மீண்டும் மீண்டும் தனுஷை பாலிவுட் அழைக்கும் ஆனந்த் எல். ராய்

மீண்டும் மீண்டும் தனுஷை பாலிவுட் அழைக்கும் ஆனந்த் எல். ராய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட்டில் கலக்கிக் கொண்டிருந்த தனுஷை பாலிவுட் அழைத்து சென்றவர் டைரக்டர் ஆனந்த் எல். ராய்.

2013ஆம் ஆண்டு ஆனந்த் எல். ராய் இயக்கிய ராஞ்சனா படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார் தனுஷ்.

அதன்பின்னர் பால்கி இயக்கிய ஷமிதாப் என்ற படத்தில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்தார் தனுஷ்.

இதன் பின்னர் மீண்டும் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ‘அட்ரங்கி ரே’ என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். இந்த படம் அண்மையில் வெளியானது.

தற்போது மீண்டும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க தனுஷை அழைத்திருக்கிறாராம் ஆனந்த் எல். ராய்.

இவரே தயாரித்து இயக்கவுள்ள ஒரு த்ரில்லர் ஆக்ஷன் படத்தில் நடிக்க அழைப்ப விடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ், ஹிந்தியை தொடர்ந்து தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார் தனுஷ்.

தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கும் வாத்தி (சார்) என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

விரைவில் ஆயிரத்தில் ஒருவன் 2, வடசென்னை 2 ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.

இவையில்லாமல் தெலுங்கு இயக்குனர்கள் சுகுமார் மற்றும் சேகர் கம்முலா ஆகியோரது இயக்கங்களிலும் நடிக்கவும் தனுஷிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

Dhanush and Anand L Roy joins 3rd time

உனக்கு பிடிக்காது… அதான் செஞ்சேன்..; காதலனை கலாய்த்து வாழ்த்திய பிரியா பவானி சங்கர்

உனக்கு பிடிக்காது… அதான் செஞ்சேன்..; காதலனை கலாய்த்து வாழ்த்திய பிரியா பவானி சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் நாயகி யார் என்றால் அது பிரியா பவானி சங்கர் தான்.

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான பிளட் மணி, ஓ மணப்பெண்ணே இரண்டும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

தற்போது குருதி ஆட்டம், யானை, பொம்மை, ருத்ரன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களை கை வசம் வைத்திருக்கிறார்.

இவர் டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருக்கும்போதே ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார்.

இந்த நிலையில் காதலனின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில்… ‛‛நீ ஒரு மோசமான டீன்ஏஜ் பாய். ஆனால் இப்போ நல்ல மனிதராக மாறி விட்டாய். நான் அதிர்ஷ்டசாலி. எப்போதுமே புன்னகை, அன்பு, நட்பு, அமைதி,ஆரோக்கியம் என அனைத்தும் உனக்கு கிடைக்க வாழ்த்துக்கள்.

இந்த புகைப்படம் உனக்கு பிடிக்காது. அதனால் தான் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளேன்” என காதலனை கலாய்த்து பதிவிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.

Actress Priya Bhavani Shankar wishes to her boy friend

முன்னாள் உதவி இயக்குனரின் படத்தில் அறிமுகமாகும் ஷங்கர் மகன்

முன்னாள் உதவி இயக்குனரின் படத்தில் அறிமுகமாகும் ஷங்கர் மகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஷங்கருக்கு 2 மகள்கள்.. ஒரு மகன். ஒரு மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. 2வது மகள் அதிதி டாக்டருக்கு படித்திருக்கிறார். அதே சமயம் ‘விருமன்’ படத்தில் கார்த்திக்கு ஜோயாக நடித்து வருகிறார்.

தற்போது தனது மகனையும் ஷங்கர் சினிமாவில் நாயகனாக்க விரும்புகிறார் என்ற செய்தியை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

தற்போது ஷங்கர் தன் மகன் அர்ஜித்தை யாருடைய இயக்கத்தில் அறிமுகம் செய்ய போகிறார் என்ற தகவல்கள் கசிந்துள்ளன.

தனது முன்னாள் உதவி இயக்குனரின் இயக்கத்தில் தன் மகனை அறிமுகம் செய்யவிருக்கிறாராம்.

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் காதல் பார்ட் 2 படத்தில் அறிமுகம் செய்ய விரும்புவதாக கூறப்படுகிறது.

அதே சமயம் அட்லீயின் இயக்கத்தில் தன் அறிமுகம் இருந்தால் நன்றாக இருக்கும் என ஆசைப்படுகிறாராம் அர்ஜித்.

காதல் படத்தை தயாரித்தவர் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலாஜி சக்திவேல், அட்லீ ஆகிய இருவருமே ஷங்கரின் முன்னாள் உதவி இயக்குனர்கள் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Arjith Shankar to debut in his father’s associate direction

விஜய் வழக்கு.. கடுமையான நடவடிக்கை வேண்டாம்..; தமிழக அரசுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு

விஜய் வழக்கு.. கடுமையான நடவடிக்கை வேண்டாம்..; தமிழக அரசுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து சொகுசுகாரை இறக்குமதி செய்து இருந்தார் நடிகர் விஜய்.

