பெரியார் பற்றி பேச்சு; ரஜினி மன்னிப்பு கேட்க தபெதிக வலியுறுத்தல்

பெரியார் பற்றி பேச்சு; ரஜினி மன்னிப்பு கேட்க தபெதிக வலியுறுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini should apologize for his controversial speech about Periyarஓரிரு தினங்களுக்கு முன் சென்னையில் துக்ளக் 50-வது ஆண்டு விழா நடைபெற்றது.

இதில் நடிகர் ரஜினிகாந்த கலந்துக் கொண்டார். அப்போது அவர் முரசொலி வைத்திருத்தால் திமுக காரன் என்றும் துக்ளக் படித்திருந்தால் அவர் அறிவாளி என்றும் பேசியிருந்தார்.

மேலும் பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. செருப்பு மாலை போடப்பட்டது என சிலவற்றை பேசியிருந்தார்.

இத்துடன் பத்திரிகையாளர்கள் பால் என்ற உண்மை செய்தியில் பொய் என்ற தண்ணீரை கலக்க கூடாது என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் பெரியார் குறித்த ரஜினியின் பேச்சுக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியது.

கோவை திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால் வருகின்ற ஜனவரி 23ல் (23.1.2020) காலை 10 மணிக்கு, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Rajini should apologize for his controversial speech about Periyar

எப்போ ரிலீசானாலும் படம் ஓடும் என ஓவரா நம்பாதீங்க. – எஸ்விசேகர்

எப்போ ரிலீசானாலும் படம் ஓடும் என ஓவரா நம்பாதீங்க. – எஸ்விசேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

S Ve Shekar slams Top heroes and their movie release datesஅமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்க, அருண் கதை எழுதியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் ஜோன்ஸ், நடிகை அமலாபால், இயக்குனர் கே.ஆர்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினருடன் நடிகர், இயக்குனர், அரசியல் பிரமுகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ், இயக்குனர் திருமலை ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் ஜோன்ஸ் பேசும்போது….

பல படங்களை ஜான் மேக்ஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளேன். மைனா படத்தில் இருந்து அமலாபால் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அதோ அந்த பறவை போல படத்தில் அவரின் அர்ப்பணிப்பு ரொம்ப உணர்வுப்பூர்வமானது.

இந்த விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் மனதார வரவேற்கிறேன். மிக வித்தியாசமான கதை. அமலாபாலிடம் இந்தக்கதையை சொன்னதும் ஓ.கே என்றார். கதைப் பிடித்ததால் இந்தப்படத்தை இயக்குநர் கே.ஆர்.வினோத் சிறப்பாக இயக்கி தந்துள்ளார்’ என்றார்.

எஸ்.வி.சேகர் பேசும்போது…

‘அதோ அந்த பறவை போல பாட்டு வரி தான் இப்படத்தின் தலைப்பு. நம்மிடம் இப்படியான படங்கள் வருவதற்கு இப்போது தான் வாய்ப்பு வந்துள்ளது. சினிமாவில் இரண்டு வகை. ஓடும் படம், ஓடாத படம் அவ்ளோ தான். சினிமாவில் ராமராஜன் பசுமாடு வைத்து பால் கறக்கும் படம் ஓடிவிட்டால் அதேபோல் பத்துப்படம் எடுப்பார்கள். ஏன் என்றால் இது வியாபாரம்.

நாங்கள் படம் எடுத்த காலத்தில் பத்து லட்சத்திலேயே படத்தை எடுத்து விடுவோம். நாம் சரியான பட்ஜெட்டில் படம் எடுக்க வேண்டும்.
இப்போது ஒரு நாளைக்கு நாற்பது லட்சம் ஆகிறது.

சினிமாவில் மட்டும் தான் உள்ளே வந்து நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. முதலில் சினிமாவை தெரிந்துகொண்டு உள்ளே வரவேண்டும். இந்தப்படத்தில் பெரிய பிளஸ் அமலாபால்.

அவருக்கு எல்லா மொழிகளிலும் மார்க்கெட் இருக்கு. இந்த படத்தை ரொம்ப பிரமாதமாக எடுத்திருக்கிறார்கள். அமலாபாலின் தையரித்தை நான் பாராட்டுகிறேன். சினிமாவிற்கு சென்சார் தேவையே இல்லை என்பது என் கருத்து. நம்பிக்கை வேற ஓவர் நம்பிக்கை வேற.

