விஷால்–அனிஷா திருமணம் நிற்க இதான் உண்மையான காரணம்..?

விஷால்–அனிஷா திருமணம் நிற்க இதான் உண்மையான காரணம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Here is reason why Vishal and Anisha Call Off Wedding After Engagement சில ஆண்டுகளுக்கு முன் சரத்குமார் மகள் & விஷால் மிகவும் நெருக்கமாக இருந்தனர். இதனையடுத்து விரைவில் இவர்களின் திருமணம் நடக்கும் என கோடம்பாக்கமே கூறி வந்தது.

ஆனால், திடீரென தெலுங்கு நடிகையும், தொழிலதிபரின் மகளுமான அனிஷாவைக் காதலிப்பதாக அறிவித்து அவருடன் கடந்த மார்ச் மாதம் நிச்சயத்தார்த்தமும் செய்துக் கொண்டார் விஷால்.

இவர்களின் திருமணத்திற்கு இன்னும் இரண்டு மாதமே உள்ள நிலையில், திடீரென இருதரப்பிலும் திருமண வேலைகளை நிறுத்தி உள்ளதாக தகவல்கள வந்த வண்ணம் உள்ளன.

மேலும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து நிச்சயதார்த்த புகைப்படங்களை அனீஷாவும் நீக்கியுள்ளதால் இது உறுதி என்கிறார்கள்.

ஆனால் என்ன காரணம்? என்பது இதுவரை தெரியவில்லை.

தன் திருமணத்தை பற்றி கேட்கும்போது எல்லாம் நடிகர் சங்கம் புதிய கட்டிடம் கட்டிய பிறகு அங்குதான் என் திருமணம் நடக்கும் என பல ஆண்டுகளாக கூறி வந்தார்.

ஆனால் தற்போது வரை நடிகர் சங்கம் கட்டிடம் கட்டி முடிக்கப்படவில்லை. எனவே இதுதான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

இவையில்லாமல் அனிஷாவின் பெற்றோர் நடிகர் சங்க கட்டிடத்தில் திருமணத்தை நடக்க சம்மதம் அளிக்கவில்லை எனவும் ஒரு தகவல் வருகிறது.

நிஜமாகவே திருமணம் நின்றதா? என்பது குறித்து இரு தரப்பும் அறிவிக்கவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

சமீபத்தில் கன்னி ராசி பட பிரஸ் மீட்டில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என வரலட்சுமி கூறியதும் குறிப்பிடத்தக்கது.

Here is reason why Vishal and Anisha Call Off Wedding After Engagement

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலை இயக்கும் இருமுகன் டைரக்டர்

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலை இயக்கும் இருமுகன் டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal to team up with Anand Shankarசுந்தர் சி இயக்கி வரும் ‛ஆக்ஷன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

இப்படம் தற்போது துருக்கியில் படமாக்கப்பட்டு வருகிறது. வில்லனாக வேதாளம் பட புகழ் கபிர் துகான் சிங் நடித்து வருகிறார்.

இதனையடுத்து துப்பறிவாளன் 2 படத்தில் விஷால் நடிப்பார் என கூறப்பட்டது.

இந்த நிலையில் விக்ரமின் இருமுகன், விஜய் தேவரகொண்டா நடித்த நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தில் விஷால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Vishal to team up with Anand Shankar

கார்த்திதான் பர்ஸ்ட்; ரஜினி-விஜய்-அஜித்-சூர்யா எல்லாம் நெக்ஸ்ட்!

கார்த்திதான் பர்ஸ்ட்; ரஜினி-விஜய்-அஜித்-சூர்யா எல்லாம் நெக்ஸ்ட்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Vijay Ajith Suriya all next to Karthiடேய்.. என்னடா பண்ணி வச்சிருங்கீங்க.. டைட்டிலை பார்த்தா இப்படி கேட்க தோனுதா..? வரோம் பாஸ். வெயிட் பண்னுங்க…

கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை இயக்கியவர் ரஞ்சித். அதன்பின்னர் ரஜினி நடித்த கபாலி, காலா படங்களை இயக்கினார்.

கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார் வினோத். அதன்பின்னர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கினார் வினோத்.

அதுபோல் கார்த்தி நடித்து வரும் கைதி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இவர் அடுத்து விஜய் நடிக்கவுள்ள படத்தை இயக்குகிறார்.

