இயக்குனர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிகை ஜோதிகா

இயக்குனர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிகை ஜோதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Bala and Jyothikaதாரைதப்பட்டை பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குனர் பாலா இயக்க ஜோதிகா நடிக்கும் புதிய படமொன்றை EON Studios என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் பாலாவின் B Studios நிறுவனத்துடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது.

இன்னும் பெயரிப்படாத இப்படத்தில் மிகவும் பிரபலமான கதாநாயகன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் யார் என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும் என தயாரிப்பு தரப்பு கூறுகிறது.

மார்ச் 1 முதல் துவங்கும் இப்படத்தினை பற்றிய விரிவான செய்திகள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

தமிழ்நாடு மாநில பளு தூக்கும் போட்டியில், ரம்யா வெண்கல பதக்கத்தை வாங்கி இருக்கிறார்

தமிழ்நாடு மாநில பளு தூக்கும் போட்டியில், ரம்யா வெண்கல பதக்கத்தை வாங்கி இருக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

image1தொகுப்பாளினி, நடிகை என்ற அடையாளங்கள் ரம்யாவிற்கு ஒருபுறம் இருக்க, தற்போது பளு தூக்கும் போட்டியிலும் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து இருக்கிறார் அவர். தமிழ் நாட்டில் நடைபெற்ற மாநில அளவிலான ஐந்தாவது பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்று இருக்கிறார் நடிகை ரம்யா.

“பல முன்னணி வீர்கள் பங்கேற்ற இந்த பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அத்தகைய வீரர்களோடு போட்டியில் கலந்து கொள்வது மூலம், நம்முடைய தன் நம்பிக்கை அதிகரிக்கும். 27.5 கிலோ பளு தூக்கும் பிரிவில் ஆரம்பித்து, 32.5 கிலோ பிரிவிற்கு முன்னேறி தற்போது 35 கிலோ பிரிவில் நான் பங்கேற்று இருக்கிறேன். போட்டி சற்று கடினமாக இருந்தாலும், என்னுடைய விடா முயற்சியால் தற்போது இந்த மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இருக்கிறேன். இதன் மூலம் நான் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்ச்சி பெற்று இருக்கிறேன். என்னுடைய நாட்டிற்காக விளையாடுவதற்காக, நான் கடினமான பயிற்சியில் ஈடுபட இருக்கிறேன்” என்று உற்சாகமாக கூறுகிறார் நடிகை ரம்யா.

குற்றம் 23 படத்தினை வெளியிடும் அக்ராஸ் பில்ம்ஸ்

குற்றம் 23 படத்தினை வெளியிடும் அக்ராஸ் பில்ம்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

IMGL8492வியாபாரம், வர்த்தகம் மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளில் ஏறக்குறைய 12 வருட கால சிறந்த அனுபவத்தை பெற்று, தற்போது திரையுலகின் வர்த்தக உலகில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து இருக்கிறார், ‘அக்ராஸ் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் பிரபு வெங்கடாச்சலம். முன்னதாக வேறொரு பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி, தரமான கதையம்சம் நிறைந்த படங்களை மட்டுமே தேர்வு செய்யும் யுக்தியை நன்கு அறிந்து கொண்ட பிரபு வெங்கடாச்சலம், ‘டூ மூவி பஃப்ஸ்’ நிறுவனத்தோடு கைக்கோர்த்து ‘திட்டம் போட்டு திருடற கூட்டம்’ படத்தை தற்போது தயாரித்து வருகிறார். அதுமட்டுமின்றி ‘கொடி’ திரைப்படத்தின் சேலம் பகுதி விநியோக உரிமையை வாங்கி வெளியிட்டது மூலம், விநியோக துறையிலும் கால் பதித்து இருக்கிறார். அந்த வெற்றியை தொடர்ந்து, திரையுலகின் மூத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவோடு இணைந்து, ‘பறந்து செல்ல வா’ படத்தையும் தமிழகத்தில் பிரபு வெங்கடாச்சலம் விநியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

விநியோக துறையில் நல்லதொரு பெயரை சம்பாதித்து இருக்கும் ‘அக்ராஸ் பிலிம்ஸ்’ தற்போது ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை வாங்கி இருக்கின்றனர்.