சரியான நேரத்தில் படத்தை வெளியீடுங்கள். என் படம் எப்போது வெளியானாலும் ஓடும் என்று ஓவர் நம்பிக்கை வைக்காதீர்கள். அதனால், இப்படத்தை அப்படி சரியான நேரத்தில் வெளியீட்டு வெற்றி காண வாழ்த்துகிறேன்’ என்றார்.

இயக்குனர் கே.ஆர்.வினோத் பேசும்போது, ‘என்னோட குடும்பத்தினர், நண்பர்கள் இல்லாமல் எனக்கு இந்த மேடை அமைந்திருக்காது. என் உழைப்பை நம்பி வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. மற்றும் என்னுடைய படக்குழுவினருக்கு நன்றி. எங்கள் படத்தில் அமலாபால் ஹீரோயின் இல்லை, ஹீரோ. அவரை அப்படித்தான் அழைத்து வருகிறேன். அமலாபாலுக்கு இந்தபடம் ரொம்ப சிறப்பா இருக்கும் என்று நம்புகிறோம். சண்டைக்காட்சிகள் எல்லாம் நாங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு அமலாபாலிடம் காட்டினோம்.

அதைப் பார்த்து பயிற்சி செய்து படத்திற்கு தயாரானார். அதை அப்படியே படப்பிடிப்பில் மிகச்சிறப்பாக செய்துவிட்டார். 60 அடி உயரமுள்ள மரத்தில் இருந்து இறங்குவது, சண்டை போடுவது என நடிப்பில் அமலாபால் அசத்தியுள்ளார். குறிப்பாக சேற்றுக்குள் இறங்கி மூச்சு விடாமல் நடிக்க வேண்டும் அதை நாங்கள் நினைத்து பார்க்க முடியாதளவிற்கு நடித்து கொடுத்தார். இந்த தைரியம் யாருக்கு வரும். எல்லாருக்கும் பிடிக்கும் வகையில் படம் சிறப்பாக வந்திருக்கிறது’ என்றார்.

S Ve Shekar slams Top heroes and their movie release dates

வினோத் & பிரியங்கா இணையும் ‘தி மாயன்’; ஆங்கிலத்திலும் வெளியாகிறது

வினோத் & பிரியங்கா இணையும் ‘தி மாயன்’; ஆங்கிலத்திலும் வெளியாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash and Adhik Ravichandran launched first look of English film The Mayanஇசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து “தி மாயன்” ஆங்கில படத்தின் 1st லுக் ஐ வெளியிட்டுள்ளனர்.

இப்படம் தமிழிலும் ஆங்கிலத்திலும் நேரடியாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுவே இந்தியாவில் இருந்து எடுக்கப்படும் முதல் கமர்ஷியல் ஆங்கில படம். இதை தயாரித்து இயக்கியுள்ளார் ஜெ.ராஜேஷ் கண்ணா.

இவர் சன் தொலைக்காட்சியில் நடிகர் விஷாலை வைத்து நாம் ஒருவர் என்னும் நிகழ்ச்சியை இயக்கினார்.
வினோத் மோகன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கேங் லீடர் என்னும் தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாகவும் மற்றும் டாக்டர் என்னும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும் நடித்த பிரியங்கா மோகன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளனர்.

இதுவே அவருக்கு முதல் படமாகும்.

ஜி.வி பிரகாஷ் தமிழில் தயாரிக்கப்பட்ட மாயன் படத்தில் ஒரு பாடலை பாடவிருக்கிறார். சிம்பு மற்றும் அருண்ராஜா காமராஜுரும் ஒரு பாடலை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை பாக்ஸ் அண்ட் க்ரோவ் இந்தியா மற்றும் ஜி. வி.கே. எம் எழிபண்ட் பிட்சர் மலேஷியா இணைந்து தயாரித்துள்ளது. கணேஷ் மோகன சுந்தரம் இப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஆவர்.

