தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் அதர்வா தயாரித்து நடித்துள்ள புதிய படம் ‘செம போத ஆகாதே’. மிஸ்டி கதாநாயகியாக வருகிறார்.
மனோபாலா, கருணாகரன், யோகிபாபு, ஜான்விஜய், கும்கி அஸ்வின் ஆகியோரும் நடித்துள்ளனர். பானா காத்தாடியை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படம் வரும் ஜீன் 29ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது அதர்வா கூறியதாவது:-
“நிறைய படவிழாக்களில் தயாரிப்பாளர்கள் தங்கள் கஷ்டங்களை சொல்வதை கேட்டு இருக்கிறேன்.
அப்போதெல்லாம் ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று நான் நினைத்தது உண்டு. ஆனால் படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை இப்போது அனுபவ பூர்வமாக உணர்கிறேன்.
படத்தை எடுத்து திரைக்கு கொண்டு வருவது பெரிய போராட்டமாக இருக்கிறது. இந்த படத்தை ஏற்கனவே ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அது முடியவில்லை.
நீண்ட நாட்களாக சீரியஸ் படங்களில் நடித்தேன். பத்ரி வெங்கடேஷ் ஒரு ஜாலியான படமாக இதை எடுத்துள்ளார். ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
இந்த படம் மதுபழக்கத்தை ஊக்குவிக்கவில்லை.
போதையில் ஒருவன் முட்டாள் தனமான வேலை செய்கிறான். அதனால் வரும் பிரச்சினைகள் என்ன என்பதே கதை.
எனக்கு எப்போது திருமணம் என்று கேட்கிறார்கள். எனக்கு இன்னும் கல்யாண வயது வரவில்லை.”
இவ்வாறு அதர்வா பேசினார்.
Atharvaa speech at Semma Botha Aagatha press meet regarding his marriage