‘டர்ட்டி அஜித் பேன்ஸ்’…; கஸ்தூரி பேச்சை கேட்பாரா அஜித்..?

‘டர்ட்டி அஜித் பேன்ஸ்’…; கஸ்தூரி பேச்சை கேட்பாரா அஜித்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith kasthuriபொதுமேடை மட்டுமில்லாமல் ட்விட்டரிலும் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வருபவர் நடிகை கஸ்தூரி.

சில தினங்களுக்கு முன் ரசிகர் கஸ்தூரிக்கு கெட்ட வார்த்தையில் ஒரு பதிவிட அதை கஸ்தூரி காப்பி செய்து ட்விட்டரில் பதிவிட்டார்.

‘டர்ட்டி கஸ்தூரி ஆன்ட்டி’ என்ற வார்த்தையுடன் அஜித் ரசிகர்கள் அதை டிரெண்ட் செய்தனர்.

நடிகை கஸ்தூரியும், அவர்களை திட்டி ‘டர்ட்டி அஜித் பேன்ஸ்’ என பதிவிட்டார்.

இந்த நிலையில் இப்படி நடந்துக் கொள்ளும் ரசிகர்களை அஜித் கண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையாவது அஜித் கேட்பாரா? என்பதையும் பார்ப்போம்.

BREAKING கற்பனையாக பேசவில்லை; மன்னிப்பு கேட்க முடியாது.. – ரஜினி

BREAKING கற்பனையாக பேசவில்லை; மன்னிப்பு கேட்க முடியாது.. – ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I never ask apologize says Super Star Rajinikanthகடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50 ஆண்டு விழாவில் ரஜினி பேசிய பேச்சு சர்ச்சையானது.

இதில் பெரியார் பற்றிய பேச்சுக்கு ரஜினி மீது தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இல்லை என்றால் அவரது வீடு முற்றுகை இடப்படும் என தந்தை பெரியார் திராவிட கழகம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஜினி வீடு முற்றுகை: பாதுகாப்பு அரண் அமைக்க ரசிகர்கள் திட்டம்

இந்த நிலையில் தற்போது சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார் ரஜினி.

அவர் பேசியதாவது…

பெரியார் பற்றி நான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.

பெரியார் பற்றி பேச்சு; ரஜினி மன்னிப்பு கேட்க தபெதிக வலியுறுத்தல்

1971ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தையே பேசினேன், கற்பனையாக பேசவில்லை.

பத்திரிகைகளில் வந்த செய்தி அடிப்படையிலேயே நான் பேசினேன்.” என அதிரடியாக பேட்டியளித்துள்ளார்.

I never ask apologize says Super Star Rajinikanth

ரஜினி வீடு முற்றுகை: பாதுகாப்பு அரண் அமைக்க ரசிகர்கள் திட்டம்

ரஜினி வீடு முற்றுகை: பாதுகாப்பு அரண் அமைக்க ரசிகர்கள் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Periyar controversial speech issue Rajini fans protect Poes Garden கடந்த வாரம் நடைபெற்ற துக்ளக் 50 ஆண்டு விழாவில் ரஜினி பேசிய பேச்சு சர்ச்சையானது.

முரசொலி முதல் பெரியார், ராமர் ஆகியோர் பற்றி பேசியிருந்தார்.

இதில் பெரியார் பற்றிய பேச்சுக்கு ரஜினி மீது தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு சிலர் ரஜினி உருவ பொம்மையை எறிக்கவும் திட்டமிட்டனர்.

மேலும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர், ரஜினி வீட்டை முற்றுகையிடப்போவதாக அறிவித்து இருந்த்தை பார்த்தோம்.

இளைஞர்கள் மத்தியில் செல்வாக்குடன் இருக்கிறார் பெரியார் : மீரா கதிரவன்

அந்த கழகத்தினர் வரும் ஜனவரி 23-ம் தேதி காலை 10 மணி அளவில் ரஜினி மன்னிப்பு கேட்காவிடில் போயஸ்கார்டனில் உள்ள ரஜினி வீட்டை முற்றுகை இட உள்ளதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் திடீரென போராட்டத்தை இன்று ஜனவரி 21ஆம் தேதி நடத்த திட்டமிள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த தகவலை அறிந்த ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பெரியார் பற்றி பேச்சு; ரஜினி மன்னிப்பு கேட்க தபெதிக வலியுறுத்தல்

மேலும் அந்த எதிர்ப்பை சமாளிக்க ரஜினி வீட்டுக்கு பாதுகாப்பு அரண் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

தங்களை தாண்டி எவரும் வர முடியாது என சவால் விடும் வகையில் சமூக வலைதளங்களில் செய்திகளை ரஜினி ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த போராட்டம் மக்கள் கவனத்தை ஈர்க்கும் எனத் தெரிகிறது.