GV Prakash and Adhik Ravichandran launched first look of English film The Mayan

தி மாயன்

‘தலைவி’ பட அரவிந்த்சாமியின் எம்ஜிஆர் லுக் வெளியானது

‘தலைவி’ பட அரவிந்த்சாமியின் எம்ஜிஆர் லுக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

First look of Aravind Swamy as MGR in Thalaivi movieதமிழ்நாட்டின் தலைசிறந்த முதல்வராக விளங்கிய புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் அவர்களின் 103 வது பிறந்த நாளில் தலைவி படத்தில் எம். ஜி. ஆராக நடிக்கவுள்ள அரவிந்த்சாமியின் கதாபாத்திர ஃபர்ஸ்ட்லுக்கை படக்குழு இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

தலைவர் எம். ஜி. ஆரின் பிறந்த நாளில் இந்த ஃபர்ஸ்ட்லுக்கை அறிமுகப்படுத்துவது தமிழ்நாட்டின் பொற்கால ஆட்சியை தந்த அவருக்கு செலுத்தும் இதயப்பூர்வமான அஞ்சலியாக இருக்குமென கருதுகிறது படக்குழு.

இயக்குநர் விஜய் கூறியதாவது. .

முன்னமே சொன்னதுபோல் “தலைவி” படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது என் வாழ்வில் எனக்கு கிடைத்த வரம் ஆகும். தமிழ்நாட்டினை இன்றைக்கு இருக்கும் இந்த உயர்நிலைக்கு மாற்றிய, இரண்டு சகாப்தங்களின் வாழ்வை நெருங்கி பார்த்து, அதனை திரைவடிவமாக்குவது எவருக்கும் கிடைத்திராத அரிய வாய்ப்பு.

இது ஒரு மிகப்பெரிய அனுபவம். இதிலுள்ள மிகப்பெரும் சவால் என்பது, இப்படத்திற்கு சரியான நடிகர்களை தேர்ந்தெடுப்பதே. நிஜத்தில் வாழ்ந்தவர்களின் தோற்றத்தை பிரதிபலிப்பதுடன், திரையில் அந்த ஆளுமையை மறுவுருவாக்கம் செய்வது மிக அவசியம் ஆகும்.

நடிகை கங்கனா ரனாவத்தை முதல்வர் புரட்சிதலைவி ஜெயலலிதா பாத்திரத்திற்கு தேர்வு செய்த பின், எம். ஜி. ஆரின் பாத்திரத்திற்கு பலரை கருத்தில் கொண்டு முயன்று பார்த்தோம்.

இறுதியாக அரவிந்த்சாமி மிகப்பொருத்தமானவர் என அவரை தேர்ந்தெடுத்தோம். இன்றும் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர் எம். ஜி.ஆர். அவரை திரையில் கொண்டுவருவது எளிதான செயல் அல்ல.

அவரைப் பற்றிய அத்தனை தகவல்களையும் திரட்டி அரவிந்த்சாமியை அதேவிதமான லுக்கிற்கு மாற்றினோம். எங்களை விட அவர் இந்தக் கதாப்பாத்திரத்தின் மீது அதிக காதல் கொண்டு தன்னை பல விதங்களில் தயார் செய்து கொண்டார்.

திரையில் அந்த ஆளுமைக்கு நியாயம் செய்யும்படியான உழைப்பை நாங்கள் அனைவரும் தருவோம். பாரத ரத்னா வாங்கி, இந்தியாவின் மிகப்பெரும் தலைவராக விளங்கிய எம்.ஜி. ஆரை திரையில் வடிப்பது எங்கள் அனைவரின் பாக்கியம் என்றார்.

Vibri Motion Pictures நிறுவனம் Karma Media Entertainment நிறுவனத்துடன் இணைந்து “தலைவி” படத்தை தயாரிக்கிறார்கள். 2020 ஜூன் 26 அன்று படம் திரைக்கு வரவுள்ளது.

First look of Aravind Swamy as MGR in Thalaivi movie

பிரபாஸ் & பூஜா ஹெக்டே இணையும் புதிய படம் தொடங்கியது

பிரபாஸ் & பூஜா ஹெக்டே இணையும் புதிய படம் தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Much awaited Rebel Star Prabhass movie kick startsஇந்தியா முழுதும் திரும்பிப் பார்த்த வெற்றியை தந்த “பாகுபலி”, “சஹோ” படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் தன் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார்.

கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 17 முதல் துவங்கவுள்ளது.

“ரிபெல் ஸ்டார்” பிரபாஸின் ரசிகர்கள் இச்செய்தியால் பெரும் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள்.

கோபி கிருஷ்ணா மூவிஸ் தெலுங்கு திரையுலகின் மாரியாதைக்குரிய, மிகப்பெரும் நிறுவனம் ஆகும். பழபெரும் நடிகர் ஶ்ரீ கிருஷ்ணம் ராஜு இப்படத்தினை தனது மேற்பார்வையில் வழங்குகிறார்.