நான் திரையுலகில் அடியெடுத்து வைத்தவுடன், வர்த்தக வெற்றிக்கு தேவையான ஒவ்வொரு சிறப்பம்சங்களையும் நான் கற்று கொண்டேன். திரைப்பட விநியோகதிற்கு தேவையான தளவாடங்களை நன்கு தெரிந்து கொள்வது தான் ஒரு தரமான தயாரிப்பாளருக்கு அழகு. தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாட தயாராகி கொண்டிருக்கும் நாம், தயாரிப்பு, விநியோகம் என இரண்டு துறைகளிலும் சிறந்து விளங்கிய சில மூத்த திரையுலகினரை இந்த தருணத்தில் நினைத்து பார்க்க வேண்டும். அவர்கள் கையாண்ட யுக்தியை தற்போது தமிழ் திரையுலகில் மீண்டும் நிலை நாட்டி, தயாரிப்பு மற்றும் விநியோக துறைகளில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்கள் ‘அக்ராஸ் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் முக்கியமான குறிக்கோள். திறமையான கலைஞர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது மட்டுமில்லாமல், வர்த்தக வெற்றிக்கு தேவையான சிறப்பம்சங்களை உள்ளடக்கி இருக்கும் படங்களை விநியோகம் செய்ய வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றது ‘அக்ராஸ் பிலிம்ஸ்’. விநியோக துறையை பொறுத்த வரை, வெளிப்படையாக இருப்பது மிக முக்கியம். நிச்சயமாக தயாரிப்பாளர்கள் அதனை புரிந்து கொண்டு ஏற்று கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அருண் விஜய் நடிப்பில், அறிவழகன் இயக்கி இருக்கும் குற்றம் 23 திரைப்படம், தரமான கதை களத்தில் உருவாகி இருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லுவேன். ஒரு நடிகராக அருண் விஜய் என்னை மிகவும் கவர்ந்து இருக்கிறார். ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்திற்கு பிறகு, அருண் விஜயின் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் குற்றம் 23 என்பதால் , இந்த படம் வர்த்தக உலகில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி வருகிறது. ஒரு படத்தை உருவாக்குவதில் ஆரம்பித்து, அதனை ரசிகர்களிடத்தில் அழகாக கொண்டு போய் சேர்க்கும் வரை, இயக்குநர் அறிவழகன் பின்பற்றும் பாணி என்னை மிகவும் கவர்ந்து இருக்கின்றது. குற்றம் 23 படத்தை பார்த்த பிறகு, அவர்கள் மீது இருந்த நம்பிக்கை எனக்கு மேலும் வலு பெற்று இருக்கிறது. நிச்சயமாக மார்ச் 3 ஆம் தேதி வெளியாகும் குற்றம் 23 திரைப்படம் ஒவ்வொரு ரசிகரையும் கவரும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பிரபு வெங்கடாச்சலம்.

பாவனா விஷயத்தில் நடிகர் சங்கத்தின் ரியாக்சன் என்ன ?

பாவனா விஷயத்தில் நடிகர் சங்கத்தின் ரியாக்சன் என்ன ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

