நாயகியின் உயிரை காப்பாற்ற நாயகனுடன் கை கோர்க்கும் ‘டெடி’

நாயகியின் உயிரை காப்பாற்ற நாயகனுடன் கை கோர்க்கும் ‘டெடி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Teddy (1)தமிழ் சினிமாவில் சிறந்த மற்றும் புதுமையான திரைப்படங்களை இயக்கிவரும் இயக்குநர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் “டெடி” . டிஸ்னி + ஹாட்ஸ்டார் மல்டிப்ளெக்ஸ் தளத்தில் ப்ரத்யேகமாக வெளியாகும் தமிழ் மொழி திரைப்படமாகும்.

“டெடி” டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாதாரர்களுக்காக பிரத்தியேகமாக மார்ச் 12, 2021 அன்று வெளியிடப்படுகிறது.

‘டெடி’ படத்தின் விறுவிறுப்பான ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், “டெடி” படத்திலிருந்து முதல் தனிப்பாடலாக ‘என் இனிய தனிமையே’ பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர் ஆர்யா நடித்திருக்கும் இந்த பாடல் உங்கள் தனிமையை போக்கும் விருந்தாக இருக்கும். தனிமையின் எதார்த்தத்தை கூறும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது. இசையமைப்பாளர் டி.இமான் அவர்களின் வியக்க வைக்கும் இசையில், சித் ஸ்ரீராம் தனது அழகான குரலில் இப்பாடலை பாடியுள்ளார்.

இப்பாடலின் மயக்கும் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

‘டெடி’ படத்தில் நிஜத்தில் காதல் தம்பதிகளாக உலா வரும் ஆர்யா மற்றும் சயீஷா நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். அவர்களுடைய காதலின் எழில்மிகு தருணங்கள் அட்டகாசமான வகையில் திரையிலும் உயிர்பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவின் மிக சிறந்த இயக்குநர்களில் ஒருவரான சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் K.E.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் “டெடி” படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபியில் பிரத்தியேகமாக மார்ச் 12, 2021 அன்று வெளியிடப்படுகிறது.

பாடலைப் பற்றி இசையமைப்பாளர் டி இமான் கூறியதாவது…

” என் இனிய தனிமையே” பாடல் மாடர்ன் உலகின் பாடல். இளைஞர்களின் இதயதுடிப்பை பிரதிபலிக்கும் அழகான பாடல். மதன் கார்க்கி எழுதிய அழகான பாடல் வரிகளை, சித் ஸ்ரீராம் அற்புதமாக பாடியுள்ளார். இளைஞர்கள் விரும்பும் நட்சத்திர நடிகர் ஆர்யா நடித்திருப்பதால், “டெடி” பார்வையாளர்களால் விரும்பப்படுவது உறுதி என்றார்.

பாடல் குறித்து நடிகர் ஆர்யா கூறியதாவது…,

” என் இனிய தனிமையே” ஒரு அருமையான பாடல், குறிப்பாக தனிமையை நேசிக்கும், தன்னை நேசிக்கும், தற்காலத்திய சிங்கிள் உலகத்தினருக்கான பாடல். இசையமைப்பாளர் டி. இமான், “டெடி” படத்திற்கு வெகு சிறப்பான இசையை வழங்கியுள்ளார்.

இப்பாடல் ரசிகர்களை மயக்கும் அதே நேரத்தில் உத்வேகம் தரும் ஆற்றலும் கொண்டுள்ளது. என்னைப் போலவே ரசிகர்களும் பாடலையும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். ” என்றார்.

கதை சுருக்கம்:

ஸ்ரீ வித்யா ஒரு இளம் மாணவி, கல்லூரி சுற்றுல்லா பயணத்தின் போது துரதிர்ஷ்டவசமான விபத்தை சந்தித்து ஒரு மருத்துவமனையில் தனியாக இருக்கிறார்.

இந்த மருத்துவமனையின் பணிபுரியும் சில கெட்ட குணம் கொண்ட மருத்துவர்கள், உதவியற்று, தனியாக இருக்கும் அவரை, மருத்துவ பலன்களுக்கு பயன்படுத்திக் கொள்ள, மருத்துவ ரீதியாக தூண்டப்பட்ட கோமாவில் வைக்கின்றனர்.