மிகப்பெரும் பட்ஜெட்டில் இந்தியா முழுமைக்குமான படைப்பாக, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது. மேலும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படவுள்ளது.

கோபி கிருஷ்ணா மூவிஸ் நிறுவனம் UV Creations நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். ஸ்டைலீஷ் ஆக்‌ஷன் திரில்லரான “ஜில்” படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராதா கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்திற்காக பிரமாண்டமான அரங்கம் அன்னபூர்னா ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் நடிகர் பிரபாஸ் நாயகனாக நடிக்க பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார்.

தொழில் நுட்ப குழு விபரம்

எழுத்து, இயக்கம் – ராதா கிருஷ்ணா

ஒளிப்பதிவு – மனோஜ் பரமஹம்ஷா

படத்தொகுப்பு – ஶ்ரீகர் பிரசாத்

தயாரிப்பு வடிவமைப்பு – ரவீந்த்ரா

வழங்குபவர்கள் – ஶ்ரீ கிருஷ்ணம் ராஜு அவர்களின் கோபி கிருஷ்ணா மூவிஸ்.

தயாரிப்பு – வம்சி, பிரமோத் மற்றும் UV Creations.

Much awaited Rebel Star Prabhass movie kick starts

நடிகராகி இயக்குனராக மாறும் ஸ்டண்ட் மாஸ்டர் STUN சிவா

நடிகராகி இயக்குனராக மாறும் ஸ்டண்ட் மாஸ்டர் STUN சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Stun Siva shares his Cinema Industry experienceStun சிவா தமிழ் சினிமா உலகில் இந்தப்பெயருக்கு அறிமுகம் தேவையில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் 80க்கும் மேலான படங்களில் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார். “சாம்பியன்” படம் அவரை ஒரு மிகப்பெரும் நடிகராக மாற்றியிருக்கிறது.

“வேட்டையாடு விளையாடு”, “கோலி சோடா” படங்களில் நடித்திருந்தாலும் சுசீந்திரனின் “சாம்பியன்” படத்தில் முழு வில்லனாக நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

ஆனந்த விகடன் விருது வாங்கி இந்த ஆண்டின் சிறந்த வில்லனாக கலக்கியிருக்கிறார். தற்போது தன் மகனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

அவருடன் ஒரு நேர்காணலுக்காக சந்தித்தபோது

இனி எப்படி சண்டைப்பயிற்சி இயக்குநரக பணியாற்றுவீர்களா இல்லை நடிப்பு மட்டும் தானா ?

இல்லை இரண்டுமே செய்வேன். சண்டைப்பயிற்சியாளராகவும் பணியாற்றுவேன். நடிக்கும் வாய்ப்பு வந்தாலும் நடிப்பேன்.

உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன், எப்படி சினிமாவுக்குள் வந்தீர்கள் ?

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமெ சென்னை தான். எனக்கு 15 வயசுலருந்தே படிச்சிட்டே வேலை செய்யனும்கிறது என்னோட ஆர்வம்
10 வது படிக்கும்போதே பைக் மெக்கானிக் கடையில வேலை பார்த்தேன். அங்க ஃபைட்டர்ஸ் எல்லாம் பைக் சரி பண்ண வருவாங்க. அவங்க பழக்கம் மூலமா ஸ்டண்ட் மேல ஆர்வம் வந்தது.

எங்க மாமா எம் ஜி நடராஜன் யூனியன்ல இருந்தாரு. அவர் மூலமா ஸ்டண்ட் யூனியன்ல சேர்ந்தேன். 1989 ல இருந்து சினிமாவுல வேலை செய்திட்டு இருக்கேன். “அன்புக்கட்டளை” ராமராஜன் நடிச்ச படம் தான் முதல் படம் ராம்போ ராஜ்குமார் கூட வேலை பார்த்தேன்.

அப்பல்லாம் உதவியாளராக ஆகவே 5 வருஷம் ஆகும். நிறைய படங்கள் வேலை பார்த்திருக்கேன் ஸ்டண்ட் மாஸ்டரா 1997 தான் முதல் படம். விஜய் சாரோட லவ் டுடே படம் பண்ணினேன். Stun சிவாங்கிற பேர் அந்தப்படத்தில தான் வந்தது.

ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் மட்டும் தான் அரசியல்வாதிகளுக்கு அப்புறம் அதிக அடைமொழி வச்சிக்கிறாங்க அது ஏன் ?

