மேக்கப் போட்டால் ஹல்க் போல கோபம்.; மித்ரன் வாயால் பிரியாணியே செய்வார்.; ‘சர்தார்’ சக்ஸஸ் மீட் அப்டேட்ஸ்

மேக்கப் போட்டால் ஹல்க் போல கோபம்.; மித்ரன் வாயால் பிரியாணியே செய்வார்.; ‘சர்தார்’ சக்ஸஸ் மீட் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

#சர்தார் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்ட அப்படக் குழுவினர்கள் பேசியதாவது…

தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசும்போது…

படம் ஆரம்பித்து கொரோனாவைத் தாண்டி, பல சவால்களைத் கடந்து உங்கள் முன்பு சர்தார் படத்தை நிறுத்தியிருக்கிறோம்.

உங்களுடைய ஆதரவான வார்த்தைகள் படத்தை வெற்றியடைய செய்திருக்கிறது. அதற்கு பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.

கார்த்தி என்னுடைய நண்பர். இப்படத்தில் தினமும் அவருடன் பயணித்தேன். அவர் மித்ரனுடன் கலந்து பேசி, ஒவ்வொரு காட்சிக்கும் அவர்கள் காட்டிய ஈடுபாடு எனக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுத்தது. மித்ரன் புத்திசாலியான இயக்குநர். நிறைய படிப்பார்.

லக்ஷ்மன் குமார்

ஒவ்வொரு முறையும் 4 மணி நேர கலந்துரையாடுவது உற்சாகமாக இருக்கும்.

ஜீவி அழகாக இசையமைத்திருக்கிறார். ஒவ்வொரு இடத்தில் சிலிர்க்க வைத்திருக்கிறார். கலை இயக்குநரை யார் அவர்? என்று அனைவரும் பாராட்டி வருகிறார்கள். ரூபன் இரவு பகலாக உழைத்திருக்கிறார்.

ரெட் ஜெயிண்ட் உதயநிதி, ராஜா அனைவரும் மிகப் பெரிய அளவில் உறுதுணையாக இருந்திருக்கிறார். மற்றும் தெலுங்கு, கன்னடம், மலையாள வினியோகஸ்தர்கள் அனைவருக்கும் நன்றி.

உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள், சண்டை உதவி இயக்குநர்கள் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்றார்.

லக்ஷ்மன் குமார்

கலை இயக்குநர் கதிர் பேசும்போது…

நல்ல படங்களை அடையாளம் கண்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பத்திரிகையாளர்களான உங்களுக்கு பெரிய பங்கு இருக்கிறது. தண்ணீர் என்பது இன்றியமையாதது என்று எல்லோருக்கும் தெரியும். அதைப் பற்றி விழிப்புணர்வு கொடுக்கும் படமாக இருக்கிறது.

கதை கேட்கும்போதே இந்த படம் வெற்றியடையும் என்பதை சில படங்களை ஊகிக்க முடியும். அதேபோல் இந்த படத்தின் கதையைக் கேட்கும்போதே வெற்றியடையும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. ஆனாலும், மற்ற படங்களைவிட இப்படத்திற்கு கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. இறுதி 10 நாட்களில் 24 மணி நேரமும் அனைவரும் கடுமையாக உழைத்து படத்தை எடுத்து முடித்தோம்.

ரக்ஷித் சிறப்பாக மேக்கப் போட்டிருந்தார். ஒவ்வொரு வேடத்திலும் அதற்கேற்றாற் போல் உடல்மொழியைக் கொண்டு வருவார். எத்தனை மணி நேரமாக இருந்தாலும் அத்தனை மணி நேரமும் அந்த கதாபாத்திரமாவே உடல் மொழியை மாற்றாமல் அப்படியே இருப்பார்” என்றார்.

கதிர்

ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் பேசும்போது…

“3 வருடம் உழைத்து இப்படத்தை எடுத்து முடித்திருக்கிறோம். இறுதி 6 மாதங்கள் இரவு பகல் பாராமல் உழைத்தோம்” என்றார்.