C5FyR35VMAA-28nசமீபத்தில் சகோதரி பாவனா அவர்களுக்கு நடந்த சம்பவம் குறித்து அனைவரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். உண்மையில் எங்களுக்கு இது மிகவும் வருத்தமான மிகவும் சங்கடமான விஷயமாகும். அவர்களுக்கு நடந்ததற்காக மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த பெண் இனம் இன்று எந்த அளவிற்கு ஒரு மனிதாபிமானமற்ற ஆண்களின் கையில் தவறாக பயன்படுகிறது என்று எண்ணும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. நேற்றைக்கு முன்தினம் இரவு படபிடிப்பு முடித்து தன்னுடைய காரில் பயணம் செய்த போது ஓட்டுநரின் உதவியுடன் திடீரென இரண்டு, மூன்று நபர்கள் பாவனா அவர்களை கடத்தி சென்று பலவந்த படுத்தியதாக செய்தி வந்தது. நேற்று காலையில் நாங்கள் ஊடகங்கள் மூலமாக செய்தி கிடைத்தவுடன் இது உண்மையானதாக இருக்க கூடாது என்று தான் எங்களுக்குள் பேசிக்கொண்டோம். பின்பு உடனடியாக மலையாள நடிகர் சங்கம் ஈடவேல பாபு அவர்களை தொடர்புகொண்டு நாங்கள் கேள்விப்பட்டு அறிந்த இந்த விஷயம் உண்மைதானா என்று பதட்டத்துடன் கேட்டோம் அதற்கு அவர் உண்மைதான் என்று கூறினார். நேற்று இரவே போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இன்று அதன் விசாரணை தொடங்கிவிடும் நாம் சிறிது நேரம் காத்திருப்போம் என்று கூறினார். நேற்று மாலை வரை அவர்களை தொடர்புகொண்டு அங்கு நடக்கும் நிகழ்வுகளை அறிந்து வந்தோம். பின்பு உடனடியாக கேரளா முதலமைச்சர் அவர்களுக்கும், காவல்துறைக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் தொலை நகல் ஒன்றை அனுப்பியுள்ளோம். அதில் இந்த சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணவேண்டும் என்று வலியுறுதிருந்தோம்.
நேற்று மதியம் 3 மணியளவில் பாவனாவிடம் சிறிய விசாரணை நடந்தது அந்த விசாரணையின் முடிவுக்கு பிறகு நடந்த சம்பவங்கள் அனைத்தும் உறுதிபடுத்தபட்டுள்ளது. அதனுடைய தொடர்ச்சியாக மூன்று நபர்கள் கைது செய்யபட்டுள்ளனர் மேலும் அந்த பெண்ணின்னுடைய ஓட்டுனர் கைது செய்யபடுவார்.
எங்களின் வேண்டுகோள் அந்த பெண்ணை கடத்தியது பணத்திற்காகவா அல்லது முன்விரோதம் காரணமாகவா அல்லது பழிவாங்கும் நடவடிக்கையா ?? கைதானவர்கள் இந்த பின்னணியில் மட்டும்தான் உள்ளார்களா அல்லது வேறு யாரும் உள்ளார்களா என்றும் அப்படி வேறு யாராவது இருந்தால் அவர்கள் சமூகத்தில் உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. இந்த சம்பவத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கதின் சார்பில் மிக பெயரிய அளவில் கண்டனத்தை தெரிவித்துகொள்கிறோம்.

பின்பு ஒட்டுமொத்த பெண்களுக்கும் நாங்கள் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், இன்று தங்களை பாதுகாத்துக் கொள்ள தொழில்நுட்பங்கள் அதிகமாக உள்ளது. மேலும் நாம் பயணம் செய்யும் போது நமது பாதுகாப்பை நாம் தான் பார்த்துக்கொள்ளவேண்டும். நடிகர், நடிகைகள் படபிடிப்பு முடிந்து திரும்பும் போது அதிக நேரம் பயணம் செய்யவேண்டிய சூழ்நிலை உள்ளது. டிரைவரின் உதவியுடன் தான் நாம் அனைவரும் பாதுகாப்பாக பயணம் முடியும்.
ஒரு பயணத்திற்கு நாம் காரை வாடகைக்கு வாங்கும் போது அந்த டிரைவரின் அனைத்து பின்னணியும் அறிந்து கொள்ளவேண்டும். பெரியவர்கள் இந்த பாதுகாப்பு சூழ்நிலையை அறிந்து கொண்டு செயல்பட முடியும் ஆனால் அதே சமயத்தில் சிறிய குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் ?? சமீபத்தில் எண்ணூரில் ஒரு குழந்தையை பலாத்க்காரம் செய்து கொலை செய்துள்ளனர் என்ற செய்தி வந்தது நாம் எண்ணி பார்க்கவேண்டிய விஷயம் நாம் வெறும் 30% மட்டும் படிப்பறிவு கொண்டு இருந்த போது இருந்த பெண்களுக்கான பாதுகாப்பு இன்று 80% படிப்பறிவு கொண்டு இருக்கும் போது இல்லை என்று எண்ணும் போது வருத்தமாக உள்ளது. ஆனால் அதேசமயம் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது இளம்பெண்களும், இளைஞர்களும் இரவோடு இரவாக அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டதை நாம் பார்த்தோம். இப்படிப்பட்ட இரண்டு வகையில் நம் சமுகம் செயல்படுகிறது. இதற்கு காவல்துறை மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்,

