தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நல குறைவால் அவதிப்பட்டு வருகிறார் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்.
தனது பிறந்த நாளில் அவர் ரசிகர்களையும் தொண்டர்களையும் சந்திப்பது வழக்கம்.
அப்படி சந்திக்கும்போதெல்லாம் விஜயகாந்த் வீல் சேரில் வருவதும் அவர் அமர்ந்திருப்பதையும் பார்த்து ரசிகர்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
எங்களால் எங்கள் கேப்டனை இப்படி பார்க்க முடியவில்லை என பலரும் சொல்வதை நாம் பார்த்து இருக்கிறோம்.
இந்த நிலையில் இன்று டிசம்பர் 14ஆம் தேதி தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றார்.்அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதை அவரைப் பார்த்தாலே தெரிகிறது.
இந்த கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் ஆனார்.
சென்னையில் இன்று நடைபெற்ற தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் தேர்வானார். முன்னதாக இந்த பதவியில் விஜயகாந்த் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இயக்குனர் பாண்டியராஜ் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இந்த புகைப்படங்களை பார்த்து ஒரு பதிவிட்டுள்ளார்.. அந்த பதிவில்…
“விஜயகாந்துக்கு தற்போது முழு ஓய்வு தேவை.. அவரை இப்படி எல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள்.. நாங்கள் நேசித்த ஒரு நல்ல மனிதரை இப்படி பார்க்க முடியவில்லை” எனப் பதிவிட்டுள்ளார்.
Dont bring Vijayakanth like this says Pandiraj