ஜார்ஜ் வில்லியம்ஸ்

படத்தொகுப்பாளர் ரூபன் பேசும்போது…

“பொதுவாக ஒருவர் நன்றாக பேசினால் வாயால் வடை சுடுவார் என்று கூறுவோம். ஆனால், மித்ரன் வாயால் பிரியாணி செய்வார். சண்டைக் காட்சிகளை கூறும்போது, உண்மையாகவே அடித்து விடுவாரா? என்ற பயம் வரும்.

ஆனால், கதை கூறுவதற்கும் அதை காட்சிப் படுத்துவதற்கும் வித்தியாசம் இருக்கும். வாயால் கூறுவதை படமாக்குவது சவாலான விஷயம். ஆனால், மித்ரன் சொன்னதுபோலவே சிறப்பாக காட்சிப்படுத்தியிருந்தார்.

அதேபோல கதை கேட்கும்போது கார்த்தி சார் நிறைய கேள்விகள் கேட்பார். இப்படத்திலும் நிறைய கேள்விகள் கேட்டார். இறுதியில் அவர் ஒப்புக் கொண்டதும் இப்படம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

மேக்கப் மேன் ஒரு நாள் என்னைத் தொடர்பு கொண்டு சர்தார் வேடத்தின் தொடர்ச்சி சரியாக உள்ளதா? என்று கேட்டார். இதுவரை யாரும் அப்படி கேட்டதில்லை. அதிலிருந்தே அவரின் ஈடுபாடு தெரிந்தது. அதன்பிறகு, எனக்கும் இப்படத்தை மிகச் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.

அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் உதவியாளர்களும் இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்தார்கள். ஒவ்வொருவரும் எது சரி, எது தவறு என்று எடுத்துக் கூறி இப்படம் நன்றாக வருவதற்கு உறுதுணையாக இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.

ரூபன்

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசும்போது…

“ஒரே வருடத்தில் 3 வெவ்வேறான படங்களில் நடித்து வெற்றியும் பெற்றிருக்கிறார். அவர் ஒரு பாடல் பாடினார். கிட்டதட்ட 7 மணி நேரம் ஆனது. ஆனால், இப்பாடலை எப்படி காட்சிப்படுத்த போகிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தோன். ஆனால், எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இயக்குநர் எடுத்திருந்தார்.

மித்ரன் சவாலான இயக்குநர். ஒவ்வொரு காட்சிக்கும் இசை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வாயிலேயே இசையமைத்து காட்டுவார். அவர் நினைத்தபடி வரும்வரை விடவே மாட்டார். பல பாடல்கள் இசையமைத்து முடித்தும் தூக்கி போட்டிருக்கிறோம். என் இசையில் பாதி பங்கு அவரை சேரும் என்றார்.

ஜிவி பிரகாஷ்

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் பேசும்போது…

“இப்படத்தில் யாரும் சந்தோஷமாக வேலை பார்க்க முடியாது என்று லக்ஷ்மன் சாரிடம் கதை கூறும்போதே தெரியும்.

இப்படம் கதையிலிருந்து திரைக்கதையாக்கும்போதிருந்தே கடினமாகத்தான் இருந்தது. கதை ஆக்குவதிலிருந்து சரியாக வருவதற்கு எழுத்தாளர்கள் மிகவும் உழைத்திருக்கிறார்கள். மேலும், இக்கதை கோர்வையாக வருவதற்கு ஜிவி உதவிபுரிந்தார்.

ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு எழுத்தாளர், இந்த பட கதையெய் பற்றி சொல்லுல் போது.. ஒரு மெத்தையில் இருக்கும் பஞ்சை தலையணைக்குள் கொண்டு வந்துவிட்டீர்கள் என்று கூறினார்.

