Breaking : ரஜினி-கமலை தாக்கி பேசவில்லை; நடிகர் விவேக் விளக்கம்!

Breaking : ரஜினி-கமலை தாக்கி பேசவில்லை; நடிகர் விவேக் விளக்கம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vivek clarifies his speech at Ezhumin audio launchவிவேக் நாயகனாக நடித்துள்ள படம் எழுமின்.

வையம் மீடியாஸ் சார்பாக வி.பி.விஜி தயாரித்து இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் விஷால், சிம்பு, கார்த்தி ஆகியோர் கலந்துக் கொண்டு டிரைலரை வெளியிட்டனர்.

இந்த விழாவில் நடிகர் விவேக் பேசும்போது… பொதுவாக சில விஷயங்களை பேசினார்.

அப்போது அவரவர் வேலைகளை அவரவர் பார்த்தாலே போதும்; கொடிகள் அதிகமான நிலையில் சிலர் கொள்கைகளை தேடுகின்றனர்” –என்று பேசினார்.

இதனை நியூஸ் 7 சேனல், அவர் ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசினார் என்ற செய்தியை வெளியிட்டது.

இந்த விழா முடிந்தவுடன் தன் ட்விட்டர் பக்கத்தில் நான் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

Vivekh actor‏Verified account @Actor_Vivek 7m7 minutes ago
Vivekh actor Retweeted News7 Tamil
யாரையும் நான் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நான் அரசியலிலும் இல்லை. ஊடகங்களுக்கு பணிவோடு சொல்லிக் கொள்கிறேன். @rajinikanth @ikamalhaasan

Actor Vivek clarifies his speech at Ezhumin audio launch

ezhumin event

ரஜினியை தாக்கி பேசினாரா விவேக்.?; நியூஸ்7 சேனலுக்கு ரசிகர்கள் கண்டனம்

ரஜினியை தாக்கி பேசினாரா விவேக்.?; நியூஸ்7 சேனலுக்கு ரசிகர்கள் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini fans condemns News7 channel about Vivek speech at Ezhumin eventவிவேக் மற்றும் தேவயாணி இணைந்து நடித்துள்ள படம் எழுமின்.

வையம் மீடியாஸ் சார்பாக வி.பி.விஜி தயாரித்து இப்படத்தை இயக்கியுள்ளார்.

கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சற்றுமுன் சென்னையில் நடைபெற்றது.

இந்த ட்ரைலரை நடிகர்கள் விஷால், சிம்பு, கார்த்தி உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

இந்த விழாவில் விவேக் பேசும்போது….

அவரவர் வேலைகளை அவரவர் பார்த்தாலே போதும். கொடிகள் அதிகமான நிலையில் சிலர் கொள்கைகளை தேடுகின்றனர். என்று பேசினார்.

உடனே நியூஸ் 7 சேனல்… அவர் ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசினார் என்ற செய்தியை வெளியிட்டது.

ரஜினியுடன் நெருங்கிய நட்பில் இருப்பவர் விவேக். அவரே சினிமாவுக்கு முன்பு வேறு ஒரு அரசு துறையில் வேலை பார்த்தவர். அவர் இப்போது சினிமாவுக்கு வரவில்லையா? அவருக்கு விருப்பம் இருந்தது அதனால் சினிமாவுக்கு வந்தார்.

அதுபோல் யார் விருப்பம் இருந்தாலும் எந்த துறைக்கு வேண்டுமானாலும் வரலாம்.

அதை விடுத்துவிட்டு, இவர்களாக ஒரு கற்பனை செய்து செய்தியை வெளியிட்டு டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றிக் கொள்கிறார்கள்.

இப்படி திரித்து செய்தியை வெளியிடும் நியூஸ் 7 சேனலுக்கு ரஜினி ரசிகர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Rajini fans condemns News7 channel about Vivek speech at Ezhumin event

news 7 vivek rajini

150 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு; பெண்களுக்கு முன்னுரிமை : ரஜினி

150 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு; பெண்களுக்கு முன்னுரிமை : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth speech about womens wing in Rajini Makkal Mandramரஜினி மக்கள் மன்ற பெண் நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறியதாவது:-

பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்த நாடுகள் எல்லாம் எப்போதும் முன்னேறி இருக்கின்றன.

ரஜினி மக்கள் மன்றத்திலும் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும்.

150 தொகுதிகளில் செல்வாக்கு இருப்பதாக வெளியான செய்தி உண்மையாக இருந்தால் எனக்கு அது மகிழ்ச்சியே.

கர்நாடகாவில் ஜனநாயகம் வென்றுள்ளது. எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் 15 நாட்கள் கொடுத்தது கேள்விக்கு உரியது.

