இப்போ ஃபீல் பண்ணி என்ற பண்றது லட்சுமி மேனன்..?

இப்போ ஃபீல் பண்ணி என்ற பண்றது லட்சுமி மேனன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Lakshmi Menon Quits college?குடும்ப பாங்கான கேரக்டர் தேவையா? கூப்பிடுங்கள் அவரை என்கிற அளவுக்கு பிஸியாக இருக்கிறார் லட்சுமி மேனன்.

இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றும் வரும் நிலையில், இவருக்கு வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

தற்போது ரத்னசிவா இயக்கும் றெக்க படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.

படப்பிடிப்புக்கு செல்வதால் சரியாக கல்லூரிக்கு செல்ல முடியவில்லையாம்.

எனவே, கல்லூரிப் படிப்பை நிறுத்தி, விட்டு அஞ்சல் வழியில் தொடரவிருக்கிறாராம்.

இருந்தாலும் காலேஜ் லைஃபை மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளார்.

நிவின்பாலியுடன் இணையும் அட்லி…. தெறிக்க விடுவாரா?

நிவின்பாலியுடன் இணையும் அட்லி…. தெறிக்க விடுவாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

atlee and nivin paulyராஜா ராணி, தெறி ஆகிய இரண்டு படங்களை மட்டுமே இயக்கிய அட்லி தற்போது தயாரிப்பாளராக அவதாரமெடுத்துள்ளார்.

தனது ‘A for Apple’ என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ‘சங்கிலி பிங்கிலி கதவ தொற’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இதில் ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தை கமலின் உதவியாளர் ஹரி இயக்குகிறார்.

இந்நிலையில், மீண்டும் ஒரு புதிய படத்தை தயாரிக்கிறாராம் அட்லி.

இவரின் உதவி இயக்குனர் இயக்கவுள்ள இப்படத்தில் நிவின் பாலி நாயகனாக நடிக்கிறார்.

விஜய்யின் ரீமேக் படத்தில் ரஜினியின் அனிமேஷன் நாயகி.!

விஜய்யின் ரீமேக் படத்தில் ரஜினியின் அனிமேஷன் நாயகி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

deepika padukone hot imageமுழு நேர அரசியலில் ஈடுபட்ட சிரஞ்சீவி நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய்யின் கத்தி தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார்.

தெலுங்கு இயக்குனர் விவி விநாயக் இயக்கவுள்ள இப்படம் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமாக உருவாகிறது.

சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண், இப்படத்தை லைக்கா புரொடக்ஷனுடன் இணைந்து தயாரிக்கிறார்.
இதில் நாயகியாக அனுஷ்கா நடிப்பார் என கூறப்பட்டது.

தற்போது அவருக்கு பதிலாக பாலிவுட் நாயகி தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ரஜினியின் அனிமேஷன் திரைப்படமான கோச்சடையான் படத்தில் தீபிகா படுகோனே நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

தஞ்சையில் விவசாயம் செய்ய நிலம் வாங்கும் விஷால்…!

தஞ்சையில் விவசாயம் செய்ய நிலம் வாங்கும் விஷால்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal in rice festivalதிருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கத்தில் நடைபெற்ற நெல் திருவிழாவில் நடிகர் விஷால் கலந்துக் கொண்டார்.

அப்போது ‘நெல் செய்தி’ என்ற காலாண்டு இதழை வெளியிட்டு அவர் பேசியதாவது:

ஒரு நடிகராக இருந்தாலும் விவசாயியாக வாழ்வதே எனது நோக்கம். எனவே, டெல்லா பகுதியில் நிலம் வாங்கி விவசாயம் செய்யவுள்ளேன்.

எனக்கு விதை விதைக்கும் பணிகள் ரொம்ப பிடிக்கும்.

இன்ஜினியரிங் மற்றும் மெடிக்கல் துறை போன்று விவசாயத்தையும் ஒரு துறையாக மாற்றி சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

கடன் பிரச்சினைகள் வந்தாலும் விவசாயிகள் தற்கொலை முடிவுக்கு செல்ல கூடாது. தங்களின் பிரச்சினைக்கு அது ஒரு தீர்வாகாது” என்றார்.

சினிமா விநியோகத்தில் புரட்சி செய்யும் கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன்.!

சினிமா விநியோகத்தில் புரட்சி செய்யும் கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

iravi lcd monitor in chennai autosவிஜய் ஆண்டனி தயாரித்து நடித்த ‘பிச்சைக்காரன்’ படத்தை கே.ஆர்.பிலிம்ஸ் சார்பாக சரவணன் என்பவர் தமிழகம் முழுக்க விநியோகம் செய்தார்!.

