தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அடுத்தாண்டு 2021 ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும் இதே ஆண்டில் டிசம்பர் 31-ம் தேதி கட்சி அறிவிப்பு வெளியாகும் எனவும் ட்விட்டரில் அறிவித்தார் ரஜினிகாந்த்.
“மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என கூறியிருந்தார்.
போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது… “தமிழக மக்கள் நலனுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை.
நான் வென்றால் அது மக்களின் வெற்றி, நான் தோற்றால் அது மக்களின் தோல்வி“ என்றார்.
இதனையடுத்து தமிழக அரசியல் களம் பரபரப்பானது.
இந்த நிலையில் சற்றுமுன்..
அதிகாரப்பூர்வ அறிவிப்பு என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பை ரஜினிகாந்த் சற்றுமுன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
யார் இந்த அர்ஜுனமூர்த்தி..?
அர்ஜூன மூர்த்தி திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் குடும்பத்திற்கு நெருக்கமான உறவினர் ஆவார்.
ஆரம்ப காலத்தில் திமுக எம்.பி தயாநிதிமாறன் உடன் பணியாற்றி வந்தார்.
அதன்பின் பாஜகவின் அறிவுச்சார்பு தலைவராக இருந்தார்.
தற்போது ரஜினியுடன் சேர்ந்ததால், அர்ஜூன மூர்த்தியை பாஜக கட்சியிலிருந்து நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Arjuna Murthy appointed as chief coordinator for Rajinikanth’s party