ரஜினி-தனுஷ் பட பாடல்களுக்கு பிறகு வைரலாகும் ‘கணம்’ படத்தின் கனமான பாடல்

ரஜினி-தனுஷ் பட பாடல்களுக்கு பிறகு வைரலாகும் ‘கணம்’ படத்தின் கனமான பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சில பாடலைக் கேட்டாலே படத்தின் கதைக்களத்தை நம்மால் உணர்த்துக் கொள்ள இயலும். அப்படி ‘கணம்’ படத்தில் ‘அம்மா’ பாடல் அமைந்திருப்பது சிறப்பம்சம்.

வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கணம்’.

அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் அமலா அக்கினேனி, சர்வானந்த், ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘எங்கேயும் எப்போதும்’,
‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ ஆகிய படங்களுக்குப் பிறகு தமிழில் சர்வானந்த் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘கணம்’.

‘அம்மா’ பாடலில் உமா தேவியின் வரிகளுக்கு,
ஜேக்ஸ் பிஜாய் தனது இசையின் மூலம் உயிரோட்டி இருக்கிறார்.

சித் ஸ்ரீராம் தனது குரல் மூலம் கேட்பவர்களை மயக்கியுள்ளார்.

இந்தப் பாடல் உருவான விதம் குறித்து இயக்குநர் ஸ்ரீகார்த்திக் கூறுகையில்..,

“அம்மா பாடல் தான் ‘கணம்’ படத்தின் ஆன்மா. இது கதையை மேம்படுத்தும் பாடல் மட்டுமல்ல, இந்தப் பாடல் தான்.. இந்தப் படம். ஒரு வகையில் இந்தப் படத்தின் முதுகெலும்பு என்று சொல்வேன்.

3 வருடங்களுக்கு முன்பு, இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னரே இந்தப் பாடலை உருவாக்கினோம். இந்தப் பாடலை முடித்தவுடனேயே இது கதையின் தன்மையை இன்னும் சிறப்பானதாக ஆக்குவதை உணர்ந்தோம்.

இந்த பாடலை கேட்ட பிறகுதான், அடுத்து வரப்போகும் நாட்களில் எந்தப் பார்வையோடு இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்பதை மொத்தக் குழுவும் அறிந்து கொண்டது. படப்பிடிப்பின் போது எல்லோரும் ஒரே நேர்கோட்டில் சிந்திக்க இந்த அம்மா பாடல் தான் உதவியது.

தெலுங்கில், மறைந்த பாடலாசிரியர் சிரிவெண்ணெலா அவர்கள் எழுதிய கடைசி பாடல்களில் ஒன்று இது.

முதலில் நாங்கள் தெலுங்கு மொழியில் பாடலைத் தயார் செய்திருந்தாலும் அதை தமிழுக்கு அப்படியே மாற்றவில்லை.

பாடலின் அதே கருவை வைத்துத் தமிழில் மொத்தமாக புதிய வரிகளை உருவாக்கி இருக்கிறோம். ‘மன்னன்’ படத்தில் வந்த ‘அம்மா என்றழைக்காத…’ ,
‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் இடம்பெற்ற ‘அம்மா.. அம்மா..’ போன்ற சில பாடல்களுக்குப் பிறகு இந்த அம்மா.. பாடல் அனைத்து வயதினரையும் கொண்டாட வைக்கும்.

தனது அம்மாவை இழந்தவர்களுக்கு இந்தப் பாடல் ஒரு தாலாட்டாக இருக்கும். மற்றவர்களுக்கும் ஒரு நம்பிக்கை தரும் பாடலாக இது இருக்கும்” என்று தெரிவித்தார்.

பாடல் வெளியாகி சில மணி நேரங்களிலியே பலர் மனங்களையும் தாக்கியுள்ளது. இந்தப் பாடலைக் கேட்டவர்களின் உணர்வுகள் குறித்து ஸ்ரீகார்த்திக் கூறுகையில்..

அம்மா.. பாடலைக் கேட்டவர்கள் அனைவருமே தனது அம்மாவை ஞாபகப்படுத்துவதாக தெரிவித்தார்கள். நிறைய பாராட்டுக்கள் குவிகிறது. அதுவே பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

அதற்காகத் தான் இந்தப் பாடலை நிறைய நாட்கள் மெனக்கிட்டு உருவாக்கியுள்ளோம்” என்று தெரிவித்தார். தற்போது வெளியாகியுள்ள ‘அம்மா’ பாடல் சமூக வலைதளத்தில் பலரும் கேட்டுவிட்டு, தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். பலரும் ‘கணம்’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கணம்’ படத்தில் அமலா அக்கினேனி, சர்வானாந்த், நாசர், ரீத்து வர்மா, சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சுஜித் சராங், இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய், எடிட்டராக ஸ்ரீஜித் சராங், கலை இயக்குநராக சதீஷ்குமார் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்தப் படம் தயாரித்துள்ளது.