அனைத்து கோணத்திலும் மிகப் பெரிய உழைப்பு இருந்தது. எல்லோருக்கும் எளிமையாக புரிய வேண்டும். கதை தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்கு அதிக உழைப்பு தேவைப்பட்டது. உங்கள் பெயரை மித்ரன் என்பதற்கு பதிலாக மாத்ரன் என்று வைத்துக் கொள்ளுங்கள் என்று ரூபன் கூறினார். அந்தளவிற்கு திரைக்கதையை மாற்றிக் கொண்டே இருப்பேன். படப்பிடிப்பிற்கு 60 நாள் வேண்டுமென்றால், தளம் அமைப்பதற்கு 120 நாட்கள் ஆகும். அதை கலை இயக்குனர் கதிர் சிறப்பாக செய்தார்.

கார்த்தி சார்.. மேக்கப் போடுவதிலிருந்து படப்பிடிப்பு தளத்திற்கு வருவது வரை அவருடைய ஈடுபாட்டை பார்த்து மிரண்டு போனேன். அவரின் கடின உழைப்பு இப்படத்தை இன்னும் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.

ஒரு பாடலுக்கு 7 மணி நேரம் செலவழித்து இப்பாடலை நானே பாடினால் தான் நன்றாக இருக்கும் என்று பாடினார். அவரின் அர்ப்பணிப்பு தான் இப்படம் நன்றாக வருவதற்கு முக்கிய காரணம் என்றார்.

 பி.எஸ்.மித்ரன்

நடிகர் கார்த்தி பேசும்போது,

தனிப்பட்ட நபர் முன்னேற வேண்டும் என்றில்லாமல் ஒரு குழுவாக பணியாற்றிய அனுபவம் எனக்கு அனைத்து படங்களிலும் கிடைத்தது. நானும் தயாரிப்பாளர் லக்ஷ்மனும் எல்.கே.ஜி.-யில் இருந்து நண்பர்கள். அனைத்து அழுத்தத்தையும் தாங்கிக் கொண்டு சிரித்துக் கொண்டே இருப்பார்.

இப்படத்தின் கதையைக் கூறிவிடலாம். ஆனால், காட்சிப்படுத்துவது மிகவும் சிரமம். ஒவ்வொரு காட்சியும் மென்மேலும் சிறப்பாக வருவதற்கு அனைவரும் குழுவாக இருந்து பணியாற்றினார்கள்.

கார்த்தி

ஒவ்வொரு காட்சிக்கும் என்ன தேவையோ அதைக் கேட்டு வாங்கிக் கொள்வார். உதாரணத்திற்கு பாகிஸ்தான் ராணுவ தளத்தை அமைப்பது எளிதல்ல. பார்க்கும்போதே பயம் வர வேண்டும்.

சமீப காலமாக தியாகம் என்பதை கேள்விப்படவில்லை. ஆனால், நாட்டிற்காக தியாகம் செய்தவர் வெளியே தெரியாமல் இருக்கிறார். அதை ஒரு படத்திலேயே அடக்கி, தீவிரமாக கொடுத்த மித்ரனுக்கு நன்றி. மித்ரனும், ரூபனும் பெரிய மேஜிக் செய்திருக்கிறார்கள்.

மேலும், ஒவ்வொரு வேடத்திற்கு மேக்கப் போடும் போது சிரமமாக இருக்கும். அதை கலைக்கும் போது முகம் எரியும். இதைவிட பெரிய ஜாம்பவான்கள் அதிகமாக கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்று என் கோபத்தை நானே கட்டுப்படுத்திக் கொள்வேன்.

கார்த்தி

எனக்காவது 6 மணி நேரம் தூக்கம் கிடைக்கும், ஆனால், ஜார்ஜ்க்கு அதுகூட இருக்காது. அனைவரின் குடும்பத்தாரும் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள். அனைவரின் உழைப்பை வெளியேத் தெரியும்படி செய்த மித்ரனுக்கு நன்றி. படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக அதிகமாக கோபப்பட்டேன். அதுவும், மேக்கப் போட்டால் ஹல்க் மாதிரி கோபம் வரும். ஆனால், அது எல்லாமே படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக தான்.