அப்போது.. “வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரியாக ரூ.7.98 லட்சம் செலுத்த வேண்டும்” என வணிகவரித்துறை தெரிவித்தது.

ஆனால் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வரியை செலுத்தாத காரணத்தினால், விஜய்க்கு காரின் நுழைவு வரி மற்றும் அபராதத் தொகை என இரண்டும் சேர்த்து செலுத்தவேண்டும் என வணிகவரித்துறை உத்தரவு இட்டது.

இதனையடுத்து நுழைவுவரி தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால், வரி செலுத்த காலதாமானது என விஜய் தரப்பில் சொல்லப்பட்டது.

மேலும் அபராதத் தொகையை ரத்து செய்யவேண்டும் என்றும், விஜய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இத்துடன் அபராதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கவேண்டும் எனவும் விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கினை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

வரி அபராதத்தை வசூலிப்பது தொடர்பான எவ்வித கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளவேண்டாம் என்றும் தமிழக அரசுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது.

சில தினங்களுக்கு முன் இதே வழக்கில் தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறிய எதிர்மறையான கருத்துக்களை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

High court orders TN government in Vijay case

BREAKING இரவு & ஞாயிறு ஊரடங்கு ரத்து.; 1-12 நேரடி வகுப்புகள்.; தியேட்டர் & ஜிம்களில் 50%..; முழு விவரங்கள் இதோ.

BREAKING இரவு & ஞாயிறு ஊரடங்கு ரத்து.; 1-12 நேரடி வகுப்புகள்.; தியேட்டர் & ஜிம்களில் 50%..; முழு விவரங்கள் இதோ.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது முதல்வரிடம் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தலைமைச்செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர் முதல்வர் விடுத்த அறிக்கையில்..

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பிப்.1ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் 1-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.

தமிழ்நாடு முழுவதும் பிப்.1ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

கொரோனா தொற்று காரணமாக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்ட இரவு ஊரடங்கு நாளை (ஜன.28) முதல் விலக்கிக் கொள்ளப்படுகிறது. வரும் ஞாயிற்றுக் கிழமை (ஜன.30) முழு ஊரடங்கு கிடையாது.

துணிக்கடைகள் மற்றும் நகைக் கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி – தமிழக அரசு

திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு 100 பேரும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 50 பேரும் அனுமதி.

திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை விடுதிகளில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி.

தமிழகத்தில் அழகு நிலையங்கள், சலூன்கள், கேளிக்கை பூங்காக்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி.

#TNLockdown : Schools to reopen in TN from Feb 1st for class 1 to 12

ரெடியா மக்களே.?.; பிப்ரவரி 4 முதல் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ வரும் படக்குழு

ரெடியா மக்களே.?.; பிப்ரவரி 4 முதல் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ வரும் படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சூது கவ்வும்’ திரைப்படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க ப்ளாக் காமெடி ஜானரில், புதுமுகங்களின் உருவாக்கத்தில், அசத்தலான காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள படம் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’ திரைப்படம்.

Head Media works தயாரித்துள்ள, இப்படத்தை Studio Green சார்பில் KE ஞானவேல் ராஜா, ABI & ABI Pictures சார்பில் அபினேஷ் இளங்கோவன் மற்றும் இயக்குநர் நலன் குமாரசாமி இணைந்து வழங்குகிறார்கள்.

நிஷாந்த் & நக்கலைட்ஸ் செல்லா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள்..:

எழுத்து இயக்கம் – பாலா அரன்
ஒளிப்பதிவு – விக்னேஷ் செல்வராஜ்
இசை – சுரேன் விகாஷ்
படத்தொகுப்பு – ராம் சதீஷ்
கலை – சந்தோஷ்
ஒலிக்கலவை – சிவகுமார்
நடனம் – பாபு எரிக்
SFX – சேது
மக்கள் தொடர்பு – நிகில்

இப்படக்குழுவினர் செய்தியாளர்களை 2021 செப்டம்பரில் சந்தித்த போது…

“இந்தப்படக்குழுவினர் இணைந்து இன்னொரு படம் செய்ய வேண்டும், அதை இந்தப்படம் போல் மூன்று மடங்கு பட்ஜெட்டில் நான் தயாரிக்கிறேன் என்பதை இந்த மேடையில் நான் சொல்லிக்கொள்கிறேன்.” என பேசியிருந்தார் தயாரிப்பாளர் KE ஞானவேல் ராஜா.

“சில படங்கள் விமர்சகர்களுக்கு பிடிச்சா ரசிகர்களுக்கு பிடிக்காது.. ரசிகர்களுக்கு பிடிச்சா விமர்சகர்களுக்கு பிடிக்காது. ஆனா இந்தப்படம் விமர்சர்களுக்கும் ரசிகர்களுக்கும் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும். இனிவரும் தலைமுறைக்கு பேர் சொல்லும் படமாக “பன்றிக்கு நன்றி சொல்லி” படம் இருக்கும்” என பேசியிருந்தார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

இந்த நிலையில் இன்று இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

வருகிற பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி முதல் இப்படம் சோனி லைவில் ஒளிப்பரப்பாகவுள்ளது.

Pandrikku Nandri Solli release date announced

More Articles
Follows