C5Fr6L6VUAAJiRH

வேலைக்காரன் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேலைக்காரன் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Sivakarthikeyanசிவகார்த்திகேயன் – மோகன் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘வேலைக்காரன்’ என்று தலைப்பிட பட்டிருக்கிறது வேலைக்காரன் படத்தின் முதல் போஸ்டர் வருகின்ற தொழிலாளர் தினம் அன்றும், திரைப்படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்றும் உலகமெங்கும் வெளியாகின்றது

ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தொழிலாளர்கள். அந்த வகையில் ஒவ்வொரு ரசிகர்கரையும் உற்சாகப்படுத்தி மகிழ்விக்கும் பணியை தங்களின் கடின உழைப்பால் சிறப்பாக செய்து வருகின்றனர் கலைஞர்கள். அப்படி ஒரு கலைஞனாக உருவெடுத்து, தன்னுடைய அயராத உழைப்பால் கடந்த சில வருடங்களில் வெற்றி சிகரத்தை அடைந்து இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படத்திற்கு ‘வேலைக்காரன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளன்று இந்த தலைப்பை பற்றிய அறிவிப்பு அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் – ஆர் டி ராஜா கூட்டணியில் உருவான ‘ரெமோ’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, தற்போது அவர்கள் மீண்டும் இந்த வேலைக்காரன் படத்திற்காக, அதுவும் மோகன் ராஜா போன்ற தலைச் சிறந்த இயக்குநருடன் இணைந்து இருப்பது ரசிகர்களின் எதிரிபார்ப்பை வானளவு அதிகரித்துள்ளது.

சிவகார்த்திகேயனின் பிறந்த நாளன்று அவர் கூறிய வாழ்த்து: “கடின உழைப்பை அழகு படுத்தும் ஒரு உன்னதமான வேலைக்காரனுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். உழைப்பாளர்களின் மகிமையை பற்றி இந்த ‘வேலைக்காரன்’ எடுத்து சொல்லும்”

வேலைக்காரன் படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி (ஆகஸ்ட் 25) ஆம் தேதி அன்று உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் முதல் போஸ்டரை உழைப்பாளர் தினமான மே 1 ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தரமான கதை, வர்த்தக வெற்றிக்கு தேவையான சிறப்பம்சங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, சிறந்ததொரு பொழுது போக்கு திரைப்படமாக உருவாகி வரும் இந்த வேலைக்காரன் திரைப்படம், பாஹத் பாசில், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ் மற்றும் ரோபோ ஷங்கர் என பல முன்னணி நடிகர் நடிகைகளை உள்ளடக்கி இருக்கின்றது. அதுமட்டுமின்றி, இசையமைப்பாளர் அனிரூத், ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த வேலைக்காரன் படத்தில் பணியாற்றி வருவது மேலும் சிறப்பு.

கீர்த்தி சுரேஷின் அம்மாவையும் கடத்த முயற்சித்த பாவனா கார் டிரைவர்

கீர்த்தி சுரேஷின் அம்மாவையும் கடத்த முயற்சித்த பாவனா கார் டிரைவர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

keerthy suresh and menaka sureshபிரபல நடிகையான பாவனா, ஒரு சில தினங்களுக்கு முன் அவரது கார் டிரைவரால் கடத்தப்பட்டு, பாலியல் தொல்லை செய்து, பின்னர் விடுவிக்கப்பட்டதையும் நாம் பார்த்தோம்.

இதுதொடர்பாக பாவனாவின் கார் டிரைவர் மற்றும் அவரது இரு நண்பர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பாவனாவுக்கு ஏற்பட்ட இச்செயலை கண்டித்து மலையாள திரையுலகினர் மற்றும் தமிழ் திரையுலகினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் அப்பா ஒரு தொடர்பான ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது…

சில ஆண்டுகளுக்கு முன்பு இதே டிரைவர் தன் மனைவி மேனகா சுரேஷையும் கடத்த முயற்சி செய்தாராம்.

ஆனால் போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.

More Articles
Follows