தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் & எஸ்ஜே. சூர்யா நடித்து வெளியான படம் ‘மாநாடு’.
இதில் எஸ்.ஏ.சி, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.
யுவன் இசையமைத்து இருந்தார்.
இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இப்பட நன்றி & வெற்றி விழா சென்னையில் இன்று (21.12.21) நடைபெற்றது.
இதில் எஸ்ஜே சூர்யா, வெங்கட் பிரபு, சுரேஷ் காமாட்சி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜீ, யுவன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் சிம்பு, கல்யாணி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
இதில் எஸ்ஏசி பேசியதாவது…
“இந்த படம் தமிழ் மக்களுக்கும் ஏற்ற வகையில் இருந்தது.
முதல்வர் கொல்லப்பட்டால் இஸ்லாமியருக்கு அவப்பெயர் ஏற்படும் என சொல்லப்பட்டது.
அதுபோல் வாரிசு அரசியல் பற்றி பேசப்பட்டது. (திமுகவை மறைமுகமாக கலாய்த்தார்)
மேலும் அவர் பேசியதாவது…
இது ஒரு உண்மையான வெற்றி. ஆனால், இப்பட நாயகன் இங்கு இல்லாதது ஏன் என எனக்குப் புரியல.
என்னதான் ஷூட்டிங் இருந்தாலும் இங்கே வந்திருக்க வேண்டும். இந்த மகிழ்ச்சியை நம்மோடு அவர் கொண்டாடியிருக்கனும். மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.
அவரை நம்பி தயாரிப்பாளர் எவ்வளவு முதலீடு செஞ்சிருக்கார். அப்படிப்பட்ட ஒரு வெற்றியைக் கொண்டாட இந்த ஹீரோ இங்கே இருக்கவேண்டும்.
சூட்டிங்கில் எப்படி இருந்தோமோ படத்தின் வெற்றிக்குப் பிறகும் அப்படியே இருக்கனும்.”
இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்
Director SAC speech at Maanaadu success meet