தமிழ் சினிமாவின் பொற்காலம் அதுதான்.; பிராணிகளுக்காக சினிமாவை நினைக்கல – அமலா

தமிழ் சினிமாவின் பொற்காலம் அதுதான்.; பிராணிகளுக்காக சினிமாவை நினைக்கல – அமலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் கனவுக்கன்னிகள் பட்டியலில் இன்று வரை கூட தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் அமலா. பெரும்பாலான உச்ச நட்சத்திரங்கள், இயக்குநர்கள் என எல்லோரோடும் பணியாற்றிவிட்டு திடீரென ஒரு நாள் காணாமல் போய்விட்டார்.

அவர் நடித்த படங்கள், தோன்றிய பாடல்களைப் பார்த்தே மனதைத் தேற்றிக் கொண்டனர் 90களின் இளைஞர்கள். அழகு, திறமை என்ன இரண்டும் சேர்ந்த சரியான கலவையோடு இருந்த நடிகை எப்படி மீண்டும் நடிக்காமல் இருக்கலாம் என்று யோசிக்கும்போது தற்போது கணம் திரைப்படம் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

”தமிழ்நாட்டுக்கு நான் எப்போது வந்தாலும், விமானத்தில் இருந்து இறங்கியவுடன் எனக்குக் கிடைக்கும் அன்பு, வரவேற்பு, ரசிகர்களின் கண்களில் தெரியும் ஆர்வம் என எல்லாவற்றையும் பார்க்கும்போது என் இல்லத்துக்கே திரும்பியதைப் போல இருக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார் அமலா…

தமிழ்த் திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் நீங்கள். திடீரென திருமணம் செய்து கொண்டு ஆந்திர மாநிலத்தில் தங்கிவிட்டீர்கள். தமிழ்நாட்டை, தமிழ் சினிமாவில் நீங்கள் பணியாற்றிய நாட்களை நினைத்துப் பார்ப்பீர்களா?

அங்கு சென்ற முதல் வருடம் சென்னையை அதிகமாக மிஸ் செய்தேன். இங்கு கடலோரமாகத்தான் எனது விடுதி, வீடு எல்லாம் இருந்தது. அதனால் ஒரு சி.டியில் கடலின் ஓசையை நாகார்ஜுனா ஒலிக்க விடுவார்.

ஏனென்றால் அந்த ஒலியின் இல்லாமையை நான் அதிகமாக உணர்ந்தேன். பின் புதிய சூழல் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்கப்பட்டுவிட்டது.

நான் இருந்த அந்த 6-7 வருட காலம் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று சிலர் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், உயர்ந்த இயக்குநர்கள், இளையராஜாவின் அற்புதமான இசை என நிறைந்திருந்தது.

இளையராஜா இசையமைத்தால் படம் கண்டிப்பாக வெற்றிதான் என்று ஒவ்வொரு இயக்குநரும் சொல்வதைப் பார்த்திருக்கிறேன்.

எனது தற்போதைய வாழ்க்கை பல வேலைகளுக்கு நடுவில், திருப்திகரமாக, ஆர்வத்துடன் சென்று கொண்டிருக்கும்போது மீண்டும் சினிமாவைப் பற்றி நினைக்க நேரமில்லை.

எங்களின் பிராணிகள் நலச் சங்கத்தின் 30வது ஆண்டு இது. 5.5 லட்சம் பிராணிகளுக்கு நாங்கள் இதுவரை உதவியிருக்கிறோம். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவைப் பற்றிய எண்ணம் வராது இல்லையா.?

ஆனால் நான் ஒரு தாயான பின்பு, அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க அழைத்தனர். நானும் அது குறித்து யோசித்தேன். ஆனால் குழந்தையை சரியாகக் கவனித்துக் கொள்ள முடியாது என்பதால் நடிக்கவில்லை. இப்போது அதற்கான சூழல் உருவாகியுள்ளது.

உங்களை நடிக்க சம்மதிக்க வைப்பது அவ்வளவு எளிதல்ல என்கிறார்களே, கணம் இயக்குநர் ஸ்ரீகார்த்திக் எப்படி உங்களை சம்மதிக்க வைத்தார்?

