தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
2021 சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தையை நடத்தியது தேமுதிக.
தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்துவிட்டது அதிமுக.
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் இன்று (மார்ச் 09) தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கட்சி தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவைத் தலைவர் இளங்கோவன், துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இதில், அதிமுக ஒதுக்கும் தொகுதிகளை ஏற்பதா, வேண்டாமா,? என்பது குறித்து விஜயகாந்த் ஆலோசனை நடத்தி உள்ளார்.
அப்போது கட்சித் தலைவர் விஜயகாந்த் எடுக்கும் முடிவை ஏற்போம் என, மாவட்டச் செயலாளர்கள் ஒருமனதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிக்கு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக, விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில்…
“நடைபெறவுள்ள 2021 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்தின் அடிப்படையில் இன்றிலிருந்து 09.03.2021 அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலையும், 2019 மக்களவைத் தேர்தலையும் அதிமுக கூட்டணியில் இருந்து எதிர்கொண்டது தேமுதிக.
தற்போது அங்கிருந்து விலகியுள்ள நிலையில், இந்தத் தேர்தலில் அக்கட்சி தனித்துப் போட்டியிடுமா? அல்லது வேறு கட்சி கூட்டணியில் இணையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
DMDK walks out of AIADMK-led alliance for Tamil Nadu elections