தன் காதலை சேர்த்து வைத்த நண்பனை தேடி அலையும் அபி சரவணன்

தன் காதலை சேர்த்து வைத்த நண்பனை தேடி அலையும் அபி சரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kumbaariராயல் எண்டர்ப்ரைசஸ் சார்பில் ‘பறம்பு’ குமாரதாஸ் தயாரிக்கும் தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் திரைப்படம் ‘கும்பாரி’.

யோகிபாபு நடிப்பில் ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ எனும் திரைப்படத்தை இயக்கிய கெவின் இரண்டாவதாக இந்த படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 30 நாட்களாக நடைபெற்று முடிந்தது. இதனை கும்பாரி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டினர்.

நாயகனாக அபி சரவணன், நாயகியாக மஹானா ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் ஜான் விஜய், பருத்திவீரன் சரவணன், மதுமிதா, சாம்ஸ் & காதல் சுகுமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இப்படம் பற்றி இயக்குனர் கெவின் கூறியதாவது …

இந்த படம் காதல், காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. நாயகனின் காதலை சேர்த்து வைத்த பால்ய மீனவ நண்பன் தீடிரென காணாமல் போகிறான்.

காணாமல் போன நண்பனை நாயகன் காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை.

இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமாரி, நாகர்கோவில், பூவாறு, முட்டம், பறம்பு மற்றும் கேரளாவின் அடர்ந்த காட்டுப்பகுதி ஆகிய இடங்களில் 30 நாட்களாக ஒரே கட்டமாக நடைபெற்று முடித்துள்ளோம்.

பிரசாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெயப்ரகாஷ் & ஜெய்தன் ஆகியோர் இசையமைக்கிறார்கள்.

ஜெய் படத்தொகுப்பு செய்ய, ராஜு முருகன் நடனம் அமைத்துள்ளார். மைக்கல் சண்டைக்காட்சிகளை அமைக்க, கிருஷ்ணமூர்த்தி டிஐ செய்கிறார்.

Abi Saravanan next film is titled Kumbaari

வாக்கு எண்ணிக்கைக்கு தடை.? மே 1 & 2 ஊரடங்கு குறித்து தமிழக புதுச்சேரி அரசுகள் பரிசீலிக்க கோர்ட் உத்தரவு

வாக்கு எண்ணிக்கைக்கு தடை.? மே 1 & 2 ஊரடங்கு குறித்து தமிழக புதுச்சேரி அரசுகள் பரிசீலிக்க கோர்ட் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

high court of madrasதமிழகம், புதுச்சேரியில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது்

இந்த சிகிச்சைக்கான தடுப்பூசி, ஆக்சிஜன், வென்டிலேட்டர், படுக்கைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்துள்ளது.

மேலும் சிலர் கொடுத்துள்ள பொதுநல வழக்குகளும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,…

“மக்கள் நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாகத் தெரியவந்தால், மே 2 வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்கப்படும்.

இத்துடன் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குத் வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைக்க கூட உத்தரவிடுவோம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையம் கடைப்பிடிக்க வேண்டும்.

கொரோனா சிகிச்சையில் மக்களின் உயிர் காக்கும் விவகாரத்தில் விஐபி கலாச்சாரம் இருக்கக் கூடாது.

ரெம்டெசிவிர் மருந்தை அனைவரும் தினமும் பயன்படுத்த வேண்டியதில்லை. வென்டிலேட்டர், ரெம்டெசிவிர் ஆகியவை யாருக்குத் தேவைப்படுகிறது என்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.

கொரோனா தொற்று உள்ளதா? என சோதனை செய்யாமல் அரசு மருத்துவமனைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர்.

விமான நிலையங்கள் மற்றும் மாநில எல்லைகளில் கரோனா பரிசோதனையைக் கட்டாயமாக்க வேண்டும்.

