தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்ச்சி கடந்த 35 நாட்களாக விஜய் டிவில் ஒளிப்பரப்பாகி வருகிறது.
இந்நிகழ்ச்சி தொடங்கும்போது 14 போட்டியாளர்கள் இதில் பங்கேற்பார்கள் என்றனர். ஆனால் நடிகை நமீதா 15வது போட்டியாளராக கலந்து கொண்டார்.
தற்போது ஆர்த்தி, பரணி, கஞ்சா கருப்பு, நமீதா உள்ளிட்ட 6 பேர்கள் வெளியேறிவிட்டனர்.
இந்நிலையில் எவரும் எதிர்பாராத வகையில், நடிகை பிந்துமாதவி பல்லக்கில் வந்து இறங்கி, இதில் கலந்துக் கொண்டுள்ளார்.
அவர் பிக்பாஸ் வீட்டில் நுழையும்போது, தப்பு பன்னீட்டீங்களே என்று கூறினார் வையாபுரி.
ஆமா தப்பு பன்னீட்டனோ? எனக் கேட்டவாறே நுழைந்தார் பிந்துமாதவி.
இதை பார்த்து வரும் ரசிகர்களிடையே ஓவியாவிக்கு அதிகளவில் வரவேற்பு உள்ளது.
அவரை ஓரங்கட்டவே பிந்துமாதவியை களம் இறக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஓவியாவைப் போன்றே பிந்து மாதவிக்கும் சமூக வலைத்தளங்களில் புரட்சிப்படை ஆரம்பிக்கப்பட்டு அதுவும் வைரலாகி வருகிறது.
அப்படியே விவசாயத்துக்கும் இதுபோன்ற புரட்சிப்படை ஆரம்பிக்கப்பட்டால் ரொம்ப புண்ணியமா போகும். செய்வீர்களா..?
Actress Bindhu Madhavi enters in Bigg Boss show after 35 days