அதுபோல் கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இயக்கினார் சிவா. அதன்பின்னர் தொடர்ந்து அஜித் நடித்த வீரம், வேதாளம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

இதற்கு அடுத்து சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் சிவா. இதற்கு அடுத்து ரஜினி படத்தை இயக்கவுள்ளார் சிவா என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

ஆக… இயக்குனர்கள் வினோத், ரஞ்சித், சிவா, லோகேஷ் கனகராஜ் ஆகிய நால்வரும் முதலில் கார்த்தி நடித்த படங்களை தான் இயக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini Vijay Ajith Suriya all next to Karthi

தமிழன்தான் ஆளனும்.; ரஜினிக்கு எதிராக விஜய் தந்தை எஸ்ஏசி பேச்சு.?

தமிழன்தான் ஆளனும்.; ரஜினிக்கு எதிராக விஜய் தந்தை எஸ்ஏசி பேச்சு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamizhan must rule Tamilnadu says SA Chandrasekarபிரபல தயாரிப்பாளர், அபிராமி ராமநாதனின், 73வது பிறந்த நாள் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டு வாழ்த்தினர்.

இதில், நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான, எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது:

தமிழன் எங்கிருந்தாலும் அவனுக்கு பெருமை தான். அமெரிக்காவில் பணியாற்றும் சாப்ட்வேர் வல்லுனர்கள் பலரும் தமிழர்கள்தான்.

மத்திய அரசு விருது கொடுத்தால் தான், தமிழனுக்கு பெருமை வரும் என்று அர்த்தமில்லை.

தமிழன் என்று சொல்வதில் எப்போதுமே, ஒரு திமிர் உண்டு. அப்படிப்பட்ட தமிழன் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்று பேசினார்.

இவரின் பேச்சுக்கு ரஜினிகாந்துக்கு எதிரான கருத்தாக இருக்குமோ? என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

விரைவில் கட்சி தொடங்கவுள்ள ரஜினி வெளி மாநிலத்தவர் என்பதால் எஸ்ஏசி.யின் இந்த பேச்சு அரசியல் உலகில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

Tamizhan must rule Tamilnadu says SA Chandrasekar

சூப்பர் சிங்கர் புகழ் அஜீஸ் இசையில் உருவாகும் சர்பத்

சூப்பர் சிங்கர் புகழ் அஜீஸ் இசையில் உருவாகும் சர்பத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)7 ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார் தயாரிக்கும் சர்பத் படத்தில் இசை அமைப்பாளராக தனது தடத்தை அழுத்தமாக பதித்துள்ளார் இசை அமைப்பாளர் அஜீஸ். கதிர், சூரி காம்பினேஷனில் உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்குகிறார்.

2009 சூப்பர் சிங்கர் சீசன் 2-வில் குரலால் வசீகரித்த அஜீஸ் தற்போது சினிமாவில் இசை அமைப்பாளராக வசீகரித்து வருகிறார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் குழந்தைக் குரலாக ஒலித்த இவரது குரல் அப்போதே பிரபலம். கோவா படத்தில் இவர் பாடிய இதுவரை பாடல் இதுவரைக்கும் இளைஞர்களை கவர்ந்து வருகிறது. குரலில் மெஸ்மரிசம் பண்ணும் அஜீஸ் இப்போது தன் இசை விரலாலும் கலக்கி வருகிறார். விரைவில் வெளியாக இருக்கிற சர்பத் படத்தில் 5 பாடல்களை மிகச் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். வெளியாகும் முன்பே சர்பத் படத்தின் பாடல்கள் மீது பெரிய நம்பிக்கை கொண்டுள்ள அஜீஸ், “இசை தான் என் ஜீவன்” என்கிறார்.