சந்திக்க நேரம் அனுமதி பெற்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். 2-3 மணி நேரம் கதை சொன்னார். அவர் விளக்கிச் சொன்ன விதமும் சரி, கதையும் சரி, அழகாக இருந்தது. அப்படி ஒரு கதையை நீண்ட நாட்கள் கழித்துக் கேட்கிறேன். மிகவும் நெகிழ்ச்சியாக உணர்ந்தேன். அதனால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

வழக்கத்துக்கு மாறான ஒரு படம். மூன்று கதாபாத்திரங்களின் பயணமே இந்தக் கதை. இதில் நாயகன் ஷர்வானந்தின் கதையில் எனக்கும் சிறிய பங்கு இருக்கிறது.

ஷர்வானந்த், ஸ்ரீகார்த்திக், சதீஷ், ரமேஷ் திலக் என இன்றைய தலைமுறைக் கலைஞர்களோட நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

ஷர்வானந்துடன் தான் எனக்கு அதிக காட்சிகள். மிகத் திறமையானவர். கண்ணியமானவர். ஸ்ரீகார்த்திக்கு, சர்வானந்தும் ஒருவரை ஒருவர் முந்தி பணியாற்றினர். என்னையும் கடுமையாக வேலை வாங்கினார். சரியான தருணம் கிடைக்கும் வரை நடிக்க வைத்தார்.

அது உங்களுக்குப் படம் பார்க்கும் போது தெரியும். டப்பிங் கொடுக்கும்போது படம் பார்த்தேன். மிகவும் சுவாரசியமானதாக இருந்தது.

நிறைய நகைச்சுவை நிறைந்திருந்தது. நீங்களும் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள். அதே சமயம் சில காட்சிகளில் மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கும். ஏனென்றால் அம்மா நினைவுக்கு வரும்போது யாராக இருந்தாலும் உணர்ச்சிவசப்படுவார்கள்.

அம்மா கதாபாத்திரம் வந்த பிறகு ஆழமான உணர்வுகள் கதையில் வரும். அதற்கேற்ற ஆழமான இசையும் உள்ளது.

இந்த 30 வருடங்கள் உங்களை சுற்றி ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை எப்படி பார்க்கிறீர்கள்?

பிரமிக்கத்தக்கதாக இருக்கிறது. ஒவ்வொரு வருடம் இந்த வளர்ச்சியை, வித்தியாசத்தை நான் பார்க்கிறேன். அது சந்தோஷமாகவும் இருக்கிறது. ஏனென்றால் உலகில் எங்கும் செல்லலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது.

பெண்களுக்கான பல நல்ல   வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அவர்கள் நினைத்த எதையும் சாதிக்க முடிகிறது. நான் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்திலேயே இதைப் பார்த்ததில் மகிழ்ச்சி.

என் அம்மா அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். அந்த காலத்தில் இந்தியப் பெண்களுக்கு இல்லாத ஒரு சுதந்திரத்தோடு அவர் வாழ்ந்ததை நான் பார்த்திருக்கிறேன். சுதந்திரமாக இருத்தல், மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றுதல் என்றாலே உடைகளும், வாழும் முறையும் தான் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அதற்கேற்ற சிந்தனை ஓட்டத்தைப் பற்றி யாரும் சொல்வதில்லை. எனக்கு அதுதான் முக்கியமானதாக இருந்தது.

நம் பாரம்பரிய உடை அணிந்து கொண்டு தான் கல்லூரிக்குச் சென்று வந்தேன். மேற்கத்திய கலாச்சார உடைகளை அணிவதுதான் சுதந்திரம் என்று நான் நினைக்கவில்லை. சுதந்திரமாக சிந்திப்பதே முக்கியம், மனதின் சுதந்திரமே முக்கியம் என்று நினைத்தேன். இப்போது அதை எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது. ஏன் சினிமாவில் கூட அத்தனை துறைகளிலும் பெண்களைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ரசிகர்களை திரையரங்குக்கு வரவழைக்கும் அளவு கணம் படத்தில் என்ன இருக்கிறது?

இது ஒரு சாகசப் பயணக் கதை என்று சொல்லலாம். 3 சாதாரண மனிதர்கள் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிய கதை. ஒவ்வொரு தோல்விக்குப் பின்னர் எழுவது எப்படி என்பதை அழகாக, கவித்துவமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதில் நிறைய சிரிப்பு நிறைந்திருக்கும். ஒரு அதிர்ச்சி இருக்கும். அந்த அதிர்ச்சியின் மூலம் கூட வாழ்க்கையைப் பற்றி புரிய வரும். நமது சிறந்த முயற்சியைத் தர நமக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்பை பயன்படுத்துவது எப்படி என்று உணர வைக்கும். அந்த உந்துதலைக் கொடுக்கும். விழுந்தால் எழுந்திரு என்பதைச் சொல்லும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கையைத் தரும்.