தெலுங்கில் ‘ஒகே ஒக ஜீவிதம்’ என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. தெலுங்கில் சதீஷ் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோருக்கு பதிலாக வெண்ணிலா கிஷோர் மற்று ப்ரியதர்ஷி ஆகியோர் நடித்துள்ளனர்.

இரு மொழிகளில் உருவாகி வரும் ‘கணம்’ – ‘ஒகே ஒக ஜீவிதம்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Here is the loving first single Amma Song from Kanam

டப்பிங் யூனியனில் ராதாரவி செய்த ஊழல் பட்டியல் வெளியானது.; FEFSI & BJP நடவடிக்கை எடுக்குமா.?

டப்பிங் யூனியனில் ராதாரவி செய்த ஊழல் பட்டியல் வெளியானது.; FEFSI & BJP நடவடிக்கை எடுக்குமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ராதாரவி, டப்பிங் சங்கத்தில் பல கோடி முறைகேடு செய்திருப்பது விசாரணையில் அம்பலம்!

தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் உத்திரவு ந.க‌.எண்.ஆ3/5281/2019 தேதி 10.01.2022

நடிகர் ராதாரவி டப்பிங் சங்கத்தில் பல விதங்களில் ஊழல் செய்திருப்பதாக அதன் உறுப்பினர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், டப்பிங் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களான திரு மயிலை S குமார், திருமதி சிஜிமோல், திரு V காளிதாஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ராதாரவி தலைமை நிர்வாகத்திற்கு எதிராக ஒரு வழக்கை தொடர்ந்தனர்.

2019 ல் தொடர்ந்த அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு S M சுப்பிரமணியம் அவர்கள், நடிகர் ராதாரவி தலைமை நிர்வாகம் டப்பிங் சங்கத்தில் செய்திருப்பதாக சாட்டப்பட்டிருக்கும் ஊழல் புகார்கள் அனைத்தையும் தீர விசாரிக்கும் படி The Additional Registrar of Trade Unions – No. 1 cum Deputy Commissioner Labor No. 1 க்கு ஓர் உத்திரவை பிறப்பித்தார்.

அந்த உத்திரவு படி, டப்பிங் சங்கத்தில் நிலம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதா, முறையான ஆவணங்கள் இருக்கிறதா, பத்திர பதிவு ஆவணங்கள், டப்பிங் சங்க வரவு செலவு கணக்கு என அனைத்தையும் தீவிரமாக விசாரணை செய்த தொழிலாளர் இணை ஆணையர் இறுதியாக தன் விசாரணை அறிக்கையை வெளியிட்டார்.

47 பக்கங்கள் கொண்ட அந்த விசாரணை அறிக்கையில், நடிகர் ராதாரவி மற்றும் டப்பிங் சங்க நிர்வாகிகள் சேர்ந்து டப்பிங் சங்கத்தில் கோடிக்கணக்கில் ஊழல் செய்திருப்பதை தொழிலாளர் இணை ஆணையர் உறுதி செய்தார்.

1) வெறும் 47 லட்சத்திற்கு நிலம் வாங்கிவிட்டு, உறுப்பினர்களிடம் சுமார் 1 கோடியே 25 லட்சத்திற்கு பொய் கணக்கு காட்டிய, ராதாரவி தலைமை நிர்வாகம் டப்பிங் சங்கத்தில் நிதி மோசடி/கையாடல் செய்திருப்பதும், பத்திர பதிவுத் துறையை ஏமாற்றி சொத்தை பதிவு செய்ததும் விசாரணையில் அம்பலமானது.

2) 2017 முதல் தொழிலாளர் நலத்துறைக்கு போலி ஆவணங்களை டப்பிங் சங்கம் சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் வெட்ட வெளிச்சமானது.

3) குழந்தை தொழிலாளர் சட்டத்தை மீறி, 15 வயதிற்கு உட்பட்ட சிறார்களை டப்பிங் சங்கத்தில் உறுப்பினர்களாக்கி, பல ஆண்டுகளாக அவர்களிடமும் கமிஷன் வசூலித்து சட்டவிரோதமாக மோசடி செய்துவந்திருப்பதும் விசாரணையில் வெளிவந்தது.

4) ஒவ்வொரு டப்பிங் கலைஞர்களிடமும் அதிகப்படியான சந்தா வசூல் செய்துவிட்டு, தொழிலாளர் நலத்துறைக்கு கணக்கு காட்டும் போது, குறைந்த தொகையை வசூலித்ததாக பொய் சொல்லி தொழிலாளர் நலத்துறையை ஏமாற்றிவந்ததும் பகிரங்கமானது.