மேலும் ஒரு வெப்சீரிஸுக்கும் இசை அமைத்து வரும் அஜீஸ் சர்பத் படத்தின் ஆடியோ வெளியீட்டுக்குப் பிறகு மிகப்பிரபலமான இசை அமைப்பாளாராக பரிணாமம் அடைவார் என்கிறார்கள் படக்குழுவினர். படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 5 பாடல்களில் ஒரு பாடல் ப்ராப்பரான திருவிழா பாடலாம். ஒரு பிரண்ட்ஷிப் பாடல் இரண்டு மெலடி பாடல் என வெரைட்டியாக பாடல்கள் கம்போஸ் பண்ணி வைத்திருப்பதாக சொல்லும் அஜீஸ், படத்தின் கதையும் கதைக்கு ஏற்ற பின்னணி இசையும் சிறப்பாக இருப்பதாக கூடுதல் தகவலையும் சொன்னார். அஜீஸுக்கு பள்ளிப் படிப்பின் போதே இசை மீது தீராக்காதல் இருந்ததாம்.

இண்டிபெண்டண்ட் இசையில் பெரிய நாட்டத்தோடு இருந்துள்ள இவர் பல்வேறு குறும்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். மேலும் இசை ஆல்பங்களாலும் ரசிகர்களை சேர்த்து வைத்துள்ளார். இனி பல பெரும் படங்களில் அஜீஸுன் இசைப் பயணம் தொடரும் என எதிர்பார்க்கலாம்

சாஹோ படத்தின் புதிய பாடல் வெளியிட பட்டது

சாஹோ படத்தின் புதிய பாடல் வெளியிட பட்டது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)மூன்று பிரம்மாண்டமான பாடல்களும், கண்களை பறிக்கும் அளவிற்கு காட்சிப் படுத்தப் பட்டிருக்கிறது. இதன் அறிமுக விழாவில் சாஹோ படக்குழிவினர் பிரபாஸ், தயாரிப்பாளர் பிரமோத், மதன் கார்கி மற்றும் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய
மதன் கார்கி…
“பிரபாஸ் உடன் பாகுபலி படத்தில் பணியாற்றியதே எனக்கு மிகுந்த சந்தோஷாத்தைக் கொடுத்தது. மீண்டும் தற்பொது பிரபாஸுடன் பணியாற்றியது எனக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன். என் பாடல்களை மொழிபெயர்ப்பு செய்யாமல், எனக்கு முழு சுதந்திரம் கொடுத்த இயக்குனர் சுஜீத் அவர்களுக்கு இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு தனிப்பட்ட வகையில் மிகவும் பிடித்த பாடல் மழையும் தீயும் என்ற பாடல். இதில் மாறுபட்ட உணர்சிகளை வெளிப்படுத்துவதற்காக கதாநாயகனை தீயாகவும், கதாநாயகியை தண்ணீராகவும் சித்தரித்திருக்கிறேன். பிங்க் நிறத்தில் வடிவமைக்கப் பட்டிருக்கும் புதிய பாடல் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜீன்ஸ் படத்தில் இடம் பெற்றிருக்கும் பூவிற்குள் ஒளிந்திருக்கும் பாடல் போன்று உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பாடல் தான் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. பிரபாஸின் இப்படம் மிகப்பெரிய வெற்றியடைய அவர்களை வாழ்த்துகிறேன். மேலும் அவர் நடிக்கும் ஹாலிவுட் படத்தில் பணியாற்ற எனக்கு சீக்கிரம் தகவல் சொல்லி அனுப்புங்கள். ” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

“பேட் பாய்ஸ்” பாடலை எழுதிய இயக்குனர் விக்னேஷ் சிவன் பேசும் பொழுது,
“சாஹோ திரைப்படம் இந்திய சினிமாவிற்கும் ஹாலிவுட் சினிமாவிற்கும் ஒரு பாலமாக அமைந்துள்ளது. இப்படி ஒரு படத்தில் பணியாற்றியது எனக்கு கிடைத்த பெரு வாய்ப்பாக நினைக்கிறேன். சாஹோ படம் பிரம்மாண்டமாக வெற்றிப் பேர படக்குழுவினரை வாழுத்துகிறேன்.” என்று கூறினார்.