மற்ற விநியோகஸ்தர்களை காட்டிலும் இவர் விநியோக முறையில் புதிய முறைகளை கடைப்பிடிப்பதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு தியேட்டர்களிலும் வசூல் விவரங்களை பெற்று சம்பந்தபட்ட தயாரிப்பாளருக்கு புள்ளி விவரங்களுடன் தெரிவித்து வருகிறாராம்.

இப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி படத்தின் விநியோக உரிமையை பெற்றார்.

இதனை புரமோசன் செய்யும் வகையில் 300 ஆட்டோக்களில் எல்.சி.டி. மானிட்டரை பொருத்தி  டிரெய்லர், பாடல் காட்சிகளை ஒளிப்பரப்பினார்.

இதனைத் தொடர்ந்து, ‘காக்கா முட்டை’ பட இயக்குனர் மணிகண்டன் இயக்கிய ‘குற்றமே தண்டனை’ படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளது கே.ஆர்.பிலிம்ஸ்.

எனவே, குற்றமே தண்டனை படத்தின் விளம்பரத்திற்காக 1,000 ஆட்டோக்களில் எல்.சி.டி. மானிட்டரை பொருத்த திட்டமிட்டுள்ளாராம் இந்த சரவணன்.

காட்சிப்படுத்துங்கள்.. காயப்படுத்தாதீர்கள்…’ இறைவி இயக்குனருக்கு ரெட் கார்டு..?

காட்சிப்படுத்துங்கள்.. காயப்படுத்தாதீர்கள்…’ இறைவி இயக்குனருக்கு ரெட் கார்டு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suresh Kamatchi Slams Karthik Subbaraja Iraiviகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இறைவி படம் நேற்று வெளியானது.

இதில் சில காட்சிகளில் சினிமா தயாரிப்பாளர்களை தவறாக சித்தரித்துள்ளதற்கும், அவதூறாகப் பேசியதற்கும் தற்போது எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

எனவே, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுக்கு ரெட் கார்டு விதிக்குமாறு தயாரிப்பாளர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.

எனவே இன்று தயாரிப்பாளருக்களுக்கான சிறப்பு காட்சியை படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஞானவேல் ராஜா ஏற்பாடு செய்துள்ளார்.

இதன்பின்னர் கார்த்திக் சுப்புராஜ் மீதான நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் கங்காரு, லட்டு ஆகிய படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனருக்கு அறிக்கை எழுதியுள்ளார். அதில்…

“உங்களின் இறைவி பார்த்தேன். படம் நன்றாக இருந்தது. எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு அற்புதம்.

சிறிய வயதிலேயே இயக்குநராகும் அதுவும் தயாரிப்பாளர் மனது வைத்ததால் இயக்குனராகும் பாக்கியம் பெற்றவர் நீங்கள். தற்போது 3வது படத்திலேயே முக்கியத்துவம் பெற்றுவிட்டீர்கள்.

இதற்கு காரணமான தயாரிப்பாளர்களை என்கிற ஒரு இனத்தையே விஜி முருகன் என்பவரின் கேரக்டர் மூலம் அவ்வளவு கேவலப்படுத்தியுள்ளீர்கள்.

தயாரிப்புக்கு முன்னாடி நான் என்ன பண்ணிக்கிட்டிருந்தேன்னு தெரியுமா? என்று கேட்பது முதல் தொடங்கி, ஒரு தயாரிப்பாளர் என்பவன் படு கேவலமானவன் போன்று சித்தரித்துள்ளீர்கள்.

தயாரிப்பாளருக்கு கதை ஞானமே கிடையாது என்பதைப் போலவும் காட்டியுள்ளீர்கள்.

உயிரைச் சிந்தி காசு எடுத்துட்டு ஒருவன் வருவான். அவன் காசில் படமெடுத்துவிட்டு அவனையே காறி உமிழ்வது போன்ற காரியத்தை எப்படி உங்களால் செய்ய முடிந்தது?

ஏவிஎம் சரவணன் சார் மாதிரி பெரியவர்கள் இப்படத்தைப் பார்த்தால் எப்படி நொந்து போவார்கள்?

தயாரிப்பாளர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியதை ஒரு தயாரிப்பாளனாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

படம் எடுத்து தோல்வி அடைந்து வாழ்க்கையின் அடித்தட்டுக்கே வந்துவிட்ட தயாரிப்பாளர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஆனால் நடுத்தெருவுக்கு வந்த இயக்குனர்களை உங்களால் காட்ட முடியுமா? பார்ப்போம்?

காட்சிப்படுத்துதல் முக்கியம்தான். ஆனால் காயப்படுத்துதல் கூடாது என்பதில் கவனமாக இருங்கள் கார்த்திக்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் சுரேஷ் காமாட்சி.

More Articles
Follows