சிம்புவுடன் டூயட் பாடும் முன்பே ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியான சித்தி

சிம்புவுடன் டூயட் பாடும் முன்பே ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியான சித்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐசரி கணேஷ் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கி வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’.

இந்தப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த சித்தி இத்நானி நடித்து வருகிறார் என்ற செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.

தெலுங்கில் சில படங்களில் சித்தி இத்நானி நடித்திருக்கிறார்.

இவரை கௌதம் மேனன் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்கிறார் எனச் சொல்லப்பட்டது.

ஆனால் சிம்பு உடன் நடிப்பதற்கு முன்பே பிச்சைக்காரன் பட இயக்குனர் சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறாராம் சித்தி இத்நானி என தகவல் வந்துள்ளது.

Harish Kalyan and Siddhi Idnani joins for Director Sasi’s next flick

இலங்கை நாயகன்.. ஆந்திரா நாயகி.; திருக்குறள் கருத்தில் உருவான ‘அடங்காமை’ ஜனவரி 7-ல் ரிலீஸ்

இலங்கை நாயகன்.. ஆந்திரா நாயகி.; திருக்குறள் கருத்தில் உருவான ‘அடங்காமை’ ஜனவரி 7-ல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருக்குறள் கருத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அடங்காமை’ நாளை முதல்.

இப்படத்தை வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன் .புலேந்திரன்,ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரிக்கிறார்கள்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் ஆர் கோபால். இவர் ஏற்கனவே மங்களாபுரம் என்ற படத்தை இயக்கியவர்.

இலங்கையைச் சேர்ந்த சரோன் நாயகனாக நடித்து இருக்கிறார். ஆந்திராவை சேர்ந்த பிரபல மாடல் அழகி, பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் யாகவ் முரளி, கார்த்திக் கண்ணா, முகிலன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பி.ஜி.வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் இசை அமைக்கிறார்.

ஜனவரி 7 முதல்’அடங்காமை’ உலகமெங்கும் வெளியாகிறது.

“திருக்குறள் வாழ்வியல் நெறிகளை இரண்டே வரிகளில் கூறும் அற்புதமான நூல். அதிலும் குறிப்பாக ‘அடக்கமுடைமை’ அதிகாரத்தில் முதலில் வரும் ‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் ‘என்ற குறள் 100 பேருந்துகளில் 95 பேருந்துகளிலாவது இடம்பெற்றிருக்கும் .

ஏன் இந்த வாழ்வியல் சிந்தனை மட்டும் எல்லாவற்றிலும் இருக்கிறது என்பதை யோசித்த போது அதை வைத்து
ஒரு கதையை உருவாக்கினேன்.

அதுதான் இப்போது படமாக உருவாகியிருக்கிறது.

இப்படத்தை 7 முதல் முதல் தமிழகமெங்கும் வெளியிடுகிறோம். இது மக்களுக்குப் பிடித்த படமாக இருக்கும் “என்கிறார்

தயாரிப்பாளர்கள் பொன். புலேந்திரன்,மைக்கேல் ஜான்சன் இந்த படத்தயாரிப்பில் பங்கேற்று இருக்கிறார்கள்.

தமிழ்த் திரையுலகின் மீது அபிமானமும் ஆர்வமும் கொண்ட , இவர்கள் இப்படத்தினைத் தொடர்ந்து மேலும் படத் தயாரிப்பில் ஈடுபட இருக்கிறார்கள்.

திருக்குறளை மையமாக வைத்து உருவாகும் இத் திரைப்படம் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகிறார்கள் புலேந்திரன்,மைக்கேல் ஜான்சன் இருவரும்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு P.G. வெற்றி, பாடல் இசை கியூரன் மென்டிசன்., திரை இசை M.S ஸ்ரீகாந்த், எடிட்டிங் துரைராஜ், பாடல்கள் ஏ.இரமணிகாந்தன், கெறால்ட் மென்டிசன், நடனம் சீதாபதிராம். கபில் ஷாம் ஜெனோசன் ராஜேஸ்வர்சண்டைக்காட்சிகள் முரளி, வசனம் ஏ.பி.சிவா.

மூன் மீடியா சார்பில் தமிழகமெங்கும் ஜனவரி 7 முதல் நாளை வெளியிடுகிறார்கள்.

