தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்த நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் 4 வருட இல்லற வாழ்க்கைக்கு பிறகு பிரிந்தனர்.
இதனை நடிகை சமந்தா தன் சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தார்.
இந்த நிலையில், சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அது சமந்தாவை குறிப்பிட்டு சொன்னாரோ? என்ற சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
சித்தார்த் தன் பதிவில், “ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் செழிப்பாக இருக்க மாட்டார்கள். சிறுவயதில் நான் ஆசிரியரிடம் கற்ற பாடங்களில் ஒன்று” என பதிவிட்டுள்ளார்.
எதையும் யாரையும் குறிப்பிடாமல் இப்படி ஒரு பதிவை சித்தார்த் வெளியிட்டுள்ளதால், அவர் சமந்தாவை மனதில் வைத்துத்தான் கூறியிருக்கிறார் என நெட்டிசகன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.
One of the first lessons I learnt from a teacher in school… “Cheaters never prosper.” What’s yours?
நாகசைதன்யாவை காதலிப்பதற்கு முன்னர் சித்தார்த் உடன் இணைத்து பேசப்பட்டவர் நடிகை சமந்தா. இவர்கள் காதலிப்பதாகவும் திருமணம் செய்யவுள்ளதாகவும் அப்போது கிசுகிசுக்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Actor Siddharth reacts to Samantha’s divorce?