கரடி பொம்மையாக வாழும் பேச்சுதிறன் கொண்ட “டெடி” ஸ்ரீ வித்யாவின் அவல நிலையை அறிந்ததும், அவரது உயிரைக் காப்பாற்றத் தீர்மானிக்கிறது.

ஆனால் அது தனியாக இதைச் செய்ய முடியாது என்பதை அறியும். ஒரு நாள், சிவா என்ற பலசாலி இளைஞன், ஒரு பெண்ணைக் காப்பாற்றுவதை “டெடி” காண்கிறது.

மேலும் ஶ்ரீ வித்யா விசயத்தில் அவனது உதவியை நாட முடிவு செய்கிறது. டெடி சிவாவிடம் முழு கதையையும் சொல்கிறது, இருவரும் ஸ்ரீ வித்யாவைக் காப்பாற்றும் ஒரே நோக்கத்துடன் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்குச் செல்கின்றனர். பின்னர் நடக்கும் சாகசங்களே படம்.

ஆர்யா-சயீஷா நடிப்பில் ஃபேண்டஸி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள ‘டெடி’ படத்தின் உலகளாவிய பிரீமியரை அனைவரும் கண்டுகளியுங்கள்.

இப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் வி.ஐ.பி மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாதாரர்களுக்காக பிரத்தியேகமாக 12 மார்ச் 2021 அன்று வெளியிடப்படுகிறது.

Everything you need to know about Teddy

கௌதம் & சேரன் இணையும் படத்திற்கு அழகான பெயர் வைத்த நந்தா பெரியசாமி

கௌதம் & சேரன் இணையும் படத்திற்கு அழகான பெயர் வைத்த நந்தா பெரியசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் கார்த்திக், சேரன், சிங்கம் புலி, சரவணன், சிநேகன், விக்னேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தை நந்தா பெரியசாமி இயக்கி வருகிறார்.

நாயகியாக சிவாத்மிகா நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை ரங்கநாதன் தயாரித்து வருகிறார்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக பொர்ரா பாலபரணி, இசையமைப்பாளராக சித்துகுமார், கலை இயக்குநராக சகு, எடிட்டராக ஆர்.பி.ஸ்ரீகாந்த் ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்துக்கு ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ எனப் பெயரிட்டு, பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

ஒரே கட்டமாக இப்பட படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாம் படக்குழு.

Gautham Karthik’s next film title is revealed

‘சூரரைப் போற்று’ அபர்ணாவின் அடுத்த பட ரிலீஸ் அப்டேட்

‘சூரரைப் போற்று’ அபர்ணாவின் அடுத்த பட ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘யாத்திரை தொடரும்’ என்ற மலையாள படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் அபர்ணா பாலமுரளி.

2016-ம் ஆண்டில் வெளியான “மகேஷிண்டே ப்ரதிகாரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.

தமிழில் சர்வம் தாள மையம் என்ற படத்தை அடுத்து சூர்யாவுடன் இவர் நடித்த ‘சூரரைப் போற்று’ படம் மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்தது.

தற்போது அபர்ணா பாலமுரளி ‘தீதும் நன்றும்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.

ஆக்ஷன் த்ரில்லரான இந்த படத்தை ராசு ரஞ்சித் இயக்க சத்யா இசையமைத்துள்ளார். கெவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் நடிகை லிஜோ மோல் ஜோஸும் என்பவரும் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

நாளை மார்ச் 2ல் ‘வாழையடி வாழையா’ என்ற பாடல் வெளியாகவுள்ளது.

இந்த படம் மார்ச் 12ல் ரிலீசாகிறது என அறிவித்துள்ளனர்.

Actress Aparna Bala Murali next film is ready for release

வில்லன் நடிகரை தெறிக்க விடும் ‘சரவணா ஸ்டோர்ஸ்’ லெஜண்ட் சரவணன்..; பாத்தா நீங்களே அசந்துடுவீங்க

வில்லன் நடிகரை தெறிக்க விடும் ‘சரவணா ஸ்டோர்ஸ்’ லெஜண்ட் சரவணன்..; பாத்தா நீங்களே அசந்துடுவீங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையின் அடையாளங்களில் ஒன்று
‘சரவணா ஸ்டோர்ஸ்’.

