எனக்கு தாழ்வு மனப்பான்மை.; நான் ஸ்டன்ட் மேன் இல்ல – தீனா

எனக்கு தாழ்வு மனப்பான்மை.; நான் ஸ்டன்ட் மேன் இல்ல – தீனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும், ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் ‘மாயவலை’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் ஞாயிறு (நவம்பர் 5) நேற்று நடைபெற்றது.

சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் மற்றும் ‘தயா’ செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ராஜேந்திரன் (வாபோ), ஏ.ஆர். ஜாஃபர் சாதிக் (ஜே எஸ் எம் பிக்சர்ஸ்) மற்றும் சர்தார் ஆவர். யுவன் சங்கர் ராஜா இசையில், ராம்ஜி ஒளிப்பதிவில், எஸ்.பி. அஹ‌மதின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘மாயவலை’ திரைப்படத்திற்கு சினேகன் பாடல்களை எழுத, வீரமணி கணேசன் கலை இயக்கத்தை கையாண்டுள்ளார்.

சண்டை பயிற்சிக்கு பிரதீப் தினேஷும், வடிவமைப்புக்கு கோபி பிரசன்னாவும் பொறுப்பேற்றுள்ளனர்.

இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துக் கொள்ள இனிதே நடைபெற்றது. இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

இணை தயாரிப்பாளர் ராஜேந்திரன் பேசியதாவது…

என் முதல் மேடை இது, இந்த வாய்ப்பை தந்த அமீர் அண்ணனுக்கு நன்றி. அமீர் அண்ணாவும் நானும் தீவிரமான கமல் ரசிகர்கள். எப்போதும் அவரைப் பற்றி பேசிக்கொண்டிருப்போம், அமீர் அண்ணனிடமும் கமல் சாரிடமும் என்னைக் கொண்டு சேர்த்த சினேகனுக்கு நன்றி. இந்தப்படம் பற்றி எனக்குத் தெரியாது. அமீர் அண்ணனுடன் பயணிக்க வேண்டும், அவ்வளவுதான். அமீர் அண்ணனும் வெற்றிமாறன் அண்ணனும் இணைந்து ‘நார்கோஸ்’ மாதிரி ஒரு சீரிஸ் எடுக்க வேண்டும், அதில் நாங்களும் இருக்க வேண்டும். அது நடக்கும் என நம்புகிறேன், அனைவருக்கும் நன்றி.

நடிகர் சாய் தீனா பேசியதாவது…

நான் நிறையப்படங்களில் நடித்திருக்கிறேன். ஒரு சீன், இரண்டு சீன் தான் நடிப்பேன், வெற்றிமாறன் அண்ணன் தான் அதை மாற்றினார். அவருடன் ‘வட சென்னை’யில் நிறைய கற்றுக்கொண்டேன். எனக்கு எப்போதும் தாழ்வு மனப்பான்மை இருக்கிறது.. நான் ஸ்டண்ட் மேன் கிடையாது, துணை நடிகர் தான், எனக்கு நடிப்பு கற்றுக்கொள்ள ஆசை. கூத்துப்பட்டறை போன்ற இடங்களில் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன்.

ஆனால் வெற்றிமாறன் சார் படத்தில் நடித்ததே பெரிய அனுபவமாக இருந்தது. அதே போல் தான் அமீர் அண்ணன். இருவரும் எனக்கு நிறைய சொல்லித் தந்தார்கள். உண்மையாகவே அமீர் எனக்கு அண்ணன் தான்.

என்னைக் குடும்ப உறுப்பினர் போல‌ பார்த்துக்கொள்வார். இந்தப்படத்தில் பணியாற்றிய எல்லோரும் நண்பர்கள் தான். மிக நன்றாக படம் வந்துள்ளது, அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள், நன்றி.

நடிகர் வின்செண்ட் அசோகன் பேசியதாவது…

அமீர் அண்ணனை சந்தித்ததே பெரிய விஷ‌யம். அவருக்கு சினிமா மேல் இருக்கும் காதல் தான் எங்கள் இருவருக்கும் பொதுவானது. அவர் என்னை எப்போதும் மதிப்பவர். வெற்றிமாறன் சாரின் ‘வட சென்னை’ படத்தில் அமீர் அண்ணனுடன் நடித்தது அனைவருக்கும் இன்றும் பிடித்த காட்சியாக உள்ளது. அமீர் அன்ணணுடன் இப்போது வரை நடித்தது எல்லாமே அடிதடி காட்சி தான். இந்தப்படம் வித்தியாசமானதாக அமைந்தது. வெற்றிமாறன் இப்படத்தில் வந்தது மகிழ்ச்சி, நன்றி.