5) 2017 முதல் பொதுக்குழுவை சட்டப்படி நடத்தாமல், உறுப்பினர்களிடம் முறையாக கணக்கறிக்கை தந்து ஒப்புதல் பெறாமல், பல கோடி அளவில் நடிகர் ராதாரவி டப்பிங் சங்கத்தில் பொய்க்கணக்கு எழுதி வைத்திருப்பது கண்டறியப்பட்டது.

6) தொலைபேசி கட்டணம், பெட்ரோல், வாங்கிய செலவு முதல் இல்லாத WEBSITE டிற்கு லட்சக்கணக்கில் செலவு கணக்கு காட்டியது வரை அனைத்திலும் மோசடி நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

7) பல ஆண்டுகளாக பல லட்சங்கள் நஷ்டம் அடைந்துவிட்டதாக போலி நஷ்ட கணக்கு காட்டிவந்ததும் வெளிவந்தது.

8) சங்க நிதியில் முறைகேடு நடந்திருப்பதை கேள்வி கேட்ட உறுப்பினர்களை சட்ட விரோதமாகவும், ஜனநாயகத்திற்கு எதிராகவும் சங்க நீக்கம் செய்திருப்பதும் பகிரங்கமானது.

9) 15 நாட்களுக்குள் கணக்கு கேட்டிருக்கும் உறுப்பினர்களுக்கு உரிய ஆவண நகல்களை டப்பிங் சங்க நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் ராதாரவிக்கும், அவர் தலைமையிலான டப்பிங் சங்க நிர்வாகத்திருக்கும் எதிராக நிரூபணமான குற்றங்கள் அனைத்திற்கும், தொழிலாளர் நலத்துறையே நீதிமன்றத்தில் வழக்கு தொடர, மனுதார்களுக்கு பரிந்துரைத்துள்ளது.

இதன் மூலம், நடிகர் ராதாரவி டப்பிங் சங்க நிர்வாகத்தில் இருந்துக்கொண்டு இத்தனை ஆண்டுகளாக பல கோடி நிதி மோசடி செய்திருப்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.

மேலும், ராதாரவி செய்த குற்றங்களுக்கு துணை நின்று அவர் செய்திருக்கும் குற்றங்களை மறைத்து அவரை காப்பாற்றி வந்த மற்ற நிர்வாகிகளும் குற்றங்களுக்கு துணை போன குற்றத்திற்காக வழக்குகளை சந்திக்க வேண்டி வரும் என்றும் நம்பப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டதால், நடிகர் ராதாரவி மற்ற நிர்வாகிகள் மீது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டப்பிங் கலைஞர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்போடும் பரபரப்போடும் இருக்கிறார்கள்.

23 சங்கங்கள் உள்ளடக்கிய FEFSI அமைப்பில் அங்கம் வகித்து மும்முரமாக இயங்கிவரும் டப்பிங் சங்கத்தில் அதன் நிர்வாகிகள் செய்துவந்திருக்கும் இந்த நிதி மோசடி பிரபலங்களை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

நடிகர் ராதாரவி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்ட இந்த நிலையில், FEFSI அமைப்பு அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கும்?

அரசியல் ரீதியாக நடிகர் ராதாரவியை பாஜக கட்சியிலிருந்து விலக்குமா?

என பல கேள்விகளுக்கு பதில், வரும் நாட்களில் தெரியவரும்.

மதியழகன்
டப்பிங் ஆர்டிஸ்ட்
சென்னை 27/01/2022

Will BJP and FEFSI take action against Radharavi?

குரு பிரம்மாவாக மாறினார் ‘மின்னல் முரளி’ குரு சோமசுந்தரம்

குரு பிரம்மாவாக மாறினார் ‘மின்னல் முரளி’ குரு சோமசுந்தரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மின்னல் முரளி சிபுவாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த குரு சோமசுந்தரம் குரு பிரம்மாவாக பெல் என்கிற திரைப்படத்தில் கதையின் வில்லனாக நடிக்கிறார். தவறான ஒருவனுக்கு கிடைத்து விடக் கூடாத ஒரு ரகசியம்.

பன்னெடுங்காலமாக அந்த ரகசியத்தை பாதுகாக்கும் பரம்பரையின் கடைசி ஒருவனான கிரகாம் பெல் என்ற பார்வைத் திறனற்ற தனிநபரின் கதையே Bell. பெல் அவன் வாழ்கையில் மற்றவர்களை எப்படி பார்க்கிறான் என்பது திரைக்கதை.

இத்திரைப்படம் ஏற்காடு மற்றும் மலைப்பகுதிகளில் மட்டுமே 60 நாட்களில் உருவாகியுள்ளது.

Brogan movies தயாரிக்கும் இத்திரைப்படத்தில் நிதிஷ் வீரா மற்றும் கலைமாமணி ஸ்ரீதர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.