ஜிவியின் இசை தத்ரூபமாக இருந்தது என்றார். லைலா மேடம் மிகவும் சந்தோஷப்பட்டார். ரஜிஷா மற்றும் ராஷியும் மகிழ்ச்சியடைந்தார்கள். குட்டி பையன் ரித்துவை அனைவரும் பாராட்டுகிறார்கள். முனீஷ்காந்த் அருமையான நடிகர். அவரால் எந்த சந்திப்பிலும் கலந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் கேட்டதற்காக ஒரு பாடலுக்கு நடனமாடி கொடுத்த மைனாவிற்கு நன்றி” என்றார்.

கார்த்தி

Karthi and Mithran speech at Sardar Success meet

‘சர்தார் 2’.. ஹாட்ரிக் வெற்றி.; நடிகர் கார்த்தி செம ஹாஃப்பி

‘சர்தார் 2’.. ஹாட்ரிக் வெற்றி.; நடிகர் கார்த்தி செம ஹாஃப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான கார்த்திக்கு இந்த வருடம் அவரது திரை வாழ்வில் பொன்னான வருடமாக அமைந்துள்ளது.

‘விருமன்’, ”பொன்னியின் செல்வன்’ மற்றும் தீபாவளி ரிலீசாக வெளியான ‘சர்தார்’ படங்கள் பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளன.

சர்தாரின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக, ‘சர்தார்’ பட வெற்றி விழா சந்திப்பில் நடிகர் கார்த்தி அறிவித்தார்.

சர்தார்

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ‘விருமன்’ படத்தில் கரடுமுரடான தோற்றத்தில் கிராமத்து மனிதனாக மிரட்டியிருந்தார் கார்த்தி.

அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் நீண்ட வருட கனவு திரைப்படமாக, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் முதன்மை பாத்திரமான வந்தியதேவன் பாத்திரத்தில், அப்படியே ராஜா காலத்து ஒற்றனாக மக்களின் மனம் கவர்ந்தார்.

இதைத் தொடர்ந்து தீபாவளி கொண்டாட்டமாக வெளியான சர்தார் படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் உளவாளி கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரது நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டுள்ளார்.

மாறுபட்ட கதைக்களம், விதவிதமான கதாப்பாத்திரம் என ஒவ்வொரு படத்திலும் அசத்தி வருகிறார் கார்த்தி.

சர்தார்

கார்த்தி படம் என்றால் நம்பி தியேட்டர் போகலாம் எனும் கருத்தை மக்கள் மனதில் அழுத்தமாக பதித்து, தனக்கென தனியொரு இடத்தை பிடித்துள்ளார்.

தீபாவளிக்கு வெளியான ‘சர்தார்’ படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, எட்டுத்திக்கும் ‘சர்தார்’ பேச்சாகவே இருந்தது.

இந்த நிலையில் இப்படத்தின் (சர்தார்) இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவித்துள்ளார் கார்த்தி. அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பையடுத்து ரசிகர்கள் இச்செய்தியினை கொண்டாடி வருகின்றனர்.

வெற்றி விழாவில், தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்‌ஷ்மன், டைரக்டர் பி.எஸ்.மித்ரன், ரெட் ஜயண்ட் செண்பக மூர்த்தி, இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ்,
எடிட்டர் ரூபன், கலை இயக்குநர் கதிர், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், வசனகர்த்தா பொன் பார்த்திபன், சிறப்பு ஒப்பனையாளர் பட்டணம் ரஷீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சர்தார்

Karthi has won hearts of the people following the Hat trick Hit.

Following the huge success of “Sardar”, Actor Karthi has happily announced that Second Part of the film will be made.!!

This year has been a Golden year for Tamil cinema’s leading Actor Karthi.’Viruman’, ‘Ponniyin Selvan’ and now Diwali release ‘Sardar’ has became a huge success.Actor Karthi has announced that Second Part will be made at the Success Meet.

Karthi appeared in a Rugged look as a village person in Viruman which released in August.Following that he played the important character Vandhiyathevan in Director Mani Ratnam’s ‘Ponniyin Selvan’.He stole hearts as a Spy.Now he has rocked in a dual role as Father and Son in ‘Sardar’.Actor Karthi is entertaining us by choosing different characters and different stories.He has marked his own place.

