ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து.. சௌந்தர்யா போட்ட பதிவு… ரஜினி கண்ணீர்.!

ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்து.. சௌந்தர்யா போட்ட பதிவு… ரஜினி கண்ணீர்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு நாட்களாகவே கோலிவுட்டை அதிர்ச்சி அடைய வைத்த செய்தி என்றால் அது தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினி விவாகரத்து செய்திதான்.

18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு அவர்கள் இருவரும் பிரிந்து விட்டாலும் பலர் அவர்கள் இணைய வேண்டும் எனவும் சிலர் அது அவர்களின் விருப்பம் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுப்பற்றி ரஜினி குடும்ப தரப்பிலோ கஸ்தூரிராஜா குடும்ப தரப்பிலோ எவரும் வாய்திறக்கவில்லை..

இந்த நிலையில் ரஜினியின் 2வது மகள் சௌந்தர்யா தன் அப்பா & அக்கா உடன் இருக்கும் தங்கள் குழந்தைப்பருவ புகைப்படத்தை நேற்று ட்விட்டரில் மாற்றியுள்ளார்.

இனி எங்களுக்கு அப்பா தான் எல்லாமே என்பது போல உள்ளது.

(சௌந்தர்யாவும் விவகாரத்து பெற்று 2வது திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது)

சௌந்தர்யாவின் படத்திற்கு ஒரு ரஜினி ரசிகர் கமெண்ட் போடும் வகையில் கபாலி பட வசன வீடியோ காட்சியை பகிர்ந்துள்ளார்.

அதில்…
“என் வாழ்க்கையில நான் இன்னும் என்னலாம் கொடுமைகள பார்க்கணும்னு இருக்கோ, எனக்கே தெரியல.

கனவுகளில் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் கண் விழித்தவுடனேயே டக்குனு அந்த பிரச்சனைகளில இருந்து வெளியே வர மாதிரி என் வாழ்க்கையும் இருந்திருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்” என ரஜினி கண்கலங்கியபடி பேசிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இதை ரஜினியின் மனக்குமுறலாக ரசிகர்கள் ஷேர் செய்து தலைவருடன் ஃபீல் செய்து வருகிறார்கள்.

Soundarya recent post after Dhanush and Aishwarya divorce issue

JUST IN லிப்ரா யுவன் கருபழனியப்பன் கூட்டணியில் ‘ஆண்டவர்’

JUST IN லிப்ரா யுவன் கருபழனியப்பன் கூட்டணியில் ‘ஆண்டவர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லிப்ரா புரொடக்சன். இந்த நிறுவனம் சார்பாக ரவீந்தர் சந்திரசேகரன் படங்களை தயாரித்து வருகிறார்.

இந்நிறுவனம் சார்பாக இறுதியாக வெளியான படம் முருங்கைக்காய் சிப்ஸ்.

இதில் படத்தில் சாந்தனு அதுல்யா பாக்யராஜ் ஊர்வசி உள்ளிடோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனும் மற்றும் யோகிபாவுவும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

சில மாதங்களுக்கு முன் பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் நாயகனாக நடிக்கவுள்ள ஒரு படத்தை தயாரிக்கவுள்ளதாக ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார் ரவீந்தர். அந்த விடியோவில் பாலாஜி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அதற்கு ரவிந்தர் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

தற்போது தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ரவீந்தர் சந்திரசேகரன்.

ஆண்டவர் என்ற இந்த படத்திற்கு தலைப்பு வைத்து டைட்டில் லுக் வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தை கருபழனியப்பன் இயக்க யுவன் இசையமைக்கிறார்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய பிரவீன் எடிட்டிங் செய்கிறார்.

மற்ற கலைஞர்கள் விவரங்கள் விரைவில் வெளியாகும்.

Director Karu Palaniappan’s next movie is announced

‘விருமன்’ படத்தில் கார்த்தியுடன் நடிக்க மறுத்த கீர்த்தி & சாய்பல்லவி

‘விருமன்’ படத்தில் கார்த்தியுடன் நடிக்க மறுத்த கீர்த்தி & சாய்பல்லவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன்’ படத்தில் கார்த்தி நடித்துள்ளார்.

நடிகர் சூர்யா இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதில் நாயகியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார்.

முதலில் நாயகியாக இவரை ஒப்பந்தம் செய்யவில்லை என இயக்குனர் முத்தையா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

‘விருமன்’ பட தேன்மொழி கேரக்டரில் நடிக்க கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மற்றும் சாய்பல்லவி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம்.

ஆனால் அவர்களின கால்ஷீட் தேதிகள் கிடைக்கவில்லை என்பதால்தான் ஷங்கரின் மகள் அதிதியிடம் பேசினார்களாம்.

சுல்தான் படத்தில் ஏற்கெனவே கார்த்தியுடன் ராஷ்மிகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தியுடன் கீர்த்தி சுரேஷ் மற்றும் சாய்பல்லவி இதுவரை இணைந்து நடிக்கவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Director Muthaiah talks about heroine selection in Viruman

‘பொன்னியின் செல்வன்’ பட சிங்கிள் ட்ராக் ரிலீஸ் அப்டேட்

‘பொன்னியின் செல்வன்’ பட சிங்கிள் ட்ராக் ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள மிகப்பிரம்மாண்டமான படம் பொன்னியின் செல்வன்.

இந்த படத்தை மணிரத்னம் இயக்க ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் 2 பாகங்களாக வெளிவரவுள்ளது. இதன் முதல் பாகம் 2022 கோடை விடுமுறை சமயத்தில் ரிலீசாகவுள்ளது.

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தின் ஓப்பனிங் பாடல் குறித்த தகவல்கள் வந்துள்ளன.

