தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சில ஆண்டுகளுக்கு முன் சரத்குமார் மகள் & விஷால் மிகவும் நெருக்கமாக இருந்தனர். இதனையடுத்து விரைவில் இவர்களின் திருமணம் நடக்கும் என கோடம்பாக்கமே கூறி வந்தது.
ஆனால், திடீரென தெலுங்கு நடிகையும், தொழிலதிபரின் மகளுமான அனிஷாவைக் காதலிப்பதாக அறிவித்து அவருடன் கடந்த மார்ச் மாதம் நிச்சயத்தார்த்தமும் செய்துக் கொண்டார் விஷால்.
இவர்களின் திருமணத்திற்கு இன்னும் இரண்டு மாதமே உள்ள நிலையில், திடீரென இருதரப்பிலும் திருமண வேலைகளை நிறுத்தி உள்ளதாக தகவல்கள வந்த வண்ணம் உள்ளன.
மேலும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து நிச்சயதார்த்த புகைப்படங்களை அனீஷாவும் நீக்கியுள்ளதால் இது உறுதி என்கிறார்கள்.
ஆனால் என்ன காரணம்? என்பது இதுவரை தெரியவில்லை.
தன் திருமணத்தை பற்றி கேட்கும்போது எல்லாம் நடிகர் சங்கம் புதிய கட்டிடம் கட்டிய பிறகு அங்குதான் என் திருமணம் நடக்கும் என பல ஆண்டுகளாக கூறி வந்தார்.
ஆனால் தற்போது வரை நடிகர் சங்கம் கட்டிடம் கட்டி முடிக்கப்படவில்லை. எனவே இதுதான் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
இவையில்லாமல் அனிஷாவின் பெற்றோர் நடிகர் சங்க கட்டிடத்தில் திருமணத்தை நடக்க சம்மதம் அளிக்கவில்லை எனவும் ஒரு தகவல் வருகிறது.
நிஜமாகவே திருமணம் நின்றதா? என்பது குறித்து இரு தரப்பும் அறிவிக்கவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
சமீபத்தில் கன்னி ராசி பட பிரஸ் மீட்டில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என வரலட்சுமி கூறியதும் குறிப்பிடத்தக்கது.
Here is reason why Vishal and Anisha Call Off Wedding After Engagement