‘Sardar’ was the Talk of the Town during this diwali.Now Karthi has announced officially that second part of the film will be made.Fans are celebrating this news.

Producer S.Lakshman Kumar, Director P.S.Mithran, Red Giant Movies Senbagamoorthy, Music Director G.V.Prakash, Cinematographer George C.Williams, Editor Ruban, Art Director Kathir, Stunt Master Dilip Subburayan,Dialogue writer Pon Parthiban, Special Makeup Artist Pattanam Rashid participated at the grand success meet of ‘Sardar’.

ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ உலகமெங்கும் வசூல் சாதனை.; கே ஜி எஃப்பை முந்தியது

ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ உலகமெங்கும் வசூல் சாதனை.; கே ஜி எஃப்பை முந்தியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘காந்தாரா’ தீபாவளிக்கு வெளியான நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களைக் கடந்து, 100-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி, வசூல் சாதனை படைத்து வருகிறது.

‘கே ஜி எஃப்’ எனும் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸின் தயாரிப்பில் உருவாகி, வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. கர்நாடக மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பஞ்சுருளி எனும் காவல் தெய்வத்தை மையப்படுத்திய ‘காந்தாரா’ திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கன்னடத்தில் தயாரான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது.

காந்தாரா

அக்டோபர் 15-ம் தேதியன்று தமிழக திரையரங்குகளில் ‘காந்தாரா’ படத்தின் தமிழ் பதிப்பு வெளியானது.

இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், தீபாவளிக்கு வெளியான முன்னணி நடிகர்களின் படங்களுக்கு எந்தவித பாதிப்பில்லாமல் தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருகிறது.

காந்தாரா

நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி உச்சகட்ட காட்சியில் உணர்வுபூர்வமாக நடித்திருக்கும் ‘காந்தாரா’ திரைப்படம், இன்றும் தமிழகம் முழுவதும் 100-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலில் சாதனை படைத்து வருகிறது என திரையுலகினர் உற்சாகத்துடன் தெரிவிக்கிறார்கள்.

இதனிடையே ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ உலகமெங்கும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது என்பதும், கன்னடத்தில் வெளியான ‘கே ஜி எஃப் 2’ படத்தை பார்த்த பார்வையாளர்களை விட, ‘காந்தாரா’ படத்தை பார்வையிட்ட பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காந்தாரா

Rishab Shetty starrer Kantara movie collection updates

சந்தானம் நடிக்கும் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சந்தானம் நடிக்கும் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் படம் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’.

இந்த படம், 2019 ஆம் ஆண்டு ஸ்வரூப் ஆர்.எஸ்.ஜே இயக்கத்தில் நவீன் பொலிச்செட்டி, ஸ்ருதி ஷர்மா நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா’.

தற்போது, இந்த படத்தை தமிழ் ரீமேக்கில் சந்தானம் நடித்து வருகிறார்.சந்தானத்துக்கு ஜோடியாக நடிகை ரியா சுமன் நடிக்கிறார்.

மேலும், இந்த படம் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Agent Kannayiram movie november 25 release

வால்டேர் வீரய்யா படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக கமல் மகள்

வால்டேர் வீரய்யா படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக கமல் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெகா ஸ்டார் சிரஞ்சீவி – மாஸ் மகாராஜா ரவிதேஜா – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாரான ‘வால்டேர் வீரய்யா’ எனும் படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இத்துடன் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் ‘மெகா 154’ என பெயரிடப்பட்டு தொடங்கப்பட்ட திரைப்படத்திற்கு, ‘வால்டேர் வீரய்யா’ என பெயரிடப்பட்டது.

இந்நிலையில் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக ‘வால்டேர் வீரய்யா’ எனும் டைட்டிலுக்கான டீசரை பட குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தீவிர ரசிகரும், இயக்குநருமான பாபி எனப்படும் கே எஸ் ரவீந்திரா இயக்கத்தில் தயாராகும் ‘வால்டேர் வீரய்யா’ எனும் டைட்டிலுக்கான டீசர், சிரஞ்சீவியின் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளியாகி இருக்கிறது.