படத்தின் ட்ரெய்லரில் காலப் பயணத்தைப் பற்றிய காட்சிகள் உள்ளன. உங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் எந்த காலத்துக்குப் பயணப்படுவீர்கள்?

நான் எதிர்காலத்துக்குத் தான் செல்ல விரும்புகிறேன். பல வேலைகளைச் செய்து வருகிறோம், அது எப்படி நடக்கிறது என்பது தெரிய வேண்டும். நினைத்துப் பாருங்கள், யாராவது எதிர்காலத்தில் இருந்து வந்து, ‘கவலை வேண்டாம், இந்தக் காரியம் சரியாக நடக்கும்’ என்று சொன்னால் எவ்வளவு உற்சாகமாக இருக்கும்?அது கிடைக்க வேண்டுமென விரும்புகிறேன்.

இவ்வளவு நேர்மறையாக இருப்பதன் ரகசியம் என்ன?

நான் விலங்குகள் நலனுக்காகப் பணியாற்ற ஆரம்பித்தேன். அதில் நிறைய வலிகளைப் பார்த்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் அதன் துயரத்தில் மூழ்கிவிட்டேன். ஆனால் அது சரியான சிந்தனை அல்ல, நல்ல விஷயம் செய்ய திடமாக இருக்க வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

அப்போது 8-9 மாத கர்ப்பமாக இருந்தேன். தியானம் கற்றுக் கொண்டேன். விபாசனா தியான மையம் என்கிற இடத்தில் கற்று, பயிற்சி செய்ய ஆரம்பித்தேன்.

அப்போது ஆரம்பித்து அடுத்த 20 வருடங்களுக்கும், ஒவ்வொரு வருடமும் 10 நாள் அங்கு நடக்கும் தியான முகாமுக்குச் சென்றுவிடுவேன். அது ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்கும் எல்லோரையும் போல கோபம் வரும். ஆனால் சீக்கிரமாக சகஜநிலைக்கு வந்துவிடுவேன். என்ன பிரச்சினை என்பதை பகுத்தாய்ந்து தீர்வு என்ன என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவேன். யாரையும் காயப்படுத்துவது போன்ற வார்த்தைகள் வெளியே வராது.

இப்போது நாம் பல மொழிகளைச் சேர்ந்த படங்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டோம். கணம் எப்படி தமிழ் ரசிகர்களையும், தெலுங்கு ரசிகர்களையும் ஒரே நேரத்தில் கவரும் என்று நினைக்கிறீர்கள்?

மனித உணர்ச்சிகள் உலகம் முழுக்க பொதுவானதுதான். எனவே கணம் படத்தில் இருக்கும் உணர்ச்சிகள் இளைஞர்களை சென்றடைந்துவிட்டால் கண்டிப்பாகப் படம் தேசிய அளவில், பான் இந்தியா என்று சொல்லும்படி பிரபலமாகும். கண்டிப்பாக திரையில் தமிழ், தெலுங்கு என அத்தனை ரசிகர்களுக்கும் படம் சென்று சேரும் என்று எனக்குத் தெரியும்.

அம்மா பாசம், இளைஞர்களுக்கான தடைகள், போராட்டங்கள், இதெல்லாம் அனைவருக்கும் பொது. இந்த விஷயங்களை ரசிகர்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்று பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன்.

அம்மா பாடல் குறித்து?

கதையில் அது மிக அழகான, அரிய சூழல். அதற்கேற்ற உணர்ச்சிகரமான பாடல். ஆனால் சோகமான பாடல் கிடையாது, ஆறுதலைத் தான் தரும். அந்தச் சூழலுக்கு இந்தப் பாடல் உயிரைக் கொடுத்திருக்கிறது. ரசிகர்கள் மனதில் நன்றாகப் பதிந்துவிடும்.

தமிழில் டப்பிங் செய்தது எப்படி இருந்தது?

