தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஹாலிவுட்டில் சில படங்கள் பல பாகங்களாக வந்துள்ளன. இந்திய சினிமாவில் ஓரிரு படங்களே 3 பாகங்களாக வந்துள்ளன.
ஆனால் மலையாளத்தில் ஒரு சினிமா 4 பாகங்களாக வந்துள்ளன. தற்போது அதன் 5ஆம் பாகம் ரிலீசாகிறது. அதுதான் ‘CBI 5 THE BRAIN’
நாளை ஞாயிற்றுக்கிழமை மே 1ல் இந்த படம் ரிலீசாகிறது.
மலையாளத்தின் சிறந்த சீக்குவல் சினிமா என சிபிஐ படங்களை தாராளமாக சொல்லிக் கொள்ளலாம்.
இதில் மம்மூட்டி சிபிஐ அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படத்தில் மம்மூட்டி செய்யும் விசாரணை முறை பாணி அப்போதே பாப்புலர் ஆனது.
1988ஆம் ஆண்டில்தான் இதன் முதல் பாகம் ‘சிபிஐ டைரிக் குறிப்பு’ என்ற பெயரில் வெளியானது.
திரைக்கதை ஆசிரியர் எஸ்.என்.சுவாமி கதை, திரைக்கதை எழுத இப்படத்தை கே.மது இயக்கியிருந்தார்.
பிரபலமாக இருந்த சிபிஐ வழக்கு விசாரணைகளை மையப்படுத்தியே இதன் பாகங்கள் உருவானது.
இதில் மம்மூட்டி உடன் முகேஷ், ஜெகதி ஸ்ரீகுமார், ஊர்வசி, லிஸ்சி, சுகுமாரன், ஜனார்த்தனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜெகதி ஸ்ரீகுமாரும் முகேஷும் உதவி விசாரணை அதிகாரிகளாக நடித்திருப்பார்கள்.
இதன் இரண்டாம் பாகம் ‘ஜாக்ரதா’ என்ற பெயரில் 1989-ல் வெளியானது. ஒரு நடிகையின் மரணத்தை விசாரிப்பதாக இந்த படம் இருக்கும்.
இதில் நடிகை பார்வதி ஜெயராம் நடித்திருந்தார்.
இந்தப் படமும் வெற்றி பெறவே இதன் பாகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வர ஆரம்பித்தன.
ஒவ்வொரு படத்திலும் களங்கள் வெவ்வேறாக இருக்கும்.
இதன் பின்னர் 2004-ல் ‘சேதுராம ஐயர் சிபிஐ’ என்ற பெயரில் 3ம் பாகம் வெளியானது. சிபிஐ கூட்டணியுடன் இதில் நவ்யா நாயர் நடித்திருந்தார்.
இதனையடுத்து இதன் 4ஆம் பாகம் ‘நேரறியான் சிபிஐ’ 2005ல் வெளியானது.
இதில் சம்ருதா சுனில், கோபிகா நடித்திருந்தனர்.
இந்த சிபிஐ பாகங்கள் அனைத்தையும் கே மது இயக்கியிருந்தார்.
தற்போது 18 ஆண்டுகளுக்கு பிறகு இதன் சிபிஐ 5 பாகம் வெளியாகிறது.
விபத்து ஏற்பட்டு நினைவில்லாமல் பல ஆண்டுகளாக படுத்தப் படுக்கையாக இருந்த கெஜதி ஸ்ரீகுமார் இந்தப் படத்தில் மீண்டும் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் பிரபலமான நடிகர் ஆவார்.
நாளை மே 1ல் ரிலீசாகவுள்ள CBI 5 THE BRAIN படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
CBI 5 The Brain OPENS FROM MAY 1 WORLDWIDE