தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமல்-கௌதம் மேனன் இணைந்த வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்து, ரசிகர்கள் மனதில் ஆழமாய் பதிந்தவர் கமாலினி முகர்ஜி.
நீண்ட இடைவேளைக்கு பின்னர், தற்போது எஸ்.ஜே.சூர்யாவுடன் இறைவி படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…
“ஒரு சில படங்கள் என்றாலும் எனக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு ஆச்சரியமானது.
தமிழ் படங்களில் நிறைய நடிக்கவில்லை. மொழி எனக்கு பிரச்சினை இல்லை. நல்ல கேரக்டருக்காக காத்திருந்தேன்.
எனக்கு எந்த ஹீரோ பிடிக்கும் என்று அடிக்கடி கேட்கிறார்கள். நடிப்புக்குத்தான் நான் ரசிகை.
தற்போது மலையாள படத்திலும் நடித்து வருகிறேன். எழுத்துலகில் ஆர்வம் அதிகம். நிறைய எழுத நினைத்திருக்கிறேன்.
அதுபோல் மேடை நாடக அனுபவம் உள்ளதால், அதிலும் மீண்டும் நடிக்கக்கூடும் என நினைக்கிறேன்” என்றார் இந்த இறைவி நாயகி.