இதில் பெரிய கப்பல் ஒன்றில் அமர்ந்திருக்கும் வில்லன், ‘வால்டேர் வீரய்யா’வை வார்த்தைகளால் கேலி செய்கிறார். பிறகு மெகா ஸ்டார் சிரஞ்சீவி அந்தக் கப்பலுக்குள் வருகை தந்து, உரிய பதிலடியை அவரது பாணியில் அளிக்கிறார். சிரஞ்சீவியின் அறிமுகக் காட்சியை இயக்குநர் பாபி, சிறப்பான முறையில் வடிவமைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருப்பதால் டீசருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி மீண்டும் பழைய உற்சாகத்திற்கு வந்துவிட்டார் என்றேச் சொல்லலாம்.

ஏனெனில் அவரது தோற்றம், நடை உடல் மொழி, கதாபாத்திர படைப்பு.. ஆகியவை சிரஞ்சீவியின் கடந்த கால பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களில் இடம் பெற்ற சின்ன சின்ன விசயங்களை மீண்டும் நினைவுபடுத்துகிறது.

மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் மாஸ் மகாராஜா ரவி தேஜாவை காண முடியாவிட்டாலும் , படத்தின் வெளியிட்டு தேதியையும், தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்திருக்கிறார்கள். ‘வால்டேர் வீரய்யா’ அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இணைந்து பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.

இவர்களுடன் மாஸ் மகாராஜா ரவிதேஜா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். ஆர்தர் ஏ வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ‘ராக்ஸ்டார்: தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

ஜி. கே. மோகன் மற்றும் எம் பிரவீண் இணை தயாரிப்பாளர்களாகப் பணியாற்றும் இந்த படத்தின் கதை, வசனத்தை பாபி எழுதி இருக்கிறார். இயக்குநர் கோனா வெங்கட் மற்றும் கே. சக்கரவர்த்தி ரெட்டி ஆகியோர் திரைக்கதையை எழுத, கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுத்தாளர்கள் ஹரி மோகன கிருஷ்ணா மற்றும் வினித் பொட்லுரி எழுதியுள்ளனர். படத்தொகுப்பு பணிகளை நிரஞ்சன் தேவராமனே கவனிக்க, ஏ. எஸ். பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் ‘வால்டேர் வீரய்யா’ படத்தின் டைட்டிலுக்கான டீசர், வெளியான இரண்டு மணி நேரத்தில் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

வால்டேர் வீரய்யா

Shruthihassan pair with Chiranjeevi in Walter Veeraiya

https://youtu.be/PlS6KkFfMOM

Megastar Chiranjeevi, Mass Maharaja Ravi Teja, Bobby, Mythri Movie Makers’ Mega154 Titled Waltair Veerayya, Releasing For Sankranthi

The makers of megastar Chiranjeevi’s Mega154 offered a sparkle before Diwali with a small glimpse of Mega154 and it made everyone anticipate curiously for the real Diwali blast. The wait is over, as they released the title teaser of the movie.

A powerful title Waltair Veerayya is finalized for the movie being directed by Chiranjeevi’s hard-core fan Bobby (KS Ravindra). There are some elements fans expect from Chiranjeevi’s movies and Bobby seems to be readying a full meal feast for them.

The title teaser starts off with a villain sitting in a huge ship making a mockery of Waltair Veerayya. Then, comes the megastar and sets the ship on fire, to give a fitting reply. This indeed is the kind of intro one expects in the crazy combo of Chiranjeevi and Bobby.

We must say that vintage Chiranjeevi is back. His get-up, walking style, body language, and characterization brings back memories of Chiranjeevi’s iconic characters from yesteryear blockbusters. Although mass maharaja Ravi Teja can’t be seen he sends Diwali wishes, besides announcing the release date. Waltair Veerayya will be releasing for Sankranthi, 2023.

