தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திருச்சி மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் தற்போது நடிப்புலகில் பிஸியாகிவிட்டதால், சென்னையிலேயே புதிய வீட்டை கட்டி செட்டிலாகிவிட்டார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் திருச்சி வீட்டின் அருகில் வசித்து வந்த ஆறுமுகம் என்பவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.
கல்குவாரி அருகே ஆறுமுகத்தின் சடலத்தை போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மீட்டுள்ளனர்.
இதுகுறித்த விசாரணையில் சடலமாக கிடந்தவர் சிவகார்த்திகேயன் வீட்டில் தோட்ட வேலை செய்து வந்தவர் என்ற தகவல் வந்துள்ளது.
மேலும் இதுபற்றிய விசாரணையில் தீவிரமாக இறங்கியுள்ளனர் போலீசார்.