பொள்ளாச்சி பாலியல் கொடுமை: சித்தார்த்-ஜிவி.பிரகாஷ் கண்டனம்

பொள்ளாச்சி பாலியல் கொடுமை: சித்தார்த்-ஜிவி.பிரகாஷ் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (9)பொள்ளாச்சியில் பல இளம் பெண்களை ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளது.

அச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியானதை அடுத்து நாடெங்கிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

குற்றவாளிகளை தண்டிக்காமல் விடக்கூடாது என அனைத்து தரப்பிலும் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியியுள்ளன.

இந்நிலையில், நடிகர் சித்தார்த் தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

“பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை செய்தியால் அதிர்ச்சியடைந்தேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.

சமூக வலைத்தளங்களால் பெண்களை வேட்டையாடுவது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு எதிராக நாம் பாதுகாப்பு கொடுக்கவேண்டும்” என தெரிவித்துள்ளார் சித்தார்த்.

ஜிவி. பிரகாஷ் கூறியுள்ளதாவது…

“இந்தக் கொடிய அரக்கர்களை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். மிருகங்களினும் கேவலமான இந்த 4 பேரும் பெண்களை சித்ரவதை செய்து, பாலியல் கொடுமைப்படுத்திய வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது.

இவர்களைப் பொது வெளியில் நடமாட விடுவது சமூகத்திற்குப் பேராபத்து” என தெரிவித்துள்ளார்.

மீண்டும் சித்திரம் பேசுதடியாக “தாதா 87”

மீண்டும் சித்திரம் பேசுதடியாக “தாதா 87”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

charu hasanட்ரீம் பிரிட்ஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நரேன், பாவனா நடிப்பில். மிஷ்கின் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான படம் “சித்திரம் பேசுதடி”. இப்படம் முதலில் வெளியாகியாகிய போது நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தாலும் போதிய திரையரங்குகள் கிடைக்காததால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் மீண்டும் ஆஸ்கார் ரவிசந்திரன் இப்படத்தை வாங்கி ஆஸ்கார் பிலிம்ஸ் பேனரில் தமிழகமெங்கும் மறுவெளியீட்டில் படம் பெறும் வெற்றி அடைந்தது.

இன்றைய காலகட்டத்தில் படத்தின் மறுவெளியீடு என்பது இல்லாமல் போய்விட்டது.

கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி ஸ்ரீ பல்லவி நடிப்பில் உருவான “தாதா 87” திரைப்படம் மார்ச் 1 அன்று உலகெங்கும் வெளியானது.

தாதா 87 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தாலும் இத்திரைப்படம் தமிழகத்தில் முக்கியமான ஏரியாக்களில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரையிட முடியவில்லை.

இந்திய சினிமா வரலாற்றில் ஆண் பெண் வேடத்திலும், பெண் ஆண் வேடத்திலும் நடித்துள்ளனர், ஆனால் ஒரு பெண் திருநங்கை வேடத்தில் நடித்துள்ளது இதுவே முதல் முறை. ஸ்ரீ பல்லவியின் இந்த துணிச்சலான முடிவுக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

மேலும் இப்படத்தை பார்த்த மக்கள் கூறிய நிறை குறைகளை ஆராய்ந்து பல மாறுதல்களை செய்து புது பொலிவுடன் கோடை விடுமுறை கொண்டாட்டமாக வெளியாகவுள்ளது “தாதா 87”.

காதலை கவிதைத்துவமாக சொல்லப்பட்ட தாதா 87 படத்தில் தணிக்கை குழுவினர் 27 கட்டுகள் வைத்தும் படத்தின் தணித்தன்மையை மக்கள் புரிந்து கொண்டு கொண்டாடினர்.

ஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!

ஆரவ் நடித்த ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

raja bheema teamசரியான திட்டமிடலும், மிகச்சிறப்பான செயல்பாடும் ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. பாலக்காடு, பொள்ளாச்சி, தாய்லாந்து என பல இடங்களுக்கு பயணித்து படப்பிடிப்பு செய்தது ஒட்டுமொத்த குழுவுக்கும் மிகப்பெரிய சவாலான செயல்முறையாக இருந்தது. மொத்த படக்குழுவும் இப்போது படப்பிடிப்பை முடித்த திருப்தியில் இருக்கிறார்கள்.