Periyar controversial speech issue Rajini fans protect Poes Garden

டாப் ஸ்டார் பிரசாந்தை இயக்கும் மோகன் ராஜா..?

டாப் ஸ்டார் பிரசாந்தை இயக்கும் மோகன் ராஜா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mohan raja to direct Top Star Prasanth ‘தி பியானோ டியூனர்’ என்ற பிரெஞ்ச் படத்தின் தழுவலாக வெளியான ‘அந்தாதுன்’ என்ற ஹிந்தி படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

மேலும் சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் வென்றது.

இதில் ஆயுஷ்மன் குரானா, தபு நடித்திருந்தனர்.

எனவே இந்த படத்தின் ரீமேக்குக்கு பலத்த போட்டி உருவானது.

தனுஷ், சித்தார்த், ஆகியோர் போட்டியிட்ட நிலையில் இதன் உரிமையை டாப் ஸ்டார் பிரசாந்த் கைப்பற்றினார்.

இந்த நிலையில் இப்படத்தை தனி ஒருவன் இயக்குனர் மோகன் ராஜா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

Mohan raja to direct Top Star Prasanth

ஆர்யா நடிப்பில் ‘அரண்மனை 3’ படத்தை இயக்கும் சுந்தர் சி

ஆர்யா நடிப்பில் ‘அரண்மனை 3’ படத்தை இயக்கும் சுந்தர் சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sundar C and Arya team up for Aranmanai 3சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படம் பேய் ஹிட்டானது. இதில் வினய், ஹன்சிகா ஆகியோர் நடித்திருந்தனர்.

இதனையடுத்து அரண்மனை 2 படத்தையும் இயக்கினார். இதில் சித்தார்த் மற்றும் த்ரிஷா நடித்திருந்தனர்.

இந்த படமும் ஓரளவு வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராக உள்ளதாம்.

இதில் நடிக்க ஆர்யா மற்றும் ராஷி கண்ணாவிடமும் பேசி வருகிறார்களாம்.

இவர்களுடன் விவேக், யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கலைஞர்கள் ஒப்பந்தம் ஆனவுடன் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.

Sundar C and Arya team up for Aranmanai 3

மீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி: சந்தானம் – ஜான்சன்.கே – சந்தோஷ் நாராயணன்

மீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி: சந்தானம் – ஜான்சன்.கே – சந்தோஷ் நாராயணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Santhanamஇயக்குநர் ஜான்சன்.கே கதை, திரைக்கதை, வசனம் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து சென்ற வருடம் வெளியான படம் ‘A1’. இந்தப் படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகளும், வசனங்களும், பாடல்களும் சந்தானத்தின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் கவர்ந்தன. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்கள பயனாளர்கள், விமர்சகர்கள் என்று அனைவரது பாராட்டுகளையும் பெற்றது. தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் அனைவருக்கும் நல்ல லாபத்தை கொடுத்தது. சந்தானம் படங்களின் வசூலில் புதிய மகுடமாக அமைந்தது. அதே போல மீண்டும் ஒரு நகைச்சுவை விருந்தை எதிர்பார்க்கும் மக்களின் ஆசையை, இந்தக் கூட்டணி பூர்த்தி செய்யவுள்ளது. சந்தானம் – ஜான்சன்.கே – சந்தோஷ் நாராயணன் வெற்றி கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரியவுள்ளது. தற்போது இந்தக் கூட்டணியில் ஒளிப்பதிவாளராக ஆர்தர் கே.வில்சன் இணைந்துள்ளார்.
இந்தப் படத்தின் பூஜை இன்று (ஜனவரி 20) சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பூஜையில் சந்தானம், இயக்குநர் ஜான்சன்.கே, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் உள்ளிட்ட படக்குழுவினருடன் தயாரிப்பாளர் மதன் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக கே.குமார் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார்.

A1 படத்தைப் போலவே இந்தப் படமும் நல்ல நகைச்சுவை விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.

More Articles
Follows