தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கோலிவுட்டில் கலக்கிக் கொண்டிருந்த தனுஷை பாலிவுட் அழைத்து சென்றவர் டைரக்டர் ஆனந்த் எல். ராய்.
2013ஆம் ஆண்டு ஆனந்த் எல். ராய் இயக்கிய ராஞ்சனா படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார் தனுஷ்.
அதன்பின்னர் பால்கி இயக்கிய ஷமிதாப் என்ற படத்தில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்தார் தனுஷ்.
இதன் பின்னர் மீண்டும் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் ‘அட்ரங்கி ரே’ என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். இந்த படம் அண்மையில் வெளியானது.
தற்போது மீண்டும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க தனுஷை அழைத்திருக்கிறாராம் ஆனந்த் எல். ராய்.
இவரே தயாரித்து இயக்கவுள்ள ஒரு த்ரில்லர் ஆக்ஷன் படத்தில் நடிக்க அழைப்ப விடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ், ஹிந்தியை தொடர்ந்து தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார் தனுஷ்.
தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கும் வாத்தி (சார்) என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
விரைவில் ஆயிரத்தில் ஒருவன் 2, வடசென்னை 2 ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.
இவையில்லாமல் தெலுங்கு இயக்குனர்கள் சுகுமார் மற்றும் சேகர் கம்முலா ஆகியோரது இயக்கங்களிலும் நடிக்கவும் தனுஷிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.
Dhanush and Anand L Roy joins 3rd time