வசனமாகக் கொடுத்தால் நன்றாக தமிழ் பேசிவிடுவேன். ஆனால் சாதரணமாகப் பேசும்போது நான் சிந்திக்கும் ஆங்கிலத்தை ஒவ்வொரு வார்த்தையாகத் தமிழில் மொழிபெயர்த்துப் பேசத் தாமதமாகிவிடும். இப்போது பேசும் மொழி தெலுங்கு என்பதால் நிறைய வார்த்தைகள் தெலுங்கு வேறு வருகிறது. ஆனால் டப்பிங் செய்யும்போது ஸ்ரீகார்த்திக்கே ஆச்சரியப்பட்டுப் போனார். முதலில் தமிழில் தான் பேசுவேன். தெலுங்கை விட அது சுலபமாக இருந்தது.

படப்பிடிப்பு அனுபவம் குறித்து..?

ஸ்ரீகார்த்திக் குழுவினர் மிகச் சரியான ஒருங்கிணைப்போடு, திட்டமிடுதலோடு இருந்தனர். ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் சரியாக வைத்திருந்தனர். அதனால் நடிகர்கள் எங்களுக்கு மிகச் சுலபமாக இருந்தது. இப்படி ஒரு தொழில் முறை நேர்த்தியைப் பாராட்டியாக வேண்டும். இந்த நேர்த்தியால் தான் ட்ரீம் வாரியர் இவர்களுக்கு வாய்ப்பு தந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

தயாரிப்பாளர் பிரபு தினமும் படப்பிடிப்புக்கு வருவார். எந்த வித பதட்டமும் காட்டமாட்டார். அன்று அவரது படங்களின் வெளியீடு இருந்தால் கூட அமைதியாகவே இருப்பார். 7 படங்கள் படப்பிடிப்பில் உள்ளன, 2 வெளியாக உள்ளது என எல்லாவற்றையும் எந்த பரபரப்பும் இல்லாமல் பேசுவார்.

இவ்வாறு அமலா பேட்டி அளித்தார்.

‘கட்சிக்காரன்’ விஜித்துடன் இணைந்தார் ‘காதல் முன்னேற்ற கழகம்’ வில்லன்

‘கட்சிக்காரன்’ விஜித்துடன் இணைந்தார் ‘காதல் முன்னேற்ற கழகம்’ வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையுலகில் அரசியல் சார்ந்த படங்கள் எத்தனையோ வந்துள்ளன. ஓர் அரசியல் கட்சித் தலைவனுக்கும் தொண்டனுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் உறவைப் பற்றியும் புது விதத்தில் கூறுகிற படமாக ‘கட்சிக்காரன்’ உருவாகி உள்ளது.

அரசியல் கட்சித் தலைவருக்கும் தொண்டனுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் தான் கதை.

ஒரு தலைவன் எப்படி நேர்மையாக இருக்க வேண்டும் ஒரு தொண்டன் எப்படி விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இப்படம் அலசுகிறது. முழுக்க முழுக்க அரசியலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது.

இப்படத்தை பி.எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மற்றும் இணை தயாரிப்பு புளூஹில்ஸ் புரொடக்ஷன், சார்பில் தயாரித்துள்ளனர்.

இதில் தோனி கபடிகுழு, வேட்டைநாய் , படங்களில் சிறப்பாக தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்திய விஜித் சரவணன். இப்படத்தில் கதையின் நாயகனாக களமிறங்கியுள்ளார்.

கட்சிக்காரன்

ஸ்வேதா டாரதி கதாநாயகியாக நடிக்க. ”காதல் முன்னேற்ற கழகம்’ படத்தில் வில்லனாக நடித்த சிவசேனாதிபதி.

கட்சிக்காரன்
கட்சிக்காரன் படத்தில் அரசியல் தலைவராக சிறப்பாக நடித்து உள்ளார்.. காமெடியனாக AR தெனாலியும் நடித்திருக்கிறார்கள்.

அப்புக்குட்டி, மற்றும் அசுரவதம் படத்தின் இயக்குநர் மருதுபாண்டியன் ஆகிய இருவரும் படத்தில் முக்கியமான திருப்புமுனை ஏற்படுத்தும் கேரக்டரில் நடித்துள்ளனர்.

கட்சிக்காரன்

நாசரின் தம்பியும் ஜீவி 2 படத்தில் இன்ஸ்பெக்டராக கலக்கிய ஜவகர் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

மேலும் விஜய் கெளதம், சி.என்.பிரபாகரன், வின்சென்ட்ராய், குமர வடிவேலு, மாயி சுந்தர், ரமேஷ் பாண்டியன், பரந்தாமன், சாய்லட்சுமி, நந்தகுமார், சக்திவேல் முருகன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

‘தோனி கபடிகுழு’ படத்தை இயக்கிய ப. ஐயப்பன் தனது இரண்டாவது படமாக இதை இயக்கி உள்ளார். தயாரிப்பு சரவணன் செல்வராஜ், இணைத் தயாரிப்பு மலர்கொடி முருகன்.