தயாரிப்பாளர் ஜாஃபர் பேசியதாவது…

அமீர் அண்ணனுடன் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போது இந்தப்படம் ஆரம்பித்தது. அமீர் அண்ணன் வாழ்க்கையிலேயே ஆரம்பித்த 40 நாட்களில் ஷூட்டிங் முடித்த படம் இது மட்டும் தான். அடுத்து அவர் இயக்கும் படமும் எங்களுடையது தான். எங்கள் உரையாடல் எப்போதும் கலகலப்பாக‌ இருக்கும். சினிமா பற்றி மட்டும் தான் பேசிக்கொண்டே இருப்போம். அவருடன் இணைந்து பயணிப்பது பெருமை. நன்றி.

நடிகர் சரண் பேசியதாவது…

எல்லோர் மத்தியில் இந்த மேடையை பகிர்வது பெருமை. என் முதல் நன்றி வெற்றிமாறன் சாருக்கு தான். ‘வட சென்னை’ படம் தான் என் வாழ்க்கையை மாற்றியது. என்னை காஸ்ட் செய்யும் அனைவரும் ‘வட சென்னை’ பற்றி சொல்வார்கள். அந்த‌ வாய்ப்பு தந்த வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி. ‘வட சென்னை’யில் பார்த்த பல நண்பர்களின் ரீயூனியன் மாதிரி இந்தப்படம் இருந்தது. இந்தப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு ரமேஷ் அண்ணாவிற்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி.

I have inferiority complex I am not stunt man says Dheena

குணா இயக்கத்தில் நட்டி & நிழல்கள் ரவியுடன் இணைந்த ஆதேஷ் பாலா

குணா இயக்கத்தில் நட்டி & நிழல்கள் ரவியுடன் இணைந்த ஆதேஷ் பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கா செந்தில் வேலன் தயாரித்து வரும் பெயரிடப்படாத திரைப்படம் தான் “Production No : 1”.

நட்டி, நிஷாந்த் ரஸ்சோ, சிவன்யா, நிழல்கள் ரவி, ஆதேஷ் பாலா, ஜீவா ரவி, அரவிந்த் ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தினை குணா சுப்ரமணியம் இயக்க ஒளிப்பதிவை மணி பெருமாள் செய்ய சரண்குமார் இசையமைத்து வருகிறார்

இந்தப் படத்தில் போலீஸ் வேடம் போட்டு அசத்தப்போகிறாராம் ஆதேஷ் பாலா. சின்ன வேடம் என்றாலும் தனி முத்திரை பதிப்பவர் ஆதேஷ் பாலா.

இந்தப் படத்திலும் அவரின் நடிப்பு திறமையை நிச்சயம் காட்டுவார் என எதிர்பார்க்கலாம்.

மேலும் நட்டி மற்றும் நிழல்கள் ரவி உள்ளிட்ட நட்சத்திரங்களோடு நடித்த அனுபவம் தனக்கு நெகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்துள்ளார் ஆதேஷ் பாலா.

அசத்துங்க ஆதேஷ் ஜீ..

Aadesh Bala with Natty and Nizhalgal Ravi

மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் இணையும் ‘விருமாண்டி’ அபிராமி

மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் இணையும் ‘விருமாண்டி’ அபிராமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் பல படங்களை இயக்கியிருந்தாலும் நடித்திருந்தாலும் தயாரித்திருந்தாலும் அவரது படங்களில் மிகவும் முக்கியமான ஒன்று ‘விருமாண்டி’.

இதில் கமல்ஹாசன் ஏற்றிருந்த வேடம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் கமலுக்கு ஜோடியாக அபிராமி நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த ஜோடி இணைகிறது. மணிரத்னம் இயக்க உள்ள கமலின் 234 வது படத்தில் கமலுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார் அபிராமி.

மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா உள்ளிட்ட பலரும் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

கமல் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 6 அல்லது 7 ஆம் தேதி இந்தப் படத்தில் மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தை கமல்ஹாசன் மணிரத்னம் மற்றும் உதயநிதி இணைந்து தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal 234

After Virumandi Abhirami joins with Kamal 234

சினிமாவில் மிச்சமில்லை.. அரசியலில் ஆப்ரஹாம்.; கமல்ஹாசனை வாழ்த்திய சிவக்குமார்

சினிமாவில் மிச்சமில்லை.. அரசியலில் ஆப்ரஹாம்.; கமல்ஹாசனை வாழ்த்திய சிவக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிப்புக் கலையில் அசகாய சூரர்கள் என்று நான் மதித்துப் போற்றுபவர்கள் தமிழ்ச் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியும், உலகநாயகன் கமலும்தான்.

அவர்கள் செய்த ‘வெரைட்டி ரோல்களை’ இதுவரை வேறுயாரும் செய்ய முடியவில்லை.

சிவாஜி நடித்த சரித்திர, சமூக, புராண வேடங்களை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவு அவர் செய்து விட்டார்.

கமல், நீங்கள் நடிப்பதோடு நில்லாமல், தேர்ந்த பரதக்கலைஞர், நடனக் கலையில் வல்லவர், பாடகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர்..

‘டூப்’ போடாமல் அல்லாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் நீங்கள் சிங்கத்தோடு மோதியவர் ..

‘மீண்டும் ஒரு சூர்யோதயம்’ -படத்தில் ரன்வே ரோட்டில் பாய்ந்து ஓடிய குதிரை சறுக்கி கீழே விழ 20அடி தூரம் குதிரையின் அடியில் உங்கள் கால் மாட்டி எலும்பு நொறுங்க நடித்தவர் நீங்கள்.

1973-ல் அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன் என்று துவங்கி தங்கத்திலே வைரம், மேல்நாட்டு மருமகள்- என
8 படங்களில் நாம் இருவரும் சேர்ந்து நடித்தோம். நான் கதாநாயகன், கமல், நீங்கள் பெரும்பாலும் வில்லனாக நடித்தீர்கள்..

வில்லன் வேடங்களில் நடித்து பெரிய ஹீரோவாக எங்கள் தலைமுறையில் உயர்ந்த முதல் நடிகர் நீங்கள் தான் கமல்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல உங்களுக்குள் இருந்த ‘பொறி’யை கண்டவன் நான்.

அந்தச் செடி வளர்ந்து இன்று விருட்சமாகி ‘நாயகன்’,’குணா’, ‘அன்பே சிவம்’, ‘ஒளவை சண்முகி’, ‘ஹேராம் ‘ என்று நடிப்பின் இமயத்தைத் தொட்டுள்ளது.

நடிப்பில் இனி சாதிக்க உங்களுக்கு எதுவும் மிச்சம் இருப்பதாகத் தெரியவில்லை. அரசியல் களம் உங்களுக்காக காத்திருக்கிறது.

அமெரிக்கா கொண்டாடிய ஆப்ரஹாம் லிங்கனே இரண்டு முறை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த பின்னரே அதிபரானார்.

அரசியலிலும், திரையில் சாதித்தத்தை, நீங்கள் சாதிக்க முடியும்.. துணிந்து இறங்குங்கள்.

நூறாண்டு நீவிர் வாழ்க…

Actor Sivakumar wishes Kamalhassan

2வது திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலா பால்

2வது திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலா பால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அமலாபால்.

தமிழில் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் அறிமுகமாகி தன் கேரக்டரை பரபரப்பாக பேச வைத்தவர் அமலாபால். அதன் பின்னர் பிரபு சாலமன் இயக்கிய ‘மைனா’ படத்தில் சிறந்த ஒரு நடிப்பை கொடுத்து தன்னுடைய கவர்ச்சி பக்கத்தை திசை திருப்பினார்.

விஜய் இயக்கிய தலைவா & தெய்வ திருமகள் ஆகிய படங்களில் நடித்த போது இயக்குனருடன் விஜய்யுடன் நெருக்கம் ஏற்பட்டு காதலித்தார்.

பின்னர் 2014 ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சில வருடங்களில் இயக்குனர் விஜய்யை விவகாரத்து செய்தார் அமலாபால்.

அமலா பால்

அதன் பின்னர் ஓரிரு வருடங்களில் இயக்குனர் விஜய் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் அமலா பால் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

ஆடை, ராட்சசன், கடாவர் என பல்வேறு விதமான படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 26ல்தனது காதலரை அறிமுகப்படுத்தினார் அமலா பால். தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருமண அறிவிப்பும் வெளியானது.