இந்த நிறுவன விளம்பரங்களில் விதவிதமாக நடித்து மக்களை வியக்க வைத்தவர் சரவணன்.

இவர் தற்போது திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

பெயரிடப்படாத இப்படம் பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது.

ஜேடி ஜெர்ரி இயக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கீத்திகா திவாரி நாயகியாக நடிக்கிறார்.

ஏற்கெனவே, பாடல் காட்சிகளுக்கே சில பல கோடி செலவு செய்து படமாக்கியதாக.

கொரோனா தொற்று பரவல் காரணமாக இதன் சூட்டிங் நிறுத்தப்பட்டது.

தற்போது மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளனர்.

ஓர் ஆக்ஷன் காட்சியில் வில்லன் நடிகர் பெசன்ட் நகர் ரவியை அவர் தெறிக்க விடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Saravana Stores Saravanan Arul is in full form

Legend Saravanan (2)

அன்பிற்கினியாளும் அருண் பாண்டியனும்..; 18 ஆண்டுகளுக்கு பிறகு தன் மகளுக்காக ரீ-என்ட்ரீ.!

அன்பிற்கினியாளும் அருண் பாண்டியனும்..; 18 ஆண்டுகளுக்கு பிறகு தன் மகளுக்காக ரீ-என்ட்ரீ.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அருண்பாண்டியன் தயாரிப்பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கி இருக்கும் படம் ‘அன்பிற்கினியாள்’.

இப்படத்தில் அருண்பாண்டியன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார்.

இந்த மார்ச் மாதம் 5-ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் இன்று பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது.

திரையிடல் நிறைவடைந்த பின் படக்குழுவினர் பேசினார்கள்..

நடிகர் அருண்பாண்டியன் பேசும்போது,

“அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம். அன்பிற்கினியாள் படம் உங்களுக்குப் பிடித்திருக்கும் என உறுதியாக நம்புகிறேன். இந்தப்படத்தை நாங்கள் சீக்கிரமாகவே முடித்துவிட்டோம். கொரோனா காரணமாக ரிலீஸ் பண்ண தாமதம்.

நான் 18 ஆண்டுகளுக்குப் பின் இந்தப்படத்தில் நடித்துள்ளேன். என் மகளோடு நடித்தது நல்ல அனுபவம். எனக்குள் ஒரு நடிகன் இருக்கிறான் என்ற நம்பிக்கையை இந்தப்படம் ஏற்படுத்தியுள்ளது. இந்தப்படத்திற்கு உயிர் கொடுத்தவர் மியூசிக் டைரக்டர் ஜாவித்.

மிக சிறப்பாக உழைத்துள்ளார். இந்தப்படத்தில் வாழ்ந்தது போன்ற ஓர் உணர்வு. இந்தப்படத்தின் கேரக்டர் போல கிடைத்தால் தொடர்ந்து நிச்சயமாக நடிப்பேன். ஒரு நல்லபடத்தை எடுத்துள்ளோம்.

படத்திற்கு மக்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்

இயக்குநர் கோகுல் பேசியதாவது,

“இந்தப்படம் எனக்கு ஒரு புது ஜானராக இருக்கும் என நினைத்து செய்தேன். அருண்பாண்டியன் சார் இந்தப்படத்தின் மலையாள வெர்சனை காண்பித்து டயலாக் எழுதச் சொன்னார். படம் பார்த்து முடித்ததும் எனக்கு பிடித்துப்போனதால் .

நான் அருண்பாண்டியன் சாரிடம் படத்தை நானே செய்கிறேன் என்று வாய்ப்பைக் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். கீர்த்தி பாண்டியன் இந்தப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவரின் நடிப்பு இந்தப்படத்தைத் தூக்கிப்பிடித்திருக்கிறது.

