தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முனைவர் கா. வெ. சே மருது மோகன் எழுதிய “சிவாஜி கணேசன்” என்னும் நூல்
வெளியீட்டு விழா இன்று டிசம்பர் 18ல் நடைபெற்றது.
இதற்கான விழா சென்னை சேத்துப்பட்டு சின்மயா ஹெரிட்டேஜ்ஜில் நடைபெற்றது.
சிவாஜி பெருமைகளை சொல்லும் இந்த புத்தகம் 1600 பக்கங்களை கொண்டது.
இந்த புத்தகத்தை இயக்குநர்
பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோர் முன்னிலையில் இசையமைப்பாளர் இளையராஜா இந்த நிகழ்வில் வெளியிட்டார்.
சிவாஜி பற்றி உருக்கமாக இளையராஜா பேசினார். அவர் பேசியதாவது…
“தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவாஜி ரசிகர்களை உட்கார வைத்து ஒருநாள் முழுவதும் சிவாஜியை பற்றி பேச
வேண்டும் என்பது எனது ஆசை.
சிவாஜியிடம் இருந்து எல்லாரும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அதில் ஒன்று நேரம் தவறாமை.
அவருடன் பேசுவதற்கு, உறவாடுவதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
நாங்கள் வியர்ந்து பார்த்த மனிதர் சிவாஜி. என்னை செல்லமாக ராசா என்றுமான் அழைப்பார்.
அவர் பிரசாத் ஸ்டூடியோவுக்குள் வரும் போது..’உள்ளே வரலாமா.?’ என என்னிடம் சிவாஜி அனுமதி கேட்டார். எனக்கு அப்போது கண்ணீரே வந்து விட்டது.
தேவர் மகன் பாடல் ரெக்கார்டிங்கின்போது, நான் அவருடன் போட்டோ எடுக்க ஆசைப்பட்டேன். அப்போது எனக்கு அவர் முத்தம் கொடுத்தார்.
பத்மினிக்கு கூட இப்படி முத்தம் கொடுத்திருக்க மாட்டார் சிவாஜி என ஒருமுறை கவிஞர் வாலி சொன்னார். அந்த போட்டோ என்னிடம் பத்திரமாக உள்ளது.
ஒருநாள்.. சிவாஜிக்கு மரியாதை செய்ய வேண்டும் என என்னிடம் நிதிக்காக வந்தார் இயக்குநர் எஸ்.பி முத்துராமன்.
குதிரையில் சிவாஜி இருப்பது
போல் ஒரு வெள்ளி சிலையை அவருக்கு பரிசாக கொடுக்க வேண்டும் என்றார்.
அந்த பணம் முழுவதையும் நான் கொடுத்து விடுகிறேன் என்றேன். நான் சுயதம்பட்டம் அடிப்பதற்காக சொல்லவில்லை.
அவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அரசும் திரை உலகமும் எதுவும் செய்யவில்லை.
தனிப்பட்ட முறையில் இளையராஜா நான் தான் செய்தேன்” என்று பேசினார் இளையராஜா.
இந்த விழாவில் இளையராஜா, பாரதிராஜா, ராம்குமார், பிரபு விக்ரம் பிரபு, கவிஞர் முத்துலிங்கம், பாக்யராஜ், பி வாசு உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.