இந்த நிலையில் நவம்பர் 5ஆம் தேதி அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவரின் பாய் பிரண்ட் ஜெகத் தேசாய் என்பவரை மணந்தார்.

இவர்களின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அமலா பால்

Amala Paul 2nd marriage photos goes viral

ஸ்ரீகோபிகா வராதது ஏன்.? மோகன் வைத்யாவுக்கு சம்பள பாக்கி.? ‘ரூல் நம்பர் 4 பிரஸ் மீட் அப்டேட்

ஸ்ரீகோபிகா வராதது ஏன்.? மோகன் வைத்யாவுக்கு சம்பள பாக்கி.? ‘ரூல் நம்பர் 4 பிரஸ் மீட் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த நவம்பர் மூன்றாம் தேதி ‘ரூல் நம்பர் 4′ என்ற படம் திரையரங்குகளில் வெளியானது. பொதுவாகவே ஒரு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெறும்.

ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரை படம் வெளியாகி இரண்டு நாட்கள் கழித்து தான் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது…

“நாயகனும் இயக்குநருமான ஏகே பிரதீப் கிருஷ்ணா துபாய் நாட்டில் இருந்ததால் வர முடியாத காரணத்தினால் அவர் இப்போது வந்து பத்திரிகையாளர்களை சந்திப்பதாக தெரிவித்தார்.

மேலும் இந்த படத்தில் மோகன் வைத்யா என்பவர் செக்யூரிட்டி வேடத்தில் நடித்திருந்தார். அவரின் மகளாகத்தான் நாயகி ஸ்ரீ கோபிகா நடித்திருந்தார்.

இந்த நிலையில் மோகன் வைத்யாவிற்கு சம்பள பாக்கி வைத்துள்ளது பற்றி ஃபிலிம் ஸ்ட்ரீட் சார்பாக கேள்வி கேட்டபோது.. அனைவருக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டது.. ஒருவேளை அவருக்கான சம்பளம் பாக்கி இருந்தால் அதை அவரிடம் பேசி முடித்து விடுவோம்..

சமீபத்தில் கூடழூல் நம்பர் 4 படத்தின் முதல் காட்சிக்கு அவர் வந்திருந்து சிறப்பித்தார் என தெரிவித்தனர்.

இந்த படத்தை வெளியிடும் ஜெனிஸ் கூறியதாவது.. ”

இந்த வாரம் வெளியான படங்களில் ரூல் நம்பர் 4’ என்ற படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. தியேட்டர்களில் எண்ணிக்கை காட்சிகள் கூடி வருகிறது.

மற்ற படங்களை விட இந்த படத்திற்கு மக்கள் மத்தியிலும் பத்திரிகையாளர்கள் மத்தியிலும் பாராட்டுக்கள் கிடைத்துள்ளன.

சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களிலும் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்தார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நாயகன் பிர்லா போஸ், இசையமைபபாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாயகி ஸ்ரீ கோபிகா கலந்து கொள்ளாதது பற்றி கேட்டபோது.. “கோபிகா படத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். 90 எம் எல் என்ற படத்தில் ஓவியாவுடன் நடித்திருந்தார்.

அன்பே வா உள்ளிட்ட ஓரிரு டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் ஒரு ஷூட்டிங்கில் இருப்பதால் ‘ரூல் நம்பர் 4’ பத்திரிகை சந்திப்புக்கு அவரால் வர முடியவில்லை என்று தெரிவித்தனர்.

தயாரிப்பாளர் – ஷிமி இஸட் (Simy Z )
இணை தயாரிப்பாளர்கள் – ஏ. குமரபிள்ளை, கிரண் மேலவீட்டிள், தேவராஜன் பிள்ளை
ஒளிப்பதிவு – டேவிட் ஜான்
பின்னணி இசை – தீரஜ் சுகுமாறன்
எடிட்டிங் – எஸ்.பி.அஹமது
நடன இயக்குநர் – அஜய் காளிமுத்து
சண்டைக் காட்சி – ராக் பிரபு
இணை இயக்குநர் – ஜெகானந்த வர்தன்
மக்கள் தொடர்பு – பா.சிவக்குமார்

ரூல் நம்பர் 4

Rule Number 4 movie press meet

More Articles
Follows