தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
65-வது தேசிய விருது பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை ‘டூலெட்’ என்ற படம் வென்றது.
இன்னும் ரிலீஸ் ஆகாத இந்த திரைப்படம் 30 சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்றுள்ளது.
பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளது.
‘டூலெட்’ படத்தின் கதை என்ன என்பது குறித்து இதன் இயக்குனர் செழியன் கூறியதாவது…
வாடகை வீடு தேடி அலைவோர் நம் நாட்டில் நிறைய பேர் உள்ளனர்.
அதில் உள்ள சிக்கல்கள், சிரமங்கள் என்ன என்பதை யதார்த்தமாக சொல்வதே ‘டுலெட்’ படத்தின் கதை.
வெளிநாட்டு படங்களை நாம் ஆச்சர்யமாக பார்க்கிறோம். நமது நாட்டில் நடக்கும் விஷயங்களை அவர்கள் அதிசயமாக பார்க்கிறார்கள் என்பதற்கு இந்த படம் ஓர் உதாரணம்.
30 நாடுகளில் இந்த படத்தை திரையிட்டுள்ளோம். கிட்டதட்ட 17 விருதுகளையும் பெற்றிருக்கிறது.
நாயகன் சந்தோஷ், நாயகி ஷீலா, குழந்தை நட்சத்திரம் தருண் ஆகியோர் தான் இதன் முக்கிய பாத்திரங்கள்.
ஒரு சாதாரண குடும்பம் வீட்டை மாற்றும் சூழ்நிலை ஏற்படுகிறது. வாடகை வீடு தேடும் அவர்கள் எப்படிப்பட்ட சிரமங்களை சந்திக்கிறார்கள் என்பதை எப்படி சொல்ல விரும்பினேனோ அதற்கு அவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்து இருக்கிறார்கள்.
சாதாரணமாக எடுக்கப்பட்ட இந்த படத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது. இப்போது தேசிய அங்கீகாரமும் கிடைத்திருப்பது மகிழ்ச்சி.
நான் பரதேசி, தாரைதப்பட்டை, ஜோக்கர் உள்பட 10 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளேன்.
இப்போதுதான் முதன் முறையாக படத்தை இயக்கியுள்ளேன். இதுபோன்ற படங்களை எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை.
விரைவில் தமிழகத்தில் ‘டூலெட்’ திரைக்கு வரும்.” என்று கூறினார்.
இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பரதேசி (காஸ்ட்யூம் துறை), தாரை தப்பட்டை (பின்னணி இசை), ஜோக்கர் (சிறந்த படம்) ஆகிய திரைப்படங்களும் தேசிய விருது பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
National award movie Tolet director Chezhiyan interview