Thirukkural concept based film Adangaamai will release on Jan 7th

‘நட்சத்திரம் நகர்கிறது’ நிறைவு..; மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ‘டான்ஸிங் ரோஸ்’

‘நட்சத்திரம் நகர்கிறது’ நிறைவு..; மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ‘டான்ஸிங் ரோஸ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காலா படத்தை தொடர்ந்து ரஞ்சித் இயக்கிய ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் ஓடிடியில் வெளியானது.

ஆர்யா நடித்திருந்த இந்த படம் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது.

தற்போது ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கி வந்தார் ரஞ்சித்.

இதில் காளிதாஸ் ஜெயராமன், துஷாரா, கலையரசன், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர்.

சார்பட்டா பரம்பரை பட ‘டான்ஸிங் ரோஸ்’ ஆக நடித்த ஷபீர் கல்லரக்கல் முக்கிய வேடத்தல் நடித்துள்ளார்.

அறிமுக இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது.

படப்பிடிப்பு நிறைவு பெற்றதை அடுத்து ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்த படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஸ்டூடீயோ க்ரீன் தயாரிப்பில் விக்ரம் நடிக்கவுள்ள படத்தை அடுத்து ரஞ்சித் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dancing rose is part of Pa Ranjith’s next

‘மாநாடு’ இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன் – ராஷ்மிகா

‘மாநாடு’ இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன் – ராஷ்மிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் 20வது படமாக உருவாகும் படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கவுள்ளார். இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார் எனத் தெரிகிறது.

இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் பட சூட்டிங் தள்ளிப் போகலாம்.

இந்த நிலையில் இதில் மாநாடு இயக்குனர் வெங்கட் பிரபு இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ள நிலையில் இதன் தமிழ் பதிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இணைகிறாராம்.

எனவே இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Sivakarthikeyan and Rashmika joins for Venkat Prabhu’s next

விக்ரமின் ‘கோப்ரா’ பட சூப்பர் அப்டேட் கொடுத்த அஜய் ஞானமுத்து

விக்ரமின் ‘கோப்ரா’ பட சூப்பர் அப்டேட் கொடுத்த அஜய் ஞானமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் நடிப்பில் பெரும் பொருட்செலவில் அஜய் ஞானமுத்து இயக்கி வரும் படம் ‘கோப்ரா’.

இந்த படத்தில் பல கெட்டப்களில் நடித்துள்ளார் விக்ரம்.

ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கொரோனா முதல் அலை சமயத்தில் இப்பட சூட்டிங்கை ரஷ்யாவில் நடந்தி வந்தனர்.

ரஷ்யாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் திடீரென இந்தியா திரும்பினர்.

பின்னர் சென்னையில் உள்ள காட்சிகளை படமாக்கினர்.

இந்த நிலையில் நேற்று ஜனவரி 5ஆம் தேதி கோப்ரா பட சூட்டிங் நிறைவடைந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது போஸ்ட் புரொடக்சன்கள் பணிகள் தொடங்கியுள்ளதாம்.

Chiyaan Vikram wraps up his shoot for #Cobra says director by Ajay Gnanamuthu

2022ல் என் பர்ஸ்ட் கெஸ்ட் கொரோனா..; அருண்விஜய்யை அடுத்து மீனாவுக்கும் பாசிட்டிவ்

2022ல் என் பர்ஸ்ட் கெஸ்ட் கொரோனா..; அருண்விஜய்யை அடுத்து மீனாவுக்கும் பாசிட்டிவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று ஜனவரி 5ஆம் தேதி தனக்கு கொரோனா தொற்று உறுதியானதாக நடிகர் அருண்விஜய் தன் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது…

‘எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவரின் அறிவுரைப்படி அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி என் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரது அன்புக்கும் நன்றி’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது நடிகை மீனாவும் அவரது குடும்பத்தினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மீனா.

அவரது பதிவில்…

“2022ஆம் ஆண்டில் என் வீட்டுக்கு வந்த முதல் விருந்தாளி, மிஸ்டர் கரோனா. என் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் அதற்குப் பிடித்துவிட்டது. ஆனால், நான் அதை என் வீட்டில் தங்கிட அனுமதிக்க மாட்டேன். கவனமாக இருக்கவும் மக்களே. பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள்” என்று மீனா பதிவிட்டுள்ளார்.

நடிகை மீனாவின் மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக தெறி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Meena and Actor Arun Vijay Tested Covid Positive

More Articles
Follows