“ஆம் உண்மையிலேயே பல்வேறு இடங்களில், குறிப்பாக அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பை நடத்தியது மிகப்பெரிய சவாலாக இருந்தது. சில விஷயங்களை காகிதங்களில் கதையில் எழுதும்போது நன்றாக இருக்கும், ஆனால் படப்பிடிப்பில் எதிர்பாராத அனுபவங்களை சந்தித்தது, தாண்ட முடியாத பெரிய தடையாக இருந்தது. குறிப்பாக, யானையுடன் நடித்த நாயகன் ஆரவ்விற்கு இது கடினமாக இருந்தது. அவர் படப்பிடிப்புக்கு முன்பே யானையுடன் நட்பாக இருந்த போதிலும், முற்றிலும் எதிர்பாராத விஷயங்கள் இருந்தது. காடுகளில் வழுக்கும் பாறைகள் மற்றும் தரைகள் இன்னொரு தடங்கலாக இருந்தது. இருப்பினும், படப்பிடிப்பை சிறப்பாக முடித்து விட்டு வந்திருப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்றார் இயக்குனர் நரேஷ் சம்பத்.

தயாரிப்பாளர் எஸ்.மோகன் கூறும்போது, “படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகளை உடனடியாக ஆரம்பித்து, செய்து கொண்டு இருக்கிறோம். கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

எஸ்.மோகன் தயாரித்திருக்கும் இந்த ராஜபீமா திரைப்படம் வணிக அம்சங்கள் கலந்த, மனித, விலங்கு முரணை பேசும் ஒரு படமாக உருவாகியிருக்கிறது. ஆஷிமா நர்வால் நாயகியாக நடித்திருக்கிறார். ஓவியா ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதோடு, ஆரவ் உடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் படத்திற்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் ஷபீர் !!

சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் படத்திற்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் ஷபீர் !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

music director shabirசிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் “தயாரிப்பு எண் 2” படத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துமே கோலிவுட்டில் பரபரப்பான அலைகளை உருவாக்குகிறது. குறிப்பாக, ‘பிளாக் ஷீப்’ மூலம் மிக பிரபலமான பொழுதுபோக்கு கலைஞர்களினால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. ஆனாலும், படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோரிடமும் இருந்து கொண்டே இருக்கிறது. நீண்ட காத்திருப்புக்கு விடையை அளித்துள்ளது படக்குழு. சமீபத்திய இசை சென்சேஷன் ஷபிர் இந்த படத்துக்கு இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

“ஷபிர் இசையமைத்த ஆல்பங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றியை பெற்றதால், குறுகிய காலத்திலேயே அவர் ஒரு சென்சேஷனாக மாறியிருக்கிறார். மிக குறுகிய காலத்தில் வெற்றி பாடல்களை வழங்கியிருக்கிறார் ஷபீர். மிகவும் குறிப்பிடத்தக்க வகையிலான தனித்துவமான பாடல்கள் மற்றும் பின்னணி இசையை வழங்கியது தான் ஷபீர் என்ற இசைக்கலைஞரை அனைவரையும் கவனிக்க வைத்திருக்கிறது. எங்கள் படத்திற்கு ஷபீர் இசையமைப்பது மகிழ்ச்சி. எங்களது உழைப்பை ஷபீரின் இசை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என் நம்புகிறோம் ” என்றார் இயக்குனர் கார்த்திக் வேணுகோபால்.

இசையமைப்பாளர் ஷபிர் கூறும்போது, “துடிப்பான இளைஞர்கள் உள்ள ஒரு குழுவில் இணைந்தது மகிழ்ச்சி. யூடியூபில் அவர்களது நகைச்சுவை நிகழ்ழ்சிகள் மூலை முடுக்கெல்லாம் பிரபலம். ஒரு புதுமையான அனுபவத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். குறிப்பாக, சிவகார்த்திகேயன் சார் பேனரில் பணிபுரியும் ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவே எனக்கு சிறந்த இசையை வழங்கும் மிகப்பெரிய பொறுப்பை கொடுத்திருக்கிறது” என்றார்.