ராபர்ட் இசை அமைத்திருக்கிறார் பீட்டர் சக்ரவர்த்தி பாடல்கள் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு பரணிகண்ணன் கதை வசனம் வெயிலோன். திரைக்கதை இயக்கம் R வெங்கட் புவன்.

திரைப்படத்தை புரோகன் மூவிஸ் தயாரித்துள்ளது இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் பீட்டர் சக்கரவர்த்தி மற்றும் டேவிட் நலச்சக்கரவர்த்தி

இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

Guru Somasundaram’s next film is titled Bell

பாலிவுட் ஹீரோயின்களையே அஜித்துக்கு ஜோடியாக்கும் போனிகபூர்..; அடுத்து இவரா?

பாலிவுட் ஹீரோயின்களையே அஜித்துக்கு ஜோடியாக்கும் போனிகபூர்..; அடுத்து இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு தயாரிப்பாளரை.. ஒரு இயக்குனரை பிடித்துவிட்டால் அவர்களுக்கே தொடர்ந்து வாய்ப்புகள் கொடுப்பது அஜித்தின் வழக்கம்.

நேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்த தயாரிப்பாளர் போனிகபூர்… இயக்குனர் வினோத்.. நடிகர் அஜித் கூட்டணி தற்போது வலிமை வரை தொடர்ந்து வருகிறது.

3வது முறையாக அஜித் 61 படத்திலும் இந்த கூட்டணி இணையவுள்ளது.

அஜித் படங்களை ஹிந்தியில் புரோமோட் செய்ய பாலிபுட் நடிகைகளை அஜித்தின் ஜோடியாக்கி வருகிறார் போனிகபூர் என கூறப்படுகிறது.

நேர்கொண்ட பார்வை படத்தில் பாலிவுட் நடிகை வித்யாபாலன் நாயகியாக நடித்தார்.

வலிமை படத்தில் அஜித் ஜோடியாக ஹூமா குரேஷி நடித்துள்ளார். (காலா படத்தில் ரஜினியின் காதலியாக நடித்தவர் இவர்.) இந்த படம் இன்னும் ரிலீசாகவில்லை.

இந்த நிலையில் அஜித் 61 படத்தில் தபுவை நாயகியாக்க இருக்கிறதாம் படக்குழு.

கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தபு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

AK 61 movie heroine from bollywood says Boney Kapoor

மகளை அடுத்து மகனையும் சினிமாவில் இறக்கும் ஷங்கர்..; அப்பா ஆசையை நிறைவேற்றுவாரா?

மகளை அடுத்து மகனையும் சினிமாவில் இறக்கும் ஷங்கர்..; அப்பா ஆசையை நிறைவேற்றுவாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஷங்கர் படங்கள் என்றாலே பிரம்மாண்டம்தான். இவரது படங்கள் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்பதால் இவருக்கான ரசிகர்களும் இங்கு ஏராளம்.

இவர் எஸ்ஏ. சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து பின்னர்தான் ஜென்டில்மேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இதற்கு முன்பே சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் இவர் நடித்துள்ளார். ஆனால் நடிப்பில் ஜொலிக்க முடியாமல் போனதால் தற்போது இயக்குனராகி வசூல் சாதனைகள் படைத்து வருகிறார்.

இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

ஷங்கரின் முதலாவது மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.

இரண்டாவது மகள் அதிதி ஒரு டாக்டர். அத்துடன் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக விருமன் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவரின் மகன் அர்ஜித் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளாராம்.

எனவே விரைவில் அர்ஜித் ஷங்கர் நடிக்கவுள்ள பட செய்தி வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Arjith shankar debut soon in kollywood

தனுஷின் 2 படங்களில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர்கள் விலகல்..; காரணம் அவர்தானா.?

தனுஷின் 2 படங்களில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர்கள் விலகல்..; காரணம் அவர்தானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷின் 2 படங்களில் பணிபுரிந்துக் கொண்டிருந்த 2 ஒளிப்பதிவாளர்கள் அடுத்தடுத்து விலகும் செய்தி ரசிகர்களை அதிர்ச்சியுள்ளாக்கியுள்ளது.

தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் மற்றும் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் (சார்) வாத்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த மாதம் நானே வருவேன் பட ஒளிப்பதிவாளர் யாமினி அப்பட பாதியில் வெளியேறினார்.

தற்போது வாத்தி பட ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனும் அப்பட பணியில் இருந்து பாதியில் வெளியேறியுள்ளார்.

இவர்கள் இருவரும் விலகும்போது மற்ற கலைஞர்களின் பெயர்களை குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் வரும் காலங்களில் அவர்களுடன் இணைந்து பணிபுரிய காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இரண்டிலும் தனுஷ் பெயரை அவர்கள் குறிப்பிடவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Reason behind Dhanush film cinematographers quits films

More Articles
Follows