சூப்பர் சுப்பராயன் மாதிரி ஆரம்பகட்டத்தில இருந்தே அந்த மாதிரி வந்திட்டு இருந்தது. எனக்கு அடைமொழி வைக்கனும்கிற மாதிரி எண்னம் எல்லாம் இருந்தது இல்ல. கே எஸ் ரவிக்குமார் சாரோட முதல்படத்தில இருந்தே எனக்கு அவரைத் தெரியும். அவர் தான் என்னோடபடத்தில பண்ணுறனு சொல்லி உனக்கு ஒரு பேர் இப்பவே வைக்கிறேன்னு சொல்லி stun சிவான்னு பேர் வச்சார்.

இதுவரை எத்தனை படங்கள் பண்ணியிருக்கீங்க ?

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 80க்கும் அதிகமா படங்கள் பண்ணியிருக்கேன். “கண்ணுக்குள் நிலவு” படத்துக்கு மாநில விருது வாங்கியிருக்கேன். பிதாமகன் படத்துக்கு தேசிய விருது கிடைக்கும்னு எல்லோரும் சொன்னாங்க. ஆனா கிடைக்கல ஆனா கூடிய சீக்கிரம் தேசியவிருது வாங்கிடனும்.

நடிப்புக்குள்ள எப்படி வந்தீங்க ?

சாதாரண ஃபைட்டரா இருக்கும்போதே நடிக்க எனக்கு நிறைய ஆர்வம் இருந்தது. ஷீட்டிங்ல திடீர்னு ஏதாவது ஸீன்ல பத்து பேர் வாங்கனு கூப்பிடுவாங்க. எல்லாரும் ரெடியாக போனா, நான் உதவி இயக்குநர பார்த்து டயலாக் இருக்கானு கேட்டு அத மனப்பாடம் பண்ணி ரெடியா இருப்பேன். மத்தவங்க சொதப்பும்போது நான் பண்றேன்னு சொல்லி கேட்டு வாங்கி நடிப்பேன். அப்பல்லருந்தே நடிப்பு மேல அவ்வளவு ஆர்வம்.

பிதாமகன்ல நடிக்கும்போது விக்ரம் சார மிரட்டுற மாதிரி ஒரு ஸீன் அதுல ரிகர்சல் பண்ணும்போது பாலா நடிக்கிறியானு கேட்டாரு. என்ன அந்த ஸீன்ல நல்லா தெரியிற மாதிரி காட்டினார்.

அதுக்கப்புறம் கமல் சாரோட “வேட்டையாடு விளையாடு” படத்துல முதல் ஸீன் பண்ணினேன். பெரிய அறிமுகம் அது மூலமா கிடச்சுது. “கோலி சோடா” படத்தில விஜய் மில்டன் கூப்பிட்டு நடிக்க வச்சார். அத பார்த்து தான் சுசீந்திரன் சாம்பியன் படத்தில முழு வில்லனா அறிமுகப்படுத்தினார்.

இப்ப ஆனந்த விகடன்ல அதுக்கு விருது வாங்கிருக்கேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னும் நல்ல இயக்குநர் படத்திலயும் எல்லா நடிகர்களோடவும் படம் பண்ணணும்.

ஸ்டண்ட் மாஸ்டரா என்னென்ன படங்கள் பண்ணிட்டு இருக்கீங்க ?

ஜெயம் ரவியோட “பூமி” படம் அப்புறம் மகிழ் திருமேனி இயக்கத்துல உதயநிதி நடிக்கிற படம் ஒன்னு பண்றேன். தெலுங்கில் மோகன்பாபு சாரோட மகன் படம் ஒன்னு பண்றேன். வி.வி.விநாயக் சார் படம், பெல்லங்கொண்டா சுரேஷ் மகன் சாய் படம் பண்றேன்.

நடிப்புல என்னென்ன படம் ?

தெலுங்கில ரவிதேஜா நடிப்பில “கிராக்” படத்தில வில்லனா கமிட்டாகி நடிச்சிட்டு இருக்கேன்.

இப்ப இயக்குற படம் பற்றி ?

என் பையன் கெவின் ஹீரோவா நடிக்க “கராத்தேக்காரன்” படத்த இப்ப இயக்கிட்டு இருக்கேன். முழுக்க ஆக்‌ஷன் கலந்த படமா இருக்கும்.

