தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மேன் vs வைல்ட் என்ற நிகழ்ச்சி சில மாதங்களுக்கு இந்தியா முழுவதும் பிரபலமானது. இதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சிதான்.
இந்த நிகழ்ச்சி பியர் கிரில்ஸ் எனப்படும் முன்னாள் பிரிட்டிஷ் பாதுகாப்பு படை வீரரால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தும் இதில் கலந்துக் கொண்டுள்ளார்.
இதற்காக கர்நாடகா – கேரளாவை இணைக்கும் பந்திபூர் காடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கே மான்கள், புலிகள், யானைகள் அதிக அளவில் காணப்படுகிறது.
காடுகளில் எப்படி வாழ்வது? அங்கு மனிதர்கள் வாழ்வதற்காக வழிகள் உள்ளதா? உள்ளிட்டவைகளை பியர் கிரில்ஸ் கற்றுத்தருவதாக கூறப்படுகிறது.
போலீஸ் அதிகாரிகள், பாதுகாப்பு சாதனங்கள், உணவுகள், மருத்துவ சாதனங்களுடன் இந்த படப்பிடிப்பு நடந்து வருகிறது.
ரஜினி உயிருக்கு ஆபத்து; பாதுகாப்பு அளிக்க ரசிகர்கள் வேண்டுகோள்
இந்த சூட்டிங்கில் ரஜினியுடன் அவரின் 2வது மகள் சவுந்தர்யாவும் பங்கேற்றுள்ளார்.
ரஜினியின் தனிப்பட்ட பாதுகாவலர்களும் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த காட்டுப்பகுதியில் ரஜினிகாந்த் 2 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துக் கொள்கிறார்.
இது கர்நாடக காட்டுப் பகுதி என்பதால் ஏன் தமிழக காடுகளை ரஜினி தேர்ந்தெடுக்கவில்லை? என சிலர் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் காட்டின் அடர்த்தி, உயிர் பாதுகாப்பு, ஷூட்டிங் வசதி அனைத்தையும் பரிசோதித்த பின்னர்தான் ஏற்பாட்டாளர்கள் இடத்தை தேர்வு செய்வார்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
Actor Rajini participate in Bear Grylls Man vs Wild show