தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஓரிரு நாட்களாகவே கோலிவுட்டை அதிர்ச்சி அடைய வைத்த செய்தி என்றால் அது தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினி விவாகரத்து செய்திதான்.
18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு அவர்கள் இருவரும் பிரிந்து விட்டாலும் பலர் அவர்கள் இணைய வேண்டும் எனவும் சிலர் அது அவர்களின் விருப்பம் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுப்பற்றி ரஜினி குடும்ப தரப்பிலோ கஸ்தூரிராஜா குடும்ப தரப்பிலோ எவரும் வாய்திறக்கவில்லை..
இந்த நிலையில் ரஜினியின் 2வது மகள் சௌந்தர்யா தன் அப்பா & அக்கா உடன் இருக்கும் தங்கள் குழந்தைப்பருவ புகைப்படத்தை நேற்று ட்விட்டரில் மாற்றியுள்ளார்.
இனி எங்களுக்கு அப்பா தான் எல்லாமே என்பது போல உள்ளது.
(சௌந்தர்யாவும் விவகாரத்து பெற்று 2வது திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது)
சௌந்தர்யாவின் படத்திற்கு ஒரு ரஜினி ரசிகர் கமெண்ட் போடும் வகையில் கபாலி பட வசன வீடியோ காட்சியை பகிர்ந்துள்ளார்.
அதில்…
“என் வாழ்க்கையில நான் இன்னும் என்னலாம் கொடுமைகள பார்க்கணும்னு இருக்கோ, எனக்கே தெரியல.
கனவுகளில் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் கண் விழித்தவுடனேயே டக்குனு அந்த பிரச்சனைகளில இருந்து வெளியே வர மாதிரி என் வாழ்க்கையும் இருந்திருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்” என ரஜினி கண்கலங்கியபடி பேசிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இதை ரஜினியின் மனக்குமுறலாக ரசிகர்கள் ஷேர் செய்து தலைவருடன் ஃபீல் செய்து வருகிறார்கள்.
Soundarya recent post after Dhanush and Aishwarya divorce issue