உங்க காதல் கதை பற்றி சொல்லுங்களேன் ?

அது பெரிய கதை. அவங்க பேர் லேனி. அவங்க வியட்நாமிஸ். பைக் மெக்கானிக்கா வேலை பார்த்தப்போ சினிமால பைக் ஸீன் மட்டும் நடிக்க வைப்பாங்க. அந்த ஸீன் முடிஞ்சது அனுப்பிடுவாங்க. முறையா ஃபைட் கத்துக்கனும்னு நினைச்சேன்.

நண்பர் மூலமா ஸ்டன்ட் சொல்லித்தர தன் அப்படிங்கிறவர்கிட்ட சேர்ந்தேன் அவரோட பொண்ணு தான் லேனி காதலாகி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கெவின் ஸ்டீபன் இரண்டு பசங்க இப்ப மூத்த பையன் ஹீரோவா நடிக்கிறார். இரண்டு பேருக்கும் ஸ்டண்ட் தெரியும் படங்கள்ல எனக்கு உதவியா இருக்காஙக.

அப்ப வியட்நாமிஸ் பேசுவீங்களா ?

இல்ல ஒரு சில வார்த்தைகள் மட்டும் தான் தெரியும். வீட்டில் லேனி நல்லா தமிழ் பேசுவாங்க. அவங்களோட தாத்தா இந்தியன் இங்க இருந்தவர் தான். இங்க பரம்பரையா இருந்தவங்க அவங்க. காரைக்குடில இருந்தவங்க.

ஸ்டண்ட் ஸீன்ஸ் ஒவ்வொரு மொழியிலும் வேறவேற மாதிரி எடுப்பீங்களா என்ன வித்தியாசம் ?

தமிழ், தெலுங்கு இரண்டுக்குமே நிறைய வித்தியாசம் இருக்கு. ஒரு ஸ்கிரிப்ட் தான் ஃபைட் எப்படினு முடிவு பண்ணும். தெலுங்கு படத்தில அடிச்சா கதவ உடச்சட்டு வெளில பறந்து விழுவாங்க. தமிழ்ல அப்படி கிடையாது. திரைக்கதைதான் எல்லாத்தையும் தீர்மானிக்குது.

ஸ்டண்ட் ஏன் தத்ரூபமா இருக்கிறதே இல்ல ?

அப்படி கிடையாது நான் பண்ணின எந்தப்படம் வேணாலும் எடுத்துக்கங்க ஒரிஜினலா இருக்கும். தெலுங்கு படமாவே இருந்தாலும் தத்ரூபமா இருக்குற மாதிரி தான் பண்ணுவேன். பிதா மகன் பார்த்தா தெரியும் அந்தப்படத்தில ஹீரோ வெட்டியான் அவன் அடிச்சா எப்படி இருக்குமோ, அது மாதிரி பண்ணிருப்பேன் ஆனா எல்லாப்படத்திலயும் அதப்பண்ண முடியாது. கதை என்ன கேட்குதோ

அதுக்குள்ள எப்படி பண்ணனுமோ அதத்தான் பண்ண முடியும்.

பிதாமகன் படத்தில விக்ரம் சங்கீதா கிட்ட துடப்பத்துல அடி வாங்குவாரே, அது நீங்க எடுத்துததுதானா?

ஆமா அத நான் தான் எடுத்தேன் அதுல ஒரிஜினல் துடப்பத்துல முகத்திலயே அடிப்பாங்க. அத எடுக்கும் போது எங்களுக்கே ரொம்ப கஷ்டமா இருந்தது. ஸீனவிட ஒரு நடிகனுக்கு முகத்தில தொடர்ந்து அடி விழும்போது என்ன ஆகும். ஆனா விக்ரம் சலிக்கவே இல்ல. பாலாவுக்கு எல்லாம் ஒரிஜனலா இருக்கணும்.

சண்டை எல்லாமே நேச்சுரலா இருக்கணும் யாரும் கொஞ்ச காலத்துக்கு அந்த மாதிரி முயற்சி கூட பண்ணக்கூடாதுனு முடிவு பண்ணி பண்ணின படம் தான் பிதாமகன்.

எந்த ஹீரோ நல்லா ஃபைட் பண்ணுவாரு ?

ஃபைட் பண்ணத்தெரியாத ஹீரோவ கூட ஃபைட் பண்ண வைக்கிறது தான் ஸ்டண்ட் மாஸ்டர் வேலை. என்ன பொறுத்தவரை எல்லா ஹீரோவும் நல்லாவே ஃபைட் பண்ணுவாங்க.

