தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று ஏப்ரல் 1…. தமிழக தேர்தல் நேரத்திலும் மிகவும் பரபரப்பாக பேசப்படும் பொருளாக மாறியுள்ளது தாதா சாகேப் பால்கே விருது.. இதற்கு முக்கிய காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அவருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அந்த விருதின் வரலாறு குறித்த பார்வை இதோ…
தாதா சாகேப் பால்கே விருது..: இந்திய சினிமா துறையில் பெரும் சாதனை படைக்கிறவர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது இது.
இந்திய சினிமாவின் தந்தை என்று கருதப்படும் தண்டிராஜ் கோவிந்த பால்கேவின் பெயரில் வழங்கப்படுகிறது.
இந்தியாவின் முதல் முழுநீள சினிமாவாகக் கருதப்படும் ராஜா ஹரிச்சந்திராவை 1913 ஆண்டில் இயக்கி தயாரித்தார் இவர்.
அதற்கு முன்பு வரை திரைப்படங்கள் ஊமைப்படங்களாகவே இருந்தது.
அதை மாற்றிக் காட்டி தனது ‘ராஜா அரிச்சந்திரா’ திரைப்படம் மூலம் மாற்றத்தை தொடங்கியவர் தான் தாதா சாகேப்.
எனவே அவரது பெயரிலேயே சிறந்த கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்பட்டு வருகிறது.
1969ஆம் ஆண்டில் இந்திய சினிமாவின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் மிகப் பெரும் பங்களித்தவர்களை கௌரவப்படுத்தும் விதத்தில் இந்த விருதை அறிமுகப்படுத்தியது இந்திய அரசு.
முதன்முதலாக இந்த விருது இந்திய சினிமாவின் முதல் பெண் என்று கருதப்படும் தேவிகா ராணிக்கு வழங்கப்பட்டது.
அவருக்குப் பிறகு பிருத்விராஜ் கபூர், நௌஷத், எல்.வி. பிரசாத், சத்யஜித் ரே, வி. சாந்தாராம், நாகி ரெட்டி, ராஜ் கபூர், லதா மங்கேஷ்கர், நாகேஸ்வரராவ், திலீப் குமார், ராஜ்குமார், சிவாஜி கணேசன், ஆஷா போஸ்லே, யாஷ் சோப்ரா, தேவ் ஆனந்த், மிருணாள் சென், ஷ்யாம் பெனகல், அடூர் கோபாலகிருஷ்ணன், கே. பாலச்சந்தர், குல்ஸார், கே. விஸ்வநாத், அமிதாப் பச்சன் உள்ளிட்டோருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது 2021 மே 3ஆம் தேதி ரஜினிகாந்த் இந்த விருதை பெறவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்கள் தலைவா….
Everything you need to know about #DadasahebPhalkeAward