பொன்னியின் செல்வன் நாவலில் முதல் காட்சியில் வந்தியத்தேவன் குதிரையில் வருவது போன்று கதை அமைந்திருக்கும்.

எனவே அதை காட்சியாக வைத்து அந்த பாடலை உருவாக்கியுள்ளாராம் ரஹ்மான்.

1950களில் வெளியான ’சத்தியமே நிச்சயமாய் வெல்லுமடா’ என்ற பாடலை போன்று அந்த வரிகளில் இந்த பாடலை உருவாக்கியிருக்கிறாராம்.

இந்த சிங்கிள் ட்ராக் பாடல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Ponniyin selvan single track release update is here

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்திற்குக் கிடைத்த ஆஸ்கார் அங்கீகாரம்

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்திற்குக் கிடைத்த ஆஸ்கார் அங்கீகாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா, லிஜோமோள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவான மாபெரும் வெற்றிப்பெற்ற ‘ஜெய் பீம்’, கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இந்த படத்தினைப் பற்றிய ஒரு வீடியோ, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் நிறுவனமான ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸி’ன் அதிகாரபூர்வமான யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டிருக்கிறது.

இது ‘ஜெய் பீம்’ படத்திற்கு கிடைத்த உண்மையான மரியாதை என பலரும் பாராட்டுகிறார்கள்.

ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து, 2டி என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இப்படத்தின் சில காட்சிகள் அடங்கிய வீடியோ கிளிப்பிங்கில், படத்தின் மைய கரு உள்ளிட்ட அனைத்தையும் படத்தினை இயக்கிய இயக்குநர் தா.செ. ஞானவேல் விளக்கியுள்ளார்.

‘சீன் அட் த அகாடெமி’ என்ற பிரிவின் கீழ் இந்த வீடியோ வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக ஆஸ்கார் யூடியூப் சேனல் விவரிக்கையில்,” தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியினருக்கு தனது இடைவிடாத முயற்சியின் மூலம் நீதியைப் பெற்றுத் தந்த சமூக ஆர்வலரான வழக்கறிஞர் சந்துருவால் நடத்தப்பட்ட உண்மையான வழக்கு மற்றும் அதுதொடர்பான கள ஆய்வுகளின் அடிப்படையில் ‘ஜெய் பீம்’ உருவாக்கப்பட்டது. அத்துடன் கதை விவரிப்பும், அதனை எவ்வாறு திரைக்கதையாக்கி செயல்படுத்தப்பட்டது என்பதையும் எழுத்தாளரும், இயக்குநருமான தா.செ. ஞானவேல் வெளிப்படுத்திருக்கிறார்.” என குறிப்பிட்டிருக்கிறது.

இதுதொடர்பாக 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் பேசுகையில்,” ஒதுக்கப்பட்ட மக்களின் கதையை சித்தரித்த எங்களின் ‘ஜெய் பீம்’ திரைப்படம், உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்படுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.” என்றார்.

இயக்குநர் தா.செ. ஞானவேல் பேசுகையில்,” தெரியாதவர்களின் கதையை சொல்லும் எங்களின் உண்மையான முயற்சி, உலக அளவில் கவனத்தை ஈர்த்ததன் மூலம் அதன் நோக்கத்தை நிறைவேற்றியுள்ளது. இப்போது உதவி கோரும் பாதிக்கப்பட்டவர்கள், அதற்கான பலன்களை அறுவடை செய்கிறார்கள். இதுவே நாங்கள் பெறக்கூடிய சிறந்த விருது.” என்றார்.

சூர்யாவின் ‘ஜெய் பீம்’, ஆஸ்காரின் அதிகாரபூர்வமான யூடியூப் சேனலில் இடம் பெற்றுள்ள செய்தி வெளியான பிறகு, தயாரிப்பாளர்களை மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள திரை ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Suriya’s Jai Bhim featured in YouTube channel of the Oscars

முதன்முறையாக ஆந்தாலஜி படத்தில் கமல்..; மம்மூட்டி-மோகன்லால் கூட்டணி

முதன்முறையாக ஆந்தாலஜி படத்தில் கமல்..; மம்மூட்டி-மோகன்லால் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மைக்காலமாக முக்கியமாக கொரோனா லாக்டவுன் சமயத்தில் ஆந்தாலஜி படங்கள் நிறைய தமிழில உருவாகி வருகின்றன.

இதில் சூர்யா, விஜய்சேதுபதி உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளனர்.

தற்போது இதுபோன்ற ஆந்தாலஜி படத்தில் முதன்முறையாக கமல்ஹாசன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

மலையாளத்தில் எம்.டி.வாசுதேவன் எழுதிய ஐந்து சிறுகதைகளில் உருவாகும் ஒரு ஆந்தாலஜி படத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கிறாராம்.

இந்தக் கதைகளை, பிரியதர்ஷன், லிஜோ ஜோச் பெலிசெர்ரி, ஜெயராஜ், ஷ்யாம் பிரசாத், சந்தோஷ் சிவன், மகேஷ் நாராயணன் ஆகியோர் இயக்கவுள்ளனர்.

இதில் மம்முட்டி, மோகன்லால், பகத் பாசில் ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.

இது மலையாளம் மற்றும் தமிழில் உருவாகும் என சொல்லப்படுகிறது.

இதில் கமல்ஹாசன் நடிக்கவில்லை என்றும் அவர் படம் தொடங்கும் முன் கதைகளை விவரித்துச் சொல்வார் (வாய்ஸ் ஓவர் கொடுப்பார்) எனவும் கூறப்படுகிறது.

ஆனால் இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Kamal Haasan Mammootty and Mohan lal to team up for anthology film?

More Articles
Follows