கட்சிக்காரன்

இப்படத்திற்கு ஒளிப்பதிவு- மதன்குமார், எடிட்டிங் . யு கார்த்திகேயன், இசை -ரோஷன் ஜோசப் பின்னணி இசை-C. M. மகேந்திரா, பாடல்கள் நா. ராசா, பாடகர்கள் ஹரிச்சரண்,
வேல்முருகன் என தொழில்நுட்பக் குழு உருவாக்கிப் படத்தை எடுத்து முடித்துள்ளார்கள்.

‘கட்சிக்காரன் ‘ படப்பிடிப்பு உளுந்தூர் பேட்டை, துருகம், கள்ளக்குறிச்சி போன்ற இடங்களில் நடந்துள்ளது. சரியாக திட்டமிடப்பட்டு 40 நாட்களில் முழுப்படத்தையும் முடித்துள்ளார்கள்.

கட்சிக்காரன்

விரைவில் ‘கட்சிக்காரன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

Vijith Saravanan and Siva Senathipathi joins for Katchikaaran

சறுக்கிய சீயான் விக்ரம் .. கோப்ரா படத்தின் 6 நாள் மொத்த வசூல் இவ்ளோதானா?

சறுக்கிய சீயான் விக்ரம் .. கோப்ரா படத்தின் 6 நாள் மொத்த வசூல் இவ்ளோதானா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீயான் விக்ரம் நடிப்பில் உருவான கோப்ரா மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் வெளியானது .

விக்ரமின் அர்பணிப்பு பெரியளவில் பேசபட்டாலும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது.

குறிப்பாக படத்தின் டைமிங் கடும் விமர்சனங்களை சந்தித்த நிலையில் கிட்டத்தட்ட 20 நிமிட காட்சிகள் வெட்டப்பட்டன.

கோப்ரா விமர்சனம் 3.25/5.; சீறும் சீயான்

இருப்பினும் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என சொல்லப்படுகிறது.

இதனால் ஆறு நாள் முடிவில் உலகம் முழுவதும் சுமார் 49 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நெஞ்சத்தை வருட வரும் தனுஷ் – யுவன் கூட்டணி . நானே வருவேன் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டார் தாணு

நெஞ்சத்தை வருட வரும் தனுஷ் – யுவன் கூட்டணி . நானே வருவேன் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டார் தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் புதிய திரைப்படம் நானே வருவேன் .

செல்வ ராகவன் இயக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார் .

புதுப்பேட்டை படத்திற்கு பிறகு தனுஷ் – செல்வா – யுவன் கூட்டணி அமைந்துள்ளதால் படத்திற்கும் , பாடல்களுக்கும் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது .

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை (07/09/22 ) மாலை 4.40 க்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் .

எங்கிருந்து தொடங்குவது.? ரசிகர்களே எனது தூண்கள்.; தனுஷ் உருக்கமான அறிக்கை

7 மில்லியன் கணக்கில் மின்னும் சிவகார்த்திகேயனின் ‘பிம்பிளிக்கி பிலாபி’

7 மில்லியன் கணக்கில் மின்னும் சிவகார்த்திகேயனின் ‘பிம்பிளிக்கி பிலாபி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதித்யா மியூசிக் யூடூப்பில் வெளியான பிரின்ஸ் படத்தின் முதல் பாடல் ‘பிம்பிலிக்கி பிலாபி’.

யூடியூப்பில் 7 மில்லியன் பார்வைகளைப் பெற்ற பிம்பிலிக்கி பிலாபி, சிவகார்த்திகேயனின் அதிகம் பார்க்கப்பட்ட பாடலாகும்.

பொழுதுபோக்கின் அடையாளமான நடிகர் சிவகார்த்திகேயன், கொண்டாட்டத்துடன் கூடிய நடனத்துடன் மற்றொரு பாடலை கொடுத்திருக்கிறார்.

அது அவரது வரவிருக்கும் ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் ‘பிம்பிலிக்கி பிலாபி’ ஆகும்.

இந்த பாடல் அணைத்து தரப்பினர்களிடம் இருந்தும் முகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மியூசிக் லேபலான ஆதித்யா மியூசிக், இந்த பாடலை வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.