மே 1 (தொழிலாளர் தினம் அரசு விடுமுறை) மற்றும் 2 (வாக்கு எண்ணிக்கை) தேதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து தமிழக, புதுச்சேரி அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.

தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தை அணுகுபவர்களுக்கு மட்டும் அனுமதிக்கும் வகையில் ஏப்ரல் 28-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும்” என்று பரிந்துரை செய்தனர்.

இத்துடன் இந்த, வழக்கை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

High court asks TN & Podny government to implement lock down on May 1 & 2

கொரோனா கொடுமை.: ரஜினி அன்றே சொன்னதை ஆதரித்த ஐகோர்ட்.; ட்விட்டரில் ட்ரெண்டிங்

கொரோனா கொடுமை.: ரஜினி அன்றே சொன்னதை ஆதரித்த ஐகோர்ட்.; ட்விட்டரில் ட்ரெண்டிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthகடந்த (ஏப்ரல்) 6ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் “கரூரில் வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற உத்தரவிடக்கோரி தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் அதிமுக வேட்பாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அதில்…” இரண்டு அறைகளில் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.

கொரோனா 2வது அலை பரவி வரும் நிலையில் 77 வேட்பாளர்களின் முகவர்களையும் (பூத் ஏஜண்ட்) வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கும் போது தனிமனித சமூக இடைவெளியை பின்பற்ற முடியாது.

கொரோனா நடைமுறைகளை பின்பற்ற முடியாத நிலை ஏற்படும்’ என அமைச்சர் தனது மனுவில் கூறியிருந்தார்.

மேலும் வாக்கு எண்ணிக்கையை மூன்று அறைகளில் நடத்த வேண்டும். குறைந்த எண்ணிக்கையில் மட்டும் முகவர்களை அனுமதிக்க வேண்டும்.

அத்துடன் அவசர தேவைக்கு மருத்துவ குழுவை பணியமர்த்த வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது…

“கொரோனா பரவலுக்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரமே காரணம். அவர்கள் தங்கள் இஷ்டம்போல் பிரசாரம் செய்தனர்.

நீதிமன்றம் எவ்வளவு அறிவுறுத்தியும் தேர்தல் ஆணையம் காதில் வாங்கவில்லை.

தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வேற்று கிரகத்தில் இருந்தார்களா?

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளுக்காக தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை.

மே 2 வாக்கு எண்ணிக்கை நாளன்று அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருக்க வேண்டும்.

ஒருவேளை கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும்” எனவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேர்தல் ஆணையத்தை இன்றைய விசாரணையில் எச்சரித்தனர்.

இந்த நிலையில் ஐகோர்ட்டின் இந்த உத்தரவை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

“எங்கள் தலைவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் விலகி 29/12/2020 அன்று ஓர் அறிக்கை விட்டார்.

அப்போது.. கொரோனா 2வது அலை உருவெடுத்து விட்டது. அரசியலுக்கு வருவேன் என்று கூறி விட்டு வராமல் போனால் நாலு பேர் நாலு விதமாக பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி வருபவர்களை (கொரோனாவுக்கு) பலிகடா ஆக்க மாட்டேன்.

நான் உண்மையை பேசுவதற்கு என்றுமே தயங்கியதில்லை.” என அந்த அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

அன்று ரஜினிகாந்த் சொன்னதை தான் இன்று ஐகோர்ட்டும் தெரிவித்துள்ளது என்பதை அன்றே_சொன்ன_ரஜினி என்ற ஹேஷ்டேக்கில் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Rajini fans happy with madras high court desicion

மீண்டும் ஓடிடி-யில் ரிலீசாகும் நயன்தாராவின் புதிய படம்..?

மீண்டும் ஓடிடி-யில் ரிலீசாகும் நயன்தாராவின் புதிய படம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayanthara netrikannகொரோனா வைரஸ் பரவல் தமிழகத்திலும் வேகம் எடுத்துள்ளது.