நாம அவங்களுக்கு தேவையான பாதுகாப்பு செய்து கொடுத்தோம்னா போதும். எல்லா ஹீரோவுக்கும் ஃபைட்னா பிடிக்கும் ஃபைட் பண்ண ஆர்வமா இருப்பாங்க.

இப்ப படங்கள்ல ஹாலிவுட் ஸ்டண்ட் கோரியோகிராபர் பண்றாங்க இத பற்றி என்ன நினைக்கிறாங்க ?

நான் கூட நிறைய வெளிநாடுகள்ல போய் படம் பண்ணிருக்கேன். தமிழ் “பில்லா” தெலுங்குல பிரபாஸ் வச்சு எடுத்தப்ப நான் தான் வெளிநாட்ல நடக்கிற ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாம் பண்ணேன்.

தமிழ் பில்லா படத்த வாங்கினு ஒரு வெளிநாட்டுக்காரர் பண்ணி இருந்தார். அவர விட நான் நல்லாவே பண்ணிருந்தேன். அவங்கள பொறுத்தவர அவங்க கிட்ட நிறைய உபகரணங்கள் இருக்கும்.

அவங்க நல்லாவே ஃபைட் கோரியோகிராப் பண்ணுவாங்க. ஆனா அவங்க நம்ம ஹீரொவோட மாஸ் கதை புரிஞ்சு பண்ண மாட்டாங்க. அத நாம மட்டும் தான் பண்ண முடியும்.

தெரியாத ஹீரோவுக்கு ஃபைட் சொல்லிக் கொடுத்து அவர்கிட்ட அடி வாங்கிற மாதிரி பண்ணும்போது நாம ஹீரோவாகலாம்னு தோணிருக்கா ?

அப்படி நினைச்சதில்ல. ஆரம்பகாலங்கள்ல எல்லாருக்கும் தோணலாம். ஆனா ஒரு ஃபைட் மாஸ்டர் வேலையே ஹீரோவ டிரெய்ன் பண்றதுதான். ஒரு இயக்குநர் கஷ்டப்பட்டு ஒரு படத்தை உருவாக்கும்போது அவர் கூட்டி வர்ற ஹீரோவ நம்ம எப்படி டிரெய்ன் பண்ணி மாஸா காட்டுறோம்கிறது தான் நம்ம வேலை.

ஃபைட் பண்ணும்போது அடிபட்டா அதற்கான சரியான நிவாரணங்கள் இன்ஷ்யூரன்ஸ் எல்லாம் இருக்கா ?

ஃபைட் பொறுத்தவரை இன்ஷ்யூரன்ஸ் கிடையாது. ஆனா எங்க யூனியன்ல அத பண்றோம். அப்புறம் அந்த பட தயாரிப்பாளர் இயக்குநர், ஹீரோக்கள் எல்லோருமே பார்த்துப்பாங்க. விஜய் சார் கூட ஒரு படத்தில ஒரு ஃபைட்டருக்கு 1 1/2 லட்சம் கொடுத்தாரு.
எங்க யூனியன்ல மூலமா அடிபடறவருக்கு தேவையான எல்லாமே பார்த்துக்கிறோம்.

அடுத்து என்ன திட்டங்கள் ?

என் பசங்க கெவின், ஸ்டீபன் ரெண்டு பேரும் ஸ்டண்ட் யூனியன் மெம்பர இருக்காங்க. அவங்க படம் பண்ணனும். இப்ப இவங்க என்னோட படங்கள்ல உதவியா இருக்காங்க. இவங்க இருக்கும்போது நிறைய யூத்தோட ஐடியா கிடைக்குது. “பூமி” படத்தில மூணு பேரும் சேர்ந்து புதுசா பண்ணிருக்கோம். ஸ்டீபன் யூத் ஒலிம்பிக் தேர்வில இந்தியா சார்பா அவர் மட்டும் தான் கராத்தேவுக்காக தேர்வாகியிருந்தார்.

நிறைய திறமை இருக்கு. இவங்களோட இணைஞ்சு இன்னும் ஆக்‌ஷன்ல நிறைய புதுமையா பண்ணனும்.

இவ்வாறு ஸ்டண் சிவா பேட்டியளித்தார்.

Stun Siva shares his Cinema Industry experience

More Articles
Follows