இயக்குனர் சுஜீத் பேசுகையில்,

“என்னை நம்பி இப்படி ஒரு பிரம்மாண்டமான படத்தை தயாரித்ததற்கு வம்சி மற்றும் பிரோமோத் அண்ணாவிற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். நடிகர் பிரபாஸ் அண்ணாவுடன் பணியாற்றியது சிறுவர்களுடன் அமர்ந்து முதல் முறையாக 3D படம் பார்ப்பது போல் இருந்தது. இப்படத்தில் நாங்கள் இருவரும் அண்ணன் தம்பியைப் போல் பழகினோம். நான் பெரும்பாலான நேரங்களில் அவரது வீட்டிலேயே தங்கிவிட்டேன். நானும் அவரது வீட்டிலேயே தங்கி விடுகிறேன் என்று என் அம்மா என்னை பலமுறை கேளி செய்திருக்கிறார். சாஹோ படத்தில் இடம் பெற்ற பாடலின் தமிழ் அர்த்தம் எனக்கு சரியாக தெரியாது. அது தெரிந்த பின்பு, கதையின் முழு அர்த்தமும் பாடல் வரிகளில் நிரப்பப் பட்டிருப்பதை உணர்ந்தேன். இப்படியொரு பாடல் வரிகளை தந்ததற்கு மதன் கார்கி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விக்னேஷ் சிவன் எனது சகோதரர் போல, அவர் எழுதிய பாடல் வரிகள் ஆச்சரியமாக இருந்தன. அவர் இப்படத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். ஷங்கர் மகாதேவன் அவர்கள் மிகவும் சிறப்பாக பாடியிருக்கிறார் அவருக்கும் நன்றி.” என்று கூறினார்.

இறுதியாக நடிகர் பிரபாஸ் பேசுகையில், “உண்மையெது பொய்யெது பாடலின் ஒரு பகுதியை வெளியிட்டிருக்கிறோம். இப்படத்தின் முக்கியக் கருத்தை இப்பாடல் வெளிப்படுத்துகிறது. அதனால் இப்படத்தின் முழு பாடலையும் நீங்கள் படத்தில் பார்க்கலாம் ஏனென்றால் அது கதையை பாதிக்கும் என்று கருதுகிறோம். இந்தப் பாடல் மூன்றுவித களமுடன் இதுவரை யாரும் பார்த்திராரத லோகேஷன்களில் காட்சிப்படுத்திருக்கிறோம். இந்தப் பாடல் தமிழ் ரசிகர்களுக்கு நிச்சயமாக ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும். பாகுபலி படத்திலிருந்தே எனது நெருங்கிய நண்பராக இருந்த மதன் கார்க்கியும், ஷங்கர்-எஹ்சன்-லாயும் எனக்கு சிறப்பான பாடல்களை தந்துள்ளனர். ” இப்படம் பாகுபலி போன்று அனைவரையும் கவரும்படி இருக்கும் என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

படக்குழுவினர் பேசி முடித்த பிறகு படத்தின் “உண்மையெது பொய்யெது” பாடல் ஒலிபரப்பப் பட்டது. பத்திரிக்கையாளர்களும் ஊடகத்தினரும் இப்படத்தில் பாடலை ரசித்துப் பார்த்து வெகுவாக பாராட்டினார்கள்.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் இந்த வருடம் ஆகஸ்ட் 30ஆம் தேதி “சாஹோ” திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், ஜாக்கி ஸ்ரொப், நெய்ல் நிதின் முகேஷ், அருண் விஜய், லால், முரளி ஷர்மா, வெண்ணீலா கிஷோர், பிரகாஷ் பெலாவாடி, எவெலின் ஷர்மா, சுப்ரீத் லால், சங்கி பாண்டே, மந்திரா பேடி, மகேஷ் மஞ்ச்ரேகர், டின்னு ஆனந்த் மாறும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கென்னி பாட்ஸ், பெங் ழங், திலிப் சுப்புராயன், ஸ்டன்ட் சில்வா, பாப் பிரவுன் மற்றும் ராம்-லக்ஷ்மன் இப்படத்தில் சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளனர். இப்படத்திற்கு மதி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிடிங் செய்துள்ளார். சாபு சீரில் தயாரிப்பு மேற்பார்வை பார்த்துள்ளார். RC கமலக்கண்ணன் விஷுவல் எபக்ட்ஸ் செய்துள்ளார். வைபாவி மெர்ச்சன்ட் மற்றும் ராஜு சுந்தரம் நடன இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்கு பின்னணி இசை அமைத்துள்ளார்.

இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் சுஜீத் அவர்கள். பிரம்மாண்டமான பொருட்செலவில் “சாஹோ” படத்தை UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்ஷி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர்.

More Articles
Follows