‘தண்டர்காரன்’ பாடலை மிஸ் செய்து விட்டீர்களா.? இப்போது ‘வீரன்’ தரும் விருந்து தியேட்டர்களில்.!

‘தண்டர்காரன்’ பாடலை மிஸ் செய்து விட்டீர்களா.? இப்போது ‘வீரன்’ தரும் விருந்து தியேட்டர்களில்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹிப் ஹாப் ஆதி நடித்து இசையமைத்து ஜூன் 3ம் தேதி வெளியான திரைப்படம் ‘வீரன்’. இந்த படத்தை ‘மரகத நாணயம்’ புகழ் எ ஆர் கே சரவன் இயக்கி இருந்தார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இதில் நாயகியாக ஆதிரா நடித்திருந்தார்.

மேலும் முக்கிய வேடங்களில் வினய், முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படம் வெளியாகி 10 நாட்களைக் கடந்துள்ள நிலையில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ‘தண்டர்காரன்…’ என்ற பாடல் தற்போது கிளைமாக்ஸ் காட்சிக்கு பிறகு இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலை திரையரங்குகளில் மிஸ் செய்தவர்கள் இனிமேல் திரையரங்களில் பார்த்து ஆடி பாடி மகிழலாம்..

After fans request Thunderkaaran song from Veeran screening in theatres

‘லியோ’-வில் லிங்க்கான தனுஷ் – விஜய்சேதுபதி பட ஹீரோயின்

‘லியோ’-வில் லிங்க்கான தனுஷ் – விஜய்சேதுபதி பட ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘லியோ’.

இந்த படத்தில் விஜய்யுடன் திரிஷா, மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையிலும் ரசிகர்கள் எதிர்பாராத விதமாக பல நடிகர்களை இணைத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

சமீபத்தில் லியோ படத்தில் ஹாலிவுட் நடிகர் டென்சில் ஸ்மித் இணைந்தார் என்ற செய்திகள் வந்த நிலையில் தற்போது நடிகை மடோனா செபஸ்டின் இந்த படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர் விஜய் சேதுபதியுடன் ‘காதலும் கடந்து போகும்’, ‘கவண்’, மற்றும் தனுஷ் உடன் ‘பவர் பாண்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற ‘பிரேமம்’ படத்திலும் மடோனா நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இறுதியாக ஒரு பாடல் காட்சி ஒன்று பிரம்மாண்டமான செட் அமைத்து படமாக்கி வருகிறது படக்குழு. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மடோனா செபஸ்டின்

Madonna Sebastian joined in Vijay’s Leo

RIGHT IS BACK.. எனக்கு அரண்மனை.. துரைக்கு தலைநகரம்.; பார்ட் 3 குறித்து சுந்தர்.சி பேச்சு

RIGHT IS BACK.. எனக்கு அரண்மனை.. துரைக்கு தலைநகரம்.; பார்ட் 3 குறித்து சுந்தர்.சி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘அருணாச்சலம்’, ‘அன்பே சிவம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர் என்ற பட்டத்தை பெற்றவர் சுந்தர் சி.

ரஜினி, கமல், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை இயக்கிய இவர் ஒரு கட்டத்தில் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார் சுந்தர்.

2006-ம் ஆண்டு ‘தலைநகரம்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் வடிவேலுவின் நாய் சேகர் காமெடி பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ‘தலைநகரம் 2’ என்ற பெயரில் இதன் தொடர்ச்சியான 2வது பாகம் உருவாகியுள்ளது.

‘முகவரி’, ‘தொட்டி ஜெயா’, ‘நேபாளி’, ‘இருட்டு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ரைட் என்ற கேரக்டரில் நாயகனாக நடித்துள்ளார் சுந்தர் சி.

இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.

இதில் கலைப்புலி தாணு, நடிகர்கள் பரத், பிரேம், இயக்குனர்கள் சசி, பேரரசு உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இந்த ட்ரைலரில் அடிதடி வன்முறை கவர்ச்சி என அனைத்தும் தூக்கலாகவே உள்ளது.

இந்த விழாவில் சுந்தர் சி பேசும் போது..

“நான் பொதுவாக படத்தின் வெற்றி விழாக்களை கொண்டாடுவது இல்லை. படம் பேசட்டும். நான் எதற்காக பேச வேண்டும் என்று நினைப்பேன்.

ஆனால் நானும் துரையும் இதற்கு முன்பு இணைந்த ‘இருட்டு’ படம் ஹிந்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அது யாருக்கும் தெரியவில்லை. வெற்றி விழா நடத்தி இருந்தால் அனைவருக்கும் தெரிந்திருக்கும். எனவே இனி வெற்றி விழாக்களை கொண்டாட இருக்கிறோம்.

இந்தப் படத்தில் எனக்கு மனைவி (நாயகி) உடன் பிளாஷ்பேக் காட்சிகள் இருந்தன. ஆனால் அந்த காட்சிகள் படமாக்கப்படவில்லை. ஏன் என்று இயக்குனர் துரையிடம் கேட்டேன்.

அதற்கு ‘தலைநகரம் 3’ படத்தில் காட்சிகள் வைப்பேன் என்றார். நான் அரண்மனை படத்தை 1 2 3 என எடுத்து வருகிறேன்.

அது போல தலைநகரம் 2 3 4 படங்களை துரை எடுப்பார். அவருக்கு இந்த படத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை இருக்கிறது” என பேசினார் சுந்தர் சி.