இதனால் ஏப்ரல் 26 முதல் தற்போது திரையரங்குகளை மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் இந்த மாதம் ரிலீசுக்கு தயாராக இருந்த சசிகுமாரின் ‘எம்.ஜி.ஆர். மகன்’ மற்றும் கங்கனா ரனாவத்தின் ‘தலைவி’ திரைப்படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நயன்தாரா நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிப்பில் முதன்முதலாக உருவான திரைப்படம்தான் இது.

இதில் பார்வை தெரியாத பெண்ணாக நயன்தாரா நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது.

கடந்தாண்டு் 2020 தீபாவளி சமயத்தில் ஆர்ஜே பாலாஜி நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ படம் ஓடிடி-யில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Nayanthara’s another film to release in OTT

ஆக்சிஜனுக்கு ஆயிரம் வழியிருக்கு..; தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு கமல் எதிர்ப்பு

ஆக்சிஜனுக்கு ஆயிரம் வழியிருக்கு..; தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு கமல் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasan (1)ஸ்டெர்லைட் ஆலை திறக்க தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதை குறித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் அறிக்கை

ஸ்டெர்லைட் ஆலையை விட்டால் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேறு நிறுவனங்களே தமிழகத்தில் இல்லையா?!

கொரோனா பெருந்தொற்று தீவிரமடைந்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழப்புகள் நேரிடுகிறது. உயிர்காக்கும் ஆக்சிஜன் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யத்திற்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறப்பது என்பதில் சிறிதும் உடன்பாடில்லை.

இதற்காக நடந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம், மதிமுக, நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு இல்லை. காரணம் எளிதானது.

சுற்றுச்சூழலைச் சீர்குலைக்கும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டே ஆகவேண்டும் என்று போராட்ட களத்தில் நின்ற கட்சிகள் இவை.

ஒரு நாளைக்கு 400 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறனுடையது தமிழகம். தற்போதைய தேவை நாள் ஒன்று 240 டன் ஆக்சிஜன். 1200 டன் ஆக்சிஜனை சேமித்து வைக்கும் திறனும் வசதியும் தமிழகத்திற்கு உள்ளது.

எந்த ஒரு தொழிற்சாலையிலும் ஆக்சிஜன் தயாரிக்க முடியும். குஜராத்தில் பனாஸ் பால் கூட்டுறவுச் சங்கம் வெறும் 72 மணி நேரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை நிறுவி உற்பத்தியைத் துவங்கியுள்ளது ஓர் எளிய உதாரணம்.

தமிழகத்தில் ஆக்சிஜன் தயாரிக்கும் திறன் உடைய நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் நிறைய இருக்கின்றன என்கிறார்கள் தொழிற்துறையினர்.

இந்தியாவின் பல மாநிலங்கள் ஆக்சிஜன் உற்பத்தியில் தன்னிறைவை எட்டியுள்ளன. உண்மையான பிரச்சனை தேவைப்படும் இடங்களுக்கு ஆக்சிஜனை உடனுக்குடன் கொண்டு செல்வதற்கான வினியோக வசதிகள் இல்லை என்பதே என்கிறார்கள் வல்லுனர்கள்.

ஆகவே, ஸ்டெர்லைட் ஆலையை திறந்துதான் ஆக்சிஜன் உற்பத்தி செய்யவேண்டும் என்பது ஏற்புடையதல்ல.

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க ஒத்துழைக்கக் கூடியவர்களை மட்டும் கூட்டி ஆலையைத் திறக்கலாம் எனும் ஒருமித்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது.

லாக்டவுணில் லட்சக்கணக்கானவர்கள் பட்டினி கிடந்த போதும், சாலைகளில் நடந்தே சென்று அடிபட்டுச் செத்தபோதும் கூட கூட்டப்படாத அனைத்துக் கட்சி கூட்டம் ஸ்டெர்லைட்டுக்காக மட்டும் கூடுகிறது.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை நீத்த 13 பேரின் குடும்பமும் சுற்றமும் இவர்களை மன்னிக்காது. ஓர் அவசர கால நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்வதா?