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த ‘தயாரிப்பு எண் 2’ படத்தில் ரியோ ராஜ் மற்றும் ஷிரின் கஞ்ச்வாலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ராதாரவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் பல பிரபலமான யூடியூபர்கள் நடித்திருக்கிறார்கள்.

ரஜினிகாந்த்-விஜயகாந்த் பட பாணியில் ’ராட்சஷி’ ஜோதிகா

ரஜினிகாந்த்-விஜயகாந்த் பட பாணியில் ’ராட்சஷி’ ஜோதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jyothika next movie titled Ratchashi Directed by Raj36 வயதினிலே படத்திற்ல் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஜோதிகா அதிரடியாக படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான படம் காற்றின் மொழி.

இப்படத்தை தொடர்ந்து தற்போது எஸ்.ராஜ் என்பவர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

ட்ரீம் வாரியர் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்திற்கு ராட்சஷி என்ற தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதில் ஜோதிகாவுடன் பூர்ணிமா, சத்யன், ஹரிஷ் பெரடி, கவிதா பாரதி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இதில் ஸ்கூல் டீச்சராக நடிக்கிறாராம் ஜோதிகா.

இந்த ஸ்கூல் காட்சிகளுக்காக 50 லட்சம் ரூபாய் செலவில் பள்ளி செட் போடப்பட்டுள்ளதாம்.

பகலில் டீச்சராகவும் இரவில் குற்றங்களை தடுக்கும் பெண்ணாகவும் நடிக்கிறாராம் ஜோ.

நான் சிகப்பு மனிதன் படத்தில் ரஜினிகாந்த், ரமணா படத்தில் விஜயகாந்த் ஆகியோரது கேரக்டர்களும் இப்படிதான் இருந்தது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Jyothika next movie titled Ratchashi Directed by Raj

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கண்டு பொங்கிய ரஞ்சித்

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கண்டு பொங்கிய ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Ranjith condemns Pollachi rape caseபொள்ளாச்சியைச் சேர்ந்த பாலியல் மாஃபியா கும்பலின் செய்தியறிந்து நாடே உறைந்து போய் கிடக்கிறது. 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை துன்புறுத்தி வேட்டையாடி வந்த அந்த கயவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமென தமிழகம் முழுவதில் இருந்தும் போராட்டக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

மாதர் சங்கங்களும், முற்போக்கு இயக்கங்களும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றன.

இந்நிலையில் இயக்குநர் பா.இரஞ்சித் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் பதிவு செய்திருக்கும் டுவீட்டிலிருப்பதாவது,

“பொள்ளாச்சி போன்று ஒவ்வொரு முறை மனிதத்தை கேள்விகேட்கும் சம்பவங்கள் நடக்கும் போதும் பெண்களை பொறுப்புக் கோர சொல்லும், எச்சரிக்கையாக இருக்க சொல்லும் நம் அனைவருக்கும்..

நம் பாவம், பரிதவிப்பால், பிரச்சினை நடந்த பிறகு எழும் கோவத்தால் மட்டும் ஒரு மாற்றமும் இங்கு நிகழப்போவது இல்லை.
இல்லையேல் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படபோகும் பெண்களின் குரல்களை இன்னும் எத்தனை சட்டங்கள் இருந்தாலும் அதிகாரம் விழுங்கி கொண்டுதான் இருக்கும்.

நாமும் கேட்டு, பார்த்து, குரல் கொடுத்து அல்லது எதுவும் செய்யாமல் கடந்து போய் கொண்டுதான் இருக்க போகிறோம்.

ஆண் மைய சமூகத்தில் பெண் உடல், உடை, சமூக செயல்பாடு, கலாச்சாரம் பற்றிய பிற்ப்போக்குத்தன கருத்துருவாக்கத்தை மாற்றி நம்மை சுயபரிசோதனை செய்ய ஒவ்வொருவரும் முன் வரவேண்டும்.” என்று கூறியிருக்கிறார்.

Director Ranjith condemns Pollachi rape case

More Articles
Follows