Arthur A Wilson’s camera work is top-notch, whereas Rockstar Devi Sri Prasad has fired up the visuals with his background score. The production design of Mythri Movie Makers are high in standard.

Shruti Haasan is the leading lady opposite Chiranjeevi in the film billed to be a mass-action entertainer laced with all the commercial ingredients. The film is produced on a grand scale by Naveen Yerneni and Y Ravi Shankar of Mythri Movie Makers, while GK Mohan is the co-producer.

Niranjan Devaramane is the editor and AS Prakash is the production designer. Sushmita Konidela is the costume designer.

While the story and dialogue were written by Bobby himself, Kona Venkat and K Chakravarthy Reddy penned the screenplay. The writing department also includes Hari Mohana Krishna and Vineeth Potluri.

Cast: Chiranjeevi, Ravi Teja, Shruti Haasan and others.

Technical Crew:
Story, Dialogues, Direction: KS Ravindra (Bobby)
Producers: Naveen Yerneni and Y Ravi Shankar
Banner: Mythri Movie Makers
Music Director: Devi Sri Prasad
DOP: Arthur A Wilson
Editor: Niranjan Devaramane
Production Designer: AS Prakash
Co-Producers: GK Mohan, Praveen M
Screenplay: Kona Venkat, K Chakravarthy Reddy
Additional Writing: Hari Mohana Krishna, Vineeth Potluri
CEO: Cherry
Costume Designer: Sushmita Konidela
Line Producer: Balasubramanyam KVV
PRO: Yuvraaj
Publicity: Baba Sai Kumar
Marketing: First Show

விக்ரம் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் ‘தங்கலான்’

விக்ரம் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் ‘தங்கலான்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு ‘தங்கலான்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் இந்த டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

முத்திரை பதித்த முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இவருடன் நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகன் நடிகர்கள் பசுபதி, ஹரி கிருஷ்ணன், அன்பு துரை உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

தமிழ் பிரபா இணை கதாசிரியராக பணியாற்ற, கலை இயக்கத்தை எஸ். எஸ். மூர்த்தி கையாள, படத்தொகுப்பு பணிகளை ஆர். கே. செல்வா கவனிக்க, சண்டை காட்சிகளை ஸ்டன்னர் சாம் அமைக்கிறார். கோலார் தங்க வயலைக் கதைக்களப் பின்னணியாகக் கொண்டு, ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜாவும், நீலம் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித்தும் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.

‘சீயான் 61’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இப்படத்திற்கு தற்போது ‘தங்கலான்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் காணொளி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. சீயான் விக்ரம் ரசிகர்களுக்கு, அவர் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு, தீபாவளி விருந்தாக வெளியாகியிருப்பதால் உற்சாகமடைந்து இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Chiyaan Vikram Ranjith team up for Thangalaan

Chiyaan Vikram starrer “Thangalaan”

Chiyaan Vikram’s new project has been titled “Thangalaan”. This film, directed by Pa. Ranjith has now got its title announcement poster revealed now.

The film directed by eminent filmmaker Pa Ranjith has been titled Thangalaan. CHIYAAN VIKRAM plays the content-driven hero in this movie that features Parvathy and Malavika Mohanan in the female lead characters. The others in the star-cast include include pasupathy, Hari Krishnan, Anbu Durai and few more prominent actors.

A. Kishore is handling the cinematography and GV Prakash Kumar is composing music. Tamizh Prabha is the co-writer of this film and art department is handled by S.S. Moorthy. R.K. Selva (Editing) and Stunner Sam (Stunts) are the others in star cast.

The story set against the backdrops of Kolar Gold Field, the film crafted and materialized as an action entertainer is produced by eminent Studio Green K.E. Gnanavel Raja in association with Pa. Ranjith’s Neelam Productions at a whopping budget.

Chiyaan Vikram’s upcoming film tentatively titled ‘Chiyaan 61’ has been named as “Thangalaan”. The title announcement poster unveiled for the auspicious occasion of Diwali Eve has turned to be a colossal festive treat for the Chiyaan fans

More Articles
Follows