எங்களுக்கு இந்தப்படம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை. ஸ்பாட்டிலே அவர் நிறையமுறை கைத்தட்டல் வாங்கினார். அருண்பாண்டியன் சார் மிக சிறப்பான உழைப்பைக் கொடுத்து நடித்தார்.

ஜாவித் நான் வேலை செய்த இசை அமைப்பாளர்களிலே ஒன் ஆப் த பெஸ்ட் இசை அமைப்பாளர். இந்தப்படத்தில் பின்னணி இசை மற்றும் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கின்றன.

படத்தில் எல்லாப்பாடல்களையும் லலித் ஆனந்த் நன்றாக எழுதியிருக்கிறார். மீடியா எப்போதும் நல்லபடங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தவறியதே இல்லை. இந்தப்படத்தையும் மக்களிடம் மீடியா சரியாக கொண்டு சேர்க்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி ” என்றார்

சக்தி பிலிம்பேக்டரி சக்திவேலன் பேசியதாவது,

“நல்ல படங்களுக்கு ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருகிறார்கள் என்றால் அதற்கான காரணம் மீடியா தான். உங்களின் எழுத்தின் மூலமாக இந்தப்படத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்

நடிகை கீர்த்தி பாண்டியன் பேசியதாவது…

“இந்தப்படத்தை மிக அன்போடு எடுத்திருக்கோம். இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக்கில் இருந்து எங்களுக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வரும் அனைவருக்கும் நன்றி.

மேலும் படம் ப்ரீசரில் ஷுட் பண்ணும் போது நிறைய சவால்களைச் சந்தித்தோம். அதற்கான நல்ல ரிசல்ட்டை மக்கள் கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.

நடிகர் பிரவின் பேசியதாவது,

“எனக்கு இந்தப்படம் தான் என் கரியரின் ஆரம்பம். எனக்கு வாய்ப்பளித்த அருண்பாண்டியன் சாருக்கும் கோகுல் சாருக்கும் மிக்க நன்றி. படத்தை நல்லபடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

கீர்த்தி பாண்டியன் படத்தில் மிக சிறப்பாக நடித்துள்ளார். அனைவருக்கும் நன்றி” என்றார்

இசை அமைப்பாளர் ஜாவித் பேசியதாவது,

“இந்தப்படத்தில் நான் நன்றாக வேலை செய்துள்ளாக சொன்னார்கள். அதற்கான காரணம் அருண்பாண்டியன் சாரும் கோகுல் சாரும் கொடுத்த சுதந்திரமும் நம்பிக்கையும் தான். இந்தப்படத்தில் வேலை செய்ததை பெரும் கிப்டாக நினைக்கிறேன். இந்தப்படத்திற்கு நல்ல ஆதரவை தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Arun Pandiyan emotional speech at Anbirkiniyal press meet

திருமணம் செய்வதாக ஆசை காட்டி 70 லட்சம் வாங்கியதாக ஆர்யா மீது பெண் புகார்

திருமணம் செய்வதாக ஆசை காட்டி 70 லட்சம் வாங்கியதாக ஆர்யா மீது பெண் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arya (2)‘கஜினிகாந்த்’ என்ற படத்தில் நடித்த போது தனக்கு ஜோடியாக நடித்த சாயிஷாவை காதலித்து திருமணம் (2019) செய்துக் கொண்டார் ஆர்யா.

இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த விட்ஜா என்ற பெண், ஆர்யா தன்னை திருமணம் செய்துக் கொள்வதாகவும் தன்னிடம் 70 லட்சம் ரூபாய் பணமும் பெற்றுக் கொண்டு ஏமாற்றினார் எனவும் புகார் தெரிவித்துள்ளார்.

தற்போது, ஜெர்மன் நாட்டு குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறாராம் விட்ஜா.

இந்த பெண் பிரதமர் & குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைனில் ஆர்யா மீது அளித்துள்ள புகாரில்…

“பணத்திற்கு கஷ்டப்படுவதாக ஆர்யா கூறி தன்னிடம் பணம் பெற்றதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்” எனவும் ஆர்யா கூறியதாக தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா மீது, பெண் ஒருவர் மோசடி புகார் அளித்திருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actor Arya faces money fraud complaint from srilankarn girl

More Articles
Follows