Sundar C talks about Thalainagaram 3 and Durai

பள்ளி திறந்த முதல்நாளே தன் மகனை வைத்து மரக்கன்று நட்ட சௌந்தரராஜா.; நாமும் செய்யலாமே!

பள்ளி திறந்த முதல்நாளே தன் மகனை வைத்து மரக்கன்று நட்ட சௌந்தரராஜா.; நாமும் செய்யலாமே!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சுந்தரபாண்டியன்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘தர்மதுரை’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘பிகில்’, ‘சங்கத் தமிழன்’, ‘ஜகமே தந்திரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சௌந்தரராஜா.

இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘பத்து தல’ படத்தில் நடித்திருந்தார்.

தற்போது அனில் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் “கட்டிஸ் கேங்” என்ற மலையாள படத்தில் சௌந்தரராஜா வில்லனாக நடித்து வருகிறார்.

பொதுவாக இயற்கை மீது அதிக ஆர்வம் கொண்ட நடிகர் சௌந்தரராஜா மரங்கள் நடுவது பற்றியும் அதனை பாதுகாப்பது பற்றியும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.

உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 “கட்டிஸ் கேங்” படக்குழுவினரோடு சேர்ந்து மரக்கன்றுகள் நட்டு இயற்கை மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை சௌந்தரராஜா வலியுறுத்தி உள்ளார்.

சௌந்தரராஜா

இந்த நிலையில் இன்று ஜூன் 12-ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு திறக்கப்பட்டு வருகின்றன.

இதனை முன்னிட்டு மதுரையில் தனது அண்ணன் மகன் படிக்கும் பள்ளியில் இன்று ஒரு மரக்கன்றை நட்டு அதனை படம் பிடித்து இணையத்தில் பகிர்ந்து உள்ளார் சௌந்தரராஜா.

இதுவரை 110+க்கும் மேற்பட்ட மரங்களை இந்த மாணவன் நட்டு வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘நம் மண்ணுக்கு மக்களுக்கும்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வரும் சௌந்தர்ராஜா இதன் மூலம் மாணவர்களிடையே இயற்கை வளம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் பள்ளிகளோ அல்லது தங்கள் வீடுகளிலோ இதுபோன்ற மரங்களை நட்டு இயற்கை வளத்தை காக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.

நாமும் நம் பிள்ளைகளுக்கு இது போன்ற ஒரு செயலை செய்யச் சொல்லி அறிவுறுத்தலாமே.. தினமும் பள்ளிக்குச் செல்லும் மாணவன் அந்த மரங்களை பார்ப்பதன் மூலம் அவரின் மனமும் மகிழும் தானே..

சௌந்தரராஜா

Actor Soundararaja makes nature awareness with students

25 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரீ கொடுக்கும் ரஜினியின் ரீல் சிஸ்டர்

25 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரீ கொடுக்கும் ரஜினியின் ரீல் சிஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990-களில் தமிழ் படங்களின் நடித்து வந்தவர் நடிகை செண்பகம். இவரது இயற்பெயர் கீதா சிங்கா.

பின்னர் தன் பெயரை செண்பகா என மாற்றிக் கொண்டு சில படங்களிலும் நடித்து வந்தார்.

சரத்குமாருடன் ஐ லவ் இந்தியா என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் பிரபு, விஜயகாந்த் உள்ளிட்டோரும் இவர் நடித்துள்ளார்.

முக்கியமாக ரஜினியின் ‘பாட்ஷா’ படத்தில் மூத்த தங்கையாக இவர் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தமிழகமெங்கும் பிரபலமானார் செண்பகா.

அதன் பின்னர் சில படங்களில் நடித்து வந்த இவர் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் தன் கணவருடன் செட்டிலானார்.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இவர் சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

மேலும் இது தொடர்பாக சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.

கீதா சிங்கா

Baashaa fame Shenbaga is back in Kollywood

தமிழில் அறிமுகமாகும் அமிதாப்பச்சன்.; 32 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் கூட்டணி

தமிழில் அறிமுகமாகும் அமிதாப்பச்சன்.; 32 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ என்ற படத்திலும் நடித்து வந்தார் ரஜினிகாந்த்.

இந்த படங்களைத் தொடர்ந்து லைக்கா தயாரிக்கும் ‘தலைவர் 170’ படத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த்.

இந்தப் படத்தை ‘ஜெய் பீம்’ புகழ் ஞானவேல் இயக்க உள்ளார். இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக முதலில் விக்ரம் நடிப்பார் என கூறப்பட்டது. அதன் பின்னர் அர்ஜுன் நடிப்பார் என தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் முக்கியமான கேரக்டரில் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அமிதாப் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் 1991 இல் வெளியான ‘ஹம்’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.

தற்போது 32 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது அமிதாப் நடிக்கும் நேரடி தமிழ் படமாகும். ஒருவேளை இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் அமிதாப் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கலாம்.

சில ஆண்டுகளுக்கு முன் அமிதாப் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இணைந்து ஒரு நேரடி தமிழ் படத்தில் நடித்தனர். அந்தப் படத்திற்கு ‘உயர்ந்த மனிதன்’ என்றும் தலைப்பிட்டு இருந்தனர். ஆனால் அந்த படம் டிராப் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

After 32 years Amitabh Bachchan and Rajini will act together in Thalaivar 170

More Articles
Follows