இதனை சிறப்பாக கையாண்ட சுப்ரீம் கோர்ட்டுக்கு மதிப்பிற்க்குரிய வணக்கங்கள்.

கர்நாடகாவில் இனி அமைய இருக்கும் அரசு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி காவிரி விவகாரத்தில் செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்.

காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகள் ஆலோசனை கூட்டத்திற்கு கமல் அழைத்தார்.

நான் தான் இன்னும் கட்சி தொடங்கவில்லையே. அதனால் செல்லவில்லை.

இன்னும் இதுபோன்ற நிகழ்வுகள் நிறைய நடைபெறவுள்ளன. அதில் நிச்சயம் கலந்துக் கொள்வேன்.

பாராளுமன்ற தேர்தல் வரும்போது போட்டியிடுவது குறித்து சொல்வேன். ஆனால் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கவே நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.” என்று பேசினார் ரஜினிகாந்த்.

Rajinikanth speech about womens wing in Rajini Makkal Mandram

சூர்யா படத்திற்காக தேசிய விருது பெற்றவர் ரஜினியுடன் இணைந்தார்

சூர்யா படத்திற்காக தேசிய விருது பெற்றவர் ரஜினியுடன் இணைந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

National award winner Cinematographer Thiru to Work With Rajinikanthரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

இப்படத்தின் ரிலீசுக்கு பிறகுதான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த்.

சன்பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சூர்யாவின் 24 என்ற படத்திற்காக தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திரு இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

National award winner Cinematographer Thiru to Work With Rajinikanth

கார்த்தியுடன் இணையும் இரும்புத் திரை இயக்குனர்..? முற்றுப்புள்ளி வைத்த மித்ரன்

கார்த்தியுடன் இணையும் இரும்புத் திரை இயக்குனர்..? முற்றுப்புள்ளி வைத்த மித்ரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthi teams up with Irumbu Thirai director Mithranவிஷால் தயாரித்து நடித்த இரும்புத்திரை படம் அண்மையில் வெளியாகி சக்கைப் போடு போட்டு கொண்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் மித்ரன் என்பவர் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து கார்த்தியை பி.எஸ். மித்ரன் இயக்கவுள்ளதாக செய்திகள் வந்தன.

அந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து மித்ரன் கூறியதாவது…

இரும்புத்திரை படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியை தந்துள்ளது.

இப்போதுதுதற்போது தான் எனது முதல் பட வெற்றியை கொண்டாடி வருகிறேன். உடனடியாக எனது அடுத்த படம் பற்றி பேசுவது சரியாக இருக்காது. அடுத்த படத்திற்கான கதை தயாரான பிறகு, அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருக்கிறார்

Irumbu Thirai director PS Mithran clarifies about his next movie

PS Mithran‏ @Psmithran
I’m slowly coming to terms with #IrumbuThirai ‘s response. It is too early to talk about my next film when I’m celebrating the support you have showered on us. Let me take the pleasure of officially breaking the news about my next film after I am done figuring out the script

விஜய் பிறந்தநாளில் எஸ்ஏ. சந்திரசேகர் கொடுக்கும் மெகா ட்ரீட்

விஜய் பிறந்தநாளில் எஸ்ஏ. சந்திரசேகர் கொடுக்கும் மெகா ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

On Vijay Birthday SAC plans to release his Traffic Ramasamy movieசமூக போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை படத்தில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார்.

அவரது மனைவியாக ரோகினி நடிக்க, முக்கி வேடங்களில் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, சீமான், பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில் விஜய்சேதுபதி கேரக்டர் முதலில் விஜய்க்கு ஒதுக்கப்பட்டதாம். அவருக்கு பதிலாகதான் இவர் நடித்துள்ளாராம்.

நடிகர் விஜய் ஆண்டனி, விஜய் ஆண்டனியாகவே நடித்திருக்கிறார். குஷ்பு அரசியல்வாதியாகவும், அம்பிகா நீதிபதியாகவும் நடித்துள்ளனர்.

எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவியாளர் விக்கி இயக்கி உள்ளார். பாலமுரளி பாலு இசை அமைத்திருக்கிறார். குகன் எஸ்.பழனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

எனவே படத்தை வெளியிட தயாரிப்பாளர் சங்க விதிமுறைகளின் படி 3 தேதிகள் தயாரிப்பு தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டதாம்.

அதில் ஜுன் 22ந் தேதியை தேர்வு செய்து அதில் வெளியிட்டுக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

ஜூன் 22ந் தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாள் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்தானே…

ம்ம்… மகன் பிறந்த நாளில் அப்பா ஹீரோவாக நடித்த படம் வெளியானால் இருவருக்கும் மகிழ்ச்சிதானே…

On Vijay Birthday SAC plans to release his Traffic Ramasamy movie

More Articles
Follows