மீது அன்பும் அக்கறையும் உள்ள ரஜினி, கமல் போன்ற யார் வேண்டுமானாலும் வரலாம்.” என்று பதிலளித்தார் கருப்பன்.
Rajini and Kamal has care for Peoples So they can come to politics says Vijay Sethupathi