தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனுஷின் வுண்டர்பார் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் வடசென்னை.
வெற்றிமாறன் இயக்கத்தில் மூன்று பாகங்களாக இப்படம் உருவாகிறது.
முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.
இதில் தனுஷுடன் சமந்தா, ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
சமீபத்தில் பிரமாண்டமான ஜெயில் செட் ஒன்றில் தனுஷ் மற்றும் கிஷோர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்திலிருந்து சமந்தா வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது.
இவருக்கு பதிலாக அமலா பால் நடிக்கவிருக்கிறாராம். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.
இந்த ஜோடி இதற்கு முன்பே வேலையில்லா பட்டதாரி படத்தில் இணைந்து நடித்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.