திமுகவின் மகத்தான ஆட்சியால் தென்மாவட்டங்களில் நாளொன்றுக்கு 16 மணி நேர மின்வெட்டு நிலவியது. தென் மாவட்ட மக்கள் சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆளாயினர். அப்போது கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் உச்சத்தில் இருந்தது. தென்மாவட்ட மக்கள் கூடங்குளம் அணு உலை திறக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கவில்லை. மின்சாரம் தேவைதான்.

ஆனால், கடல்வளத்தை அழித்து இடிந்தகரை மக்களின் ஆரோக்கியத்தையும் வாழ்வாதாரத்தையும் குலைத்துதான் மின்சாரம் கிடைக்கும் என்றால் அது தேவையில்லை என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது. தமிழக அரசும் தூத்துக்குடி மக்களின் உணர்வுகளையும் எதிர்காலத்தையும் மதித்தே முடிவு எடுத்திருக்க வேண்டும்.

மீண்டும் சொல்கிறோம், பெருந்தொற்று காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்சிஜன் உற்பத்தி தேவை என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை.

தமிழகம் இத்தருணத்தில் தேசத்திற்குக் கைகொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. ஆனால், அது தூத்துக்குடி மக்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து நடத்திய போராட்டத்தைப் பொருளிழக்கச் செய்யும் விதமாக அமைந்து விடக் கூடாது.

இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் இன்னொரு நெடிய போராட்டத்திற்கான விதையைத் தூவிடும் இந்த முடிவை மாநில அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.

கமல் ஹாசன்,
தலைவர் – மக்கள் நீதி மய்யம்.

MNM leader Kamal Haasan on Sterlite re opening

எலெக்சன் ஆபிசர்ஸ் வேற்று கிரகத்தில் இருந்தார்களா? தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தல்..; ஐகோர்ட் அதிரடி

எலெக்சன் ஆபிசர்ஸ் வேற்று கிரகத்தில் இருந்தார்களா? தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தல்..; ஐகோர்ட் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

madras high court (2)கடந்த (ஏப்ரல்) 6ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் “கரூரில் வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற உத்தரவிடக்கோரி தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் அதிமுக வேட்பாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அதில்…” இரண்டு அறைகளில் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.

கொரோனா 2வது அலை பரவி வரும் நிலையில் 77 வேட்பாளர்களின் முகவர்களையும் (பூத் ஏஜண்ட்) வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கும் போது தனிமனித சமூக இடைவெளியை பின்பற்ற முடியாது.

கொரோனா நடைமுறைகளை பின்பற்ற முடியாத நிலை ஏற்படும்’ என அமைச்சர் தனது மனுவில் கூறியிருந்தார்.

மேலும் வாக்கு எண்ணிக்கையை மூன்று அறைகளில் நடத்த வேண்டும். குறைந்த எண்ணிக்கையில் மட்டும் முகவர்களை அனுமதிக்க வேண்டும்.

அத்துடன் அவசர தேவைக்கு மருத்துவ குழுவை பணியமர்த்த வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது…

“கொரோனா பரவலுக்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரமே காரணம். அவர்கள் தங்கள் இஷ்டம்போல் பிரசாரம் செய்தனர்.

நீதிமன்றம் எவ்வளவு அறிவுறுத்தியும் தேர்தல் ஆணையம் காதில் வாங்கவில்லை.

தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வேற்று கிரகத்தில் இருந்தார்களா?

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளுக்காக தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை.

மே 2 வாக்கு எண்ணிக்கை நாளன்று அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருக்க வேண்டும்.

ஒருவேளை கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும்” எனவும் உயர்நீதி நீதிபதிகள் தேர்தல் ஆணையத்தை எச்சரித்தனர்.

Election Commission should be put up on murder charges – Madras High Court

More Articles
Follows