தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ல் ரிலீசானது.
இந்த படம் வசூல் ரீதியாக உலகளவில் நெம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளதாம்.
தற்போது வரை ‘மாஸ்டர்’ படம் உலக அளவில் ரூ 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம்.
கொரோனா லாக்டவுனிற்கு பிறகு தியேட்டர்கள் திறந்தவுடன் மாஸ்டர் நல்ல வசூலை தருவதாக திரையுலகினர் உற்சாகத்தில் உள்ளனர்.
தமிழகத்தைப் போல கேரளா, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகாவிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்புள்ளது.
இந்த நிலையில் நாளை மறுநாள் ஜனவரி 29ல் அமேசானில் மாஸ்டர் ரிலீஸ் என படக்குழு அறிவித்துள்ளது.
அதாவது இந்த படம் ரிலீசாகி 16 நாட்களில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாபியுள்ளனர்.
எனவே உடனடியாக இன்று மாலை ஆலோசனையில் ஈடுப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
விஜய் என்ன செய்ய போகிறார்? பார்ப்போம்
Blindsided by Vijay’s Master’s early OTT release, theatre owners rue lack of transparency