தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஓரிரு தினங்களுக்கு முன், மலேசியா பிரதமர் நஜிம் ரசாக் சென்னை வந்திருந்தார்.
பிரதமரை சந்தித்தபின் பத்திரிகையாளர்களை சந்தித்தார் ரஜினி.
அப்போது ஏப்ரல் 2ஆம் தேதி தன் ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளதை உறுதி செய்தார்.
இந்நிலையில் இன்று கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஒன்று கூடினர்.
அக்கூட்டத்தில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி ரசிகர்கள் ஏப்ரல் 12ஆம் தேதி முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை ரஜினியை சந்திக்க உள்ளது பற்றியும், எந்தெந்த தேதிகளில் சந்திப்பது குறித்து ஆலோசித்தனர்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ரஜினியும் வருவார் என சில தகவல்கள் வந்ததை அடுத்து, நூற்றுக்கணக்கான ரசிகர்கள், மண்டபத்தின் முன்பு கூடினர்.
தலைவா, அரசியலுக்கு வா என்று அவர்கள் கோஷம்மிட்ட படி இருந்தனர்.
ஆனால் இறுதிவரை அங்கு ரஜினி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Fans requesting Rajinikanth to enter in politics