விவேக் எழுதிய வரிகளுடன் அனிருத் ரவிச்சந்தர், ரம்யா பெஹாரா மற்றும் சாஹிதி சாகந்தி ஆகியோரால் பாடப்பட்டு, SS தமன் அவர்களால் இசையமைக்கப்பட்ட இந்தப் பாடல், ஒரு பெப்பி டான்ஸ் எண்ணாக கவனத்தை ஈர்த்தது.

இதன் மூலம் ஒரே இரவில் பிளாக்பஸ்டர் ஆனது. மனதைக் கொள்ளை கொள்ளும் சிவகார்த்திகேயனின் நடன அசைவுகள், ஆற்றலைத் தூண்டும் தமனின் பெப்பி ட்யூன்கள் மற்றும் ரம்யா மற்றும் சாஹிதியுடன் அனிருத் ரவிச்சந்தரின் கவனத்தை ஈர்க்கும் குரல் ஆகியவை பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பை உருவாக்கியுள்ளன.

பாடல் வெளியிடப்பட்ட அனைத்து தளங்களிலும் சாதனை படைத்துள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகர்கள் இந்த நவநாகரீக பாடலைக் கண்டு உற்சாகம் அடைந்துள்ளனர்.

புஷ்பா, வாரியர், ஆதித்ய வர்மா, தீரன் மற்றும் பல பரபரப்பான சார்ட்பஸ்டர் ஆல்பங்களை வழங்கியதன் மூலம் தமிழ் இசைத் துறையில் சிறந்து விளங்குகிறது ஆதித்யா மியூசிக்.

ஏற்கனவே ‘சாமிசாமி’, ‘புல்லட் சாங்’, ‘ஓ சொல்ரியா’ போன்ற சூப்பர் ஹிட் தரவரிசைப் பாடல்களை வழங்கிய ஆதித்யா மியூசிக், ‘பிம்பிளிக்கி பிலாபி’க்கு கிடைத்த அட்டகாசமான வரவேற்பால் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளது.

நடிகர் தனுஷ் நடித்த வாத்தி உட்பட பல அற்புதமான ஆல்பங்களை ஆதித்யா மியூசிக் வரிசைப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரின்ஸ் படத்தை தெலுங்கு பிளாக்பஸ்டர் ஹிட் ஜாதிரத்னலு புகழ் கேவி அனுதீப் இயக்குகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்த இருமொழி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் உக்ரைனிய நடிகை மரியா ரியாபோஷப்கா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், சத்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதன் வெளியீடு தீபாவளி பண்டிகைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தை சுரேஷ் பாபு, நாராயண் தாஸ் கே நரங் மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

Bimbilikki Pilapi song The first single from Prince makes record

மெகா பட்ஜெட் படத்தில் அமிதாப் – பிரபாஸ் – சூர்யா – துல்கர்.; இயக்குனர் இவரா?

மெகா பட்ஜெட் படத்தில் அமிதாப் – பிரபாஸ் – சூர்யா – துல்கர்.; இயக்குனர் இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்கள் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

பாகுபலி நாயகன் பிரபாஸ் இதில் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.

ஆனால் பாகுபலிக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சாஹோ’, ‘ராதே ஷ்யாம்’ படங்கள் எதிர்பார்த்தை வெற்றியை பெறவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில் இந்த புதிய படத்திற்கு ‘ப்ராஜெக்ட் கே’ என்று பெயரிடப்பட்டுள்ளனர்.

கீர்த்தி சுரேஷ்-க்கு தேசிய விருது பெற்று தந்த ‘மகாநடி’ படத்தை இயக்கிய நாக்அஸ்வின் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தின் பட்ஜெட் மட்டும் ரூபாய் 500 கோடி எனவும் தெரிய வந்துள்ளது.

ஹிந்தி சினிமாவில் இருந்து அமிதாபச்சன் மற்றும் தீபிகா படுகோன் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

தமிழில் இருந்து நடிகர் சூர்யாவும் மலையாளத்திலிருந்து துல்கர் சல்மானும் இந்த படத்தில் இணைய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இது உருவாகுகிறது.

நாக்அஸ்வின்

Prabhas Suriya and Dulquer will be part of Project K

கூடுதல் தகவல்…

கேஜிஎஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் சாலார் மற்றும் பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் அகிய 2 படங்களும் அடுத்தாண்டு வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ‘பிராஜக்ட் கே’ படத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளார்.

More Articles
Follows