சின்ன படங்களுக்கு வரவேற்பு இருக்கு.; ஆனால் சரியான ரிலீஸ் வேண்டும் – ஜீவா

சின்ன படங்களுக்கு வரவேற்பு இருக்கு.; ஆனால் சரியான ரிலீஸ் வேண்டும் – ஜீவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் T.குமாரதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கும்பாரி’. இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை கெவின் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகர்களாக விஜய் விஷ்வா, நலீப் ஜியா நடிக்க, கதாநாயகியாக மஹானா சஞ்சீவி நடித்திருக்கிறார்.

மேலும் ஜான்விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி, காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், எஸ்.ஆர்.பிரபாகரன், சரவண சக்தி நடிகர்கள் அப்புக்குட்டி. ஜீவா, ரோபோ சங்கர், பிரஜன், ஜெயிலர் கலையரசன், ராட்சசன் சரவணன் மற்றும் பின்னணி பாடகி மாலதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

லொள்ளு சபா புகழ் நடிகர் ஜீவா பேசும்போது… “இந்த படத்தில் மீனவ மக்களின் வாழ்க்கையை அழகாக சொல்லி இருக்கிறார்கள் என்பது படத்தின் ட்ரெய்லரையும் பாடல்களையும் பார்க்கும்போது தெரிகிறது. சிறிய படமாக இருந்தாலும் நல்ல படங்களுக்கு மக்கள் வரவேற்பு கொடுக்கிறார்கள். ஆனால் சரியான நேரத்தில் படங்களை ரிலீஸ் செய்தால் வெற்றி நிச்சயம்” என்று கூறினார்.

Small budget movies should have good time release says Jeeva

Rajini at Himalayas : துறவிகள் ஆசிரமத்துக்கு நன்கொடை.; கவர்னரை அடுத்து முதல்வரை சந்திக்கும் ரஜினி.?

Rajini at Himalayas : துறவிகள் ஆசிரமத்துக்கு நன்கொடை.; கவர்னரை அடுத்து முதல்வரை சந்திக்கும் ரஜினி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த வாரம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.

ரஜினிகாந்த் பொதுவாகவே தன்னுடைய படங்களை முடித்துவிட்டு அந்த படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இமயமலைக்கு பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டவர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த கடந்த நான்கு வருடங்களாக அவர் இமயமலை செல்வதை தவிர்த்து இருந்தார்.

தற்போது 4 வருடங்களுக்குப் பிறகு இமயமலை சென்று அங்கு தன்னுடைய ஆன்மீக சுற்றுப்பயணத்தை செய்து வருகிறார் ரஜினிகாந்த்.

இப்பயணத்தின்போது, ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு சென்றார்.

ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்கு சென்று,துறவிகளை சந்தித்து உரையாடினார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. மேலும் பலரும் ரஜினியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். அதுபோல ரஜினியும் சில துறவிகள்ளிடம் ஆசிகள் பெற்றார்.

பின்னர் உத்தரகாண்ட் வியாசர் குகைக்கு சென்ளார். பிறகு துவாரஹட்டில் உள்ள மகாவதார் பாபாஜி குகைக்கு சென்று
குகையில் தியானம் செய்தார் ரஜினி.

இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு, ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேற்று சந்தித்தார் ரஜினி.

இதன் பின்னர் ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரம துறவிகளை சந்தித்து ஆசிரமத்துக்கு நன்கொடையும் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து ஜார்க்கண்ட் ராம்கர் மாவட்டத்தில் உள்ள சின்னமஸ்தா காளி கோயிலுக்கு சென்று வழிபட்டார்.

இன்று ஆகஸ்ட் 18 லக்னோ சென்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேச உள்ளார் ரஜினி என கூறப்படுகிறது.

Rajinis spiritual tour at Himalayas after Jailer release

RECORD MAKER RAJINI உலகளவில் ‘ஜெயிலர்’ படைத்த வசூல் ரெக்கார்ட்

RECORD MAKER RAJINI உலகளவில் ‘ஜெயிலர்’ படைத்த வசூல் ரெக்கார்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நெல்சன் இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க கலாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்திருந்தார்.

இப்படம் வெளியான நாள் முதலே உலகளவில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ.375. 40 கோடியை கடந்துள்ளது.

இதனை படக்குழு போஸ்டரை ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.

‘ஜெயிலர்’ படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரே வாரத்தில் ரூ.375. 40 கோடியை வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது.

மேலும், அந்த போஸ்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரெகார்ட் மேக்கர் (Super star rajinikanth record maker) என பதிவிட்டுள்ளது.

ஜெயிலர்

Rajinikanth’s Jailer really collected at box office in its first week for 375 crore

‘ஜெயிலர்’ பட வெற்றியால் குஷியில் சிம்பு பட புரொடியூசர் பதம்குமார்

‘ஜெயிலர்’ பட வெற்றியால் குஷியில் சிம்பு பட புரொடியூசர் பதம்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பதம் குமார். இந்தியில் பல படங்களை இயக்கியுள்ள இவர் சிம்பு நடித்த ‘போடா போடி’ படத்தை தயாரித்தும் உள்ளார்.

இவர் பாவக் கதைகள் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் இவரது வில்லத்தனம் பேசப்பட்டது. அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டினார்.

தற்போது ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிக்கப்பட்டது.

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் ப்ளாஷ்பேக் ஜெயில் காட்சியில்.. எனக்கு 30 எம்எல்ஏ ஆதரவு உள்ளது என்று ஒரு கைதி சொல்வார். அவர் தான் பதம்குமார்.

இதன் மூலம் இவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. இதற்கு ரஜினி மற்றும் நெல்சனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

முதல்முறையாக வெள்ளித்திரையில் நடித்துள்ள தனது முதல் படமே ரஜினி படமாக இருந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள இவர் அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்வு செய்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Dop and Director Padam Kumar happy with Jailer success

24 மணி நேரத்தில் ‘லியோ’ அர்ஜூன் கிளிம்ப்ஸ் படைத்த சாதனை

24 மணி நேரத்தில் ‘லியோ’ அர்ஜூன் கிளிம்ப்ஸ் படைத்த சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’.

இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து நடிகர் அர்ஜூனின் பிறந்த நாளையொட்டி அவரது கதாபாத்திரமான ஹரோல்ட்தாஸின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

இந்த நிலையில், இந்த கிளிம்ப்ஸ் வீடியோ ஒரே நாளில் 15.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

leo movie arjun’s charactor Harold Das Glimpse one day 15.5 millions views Crossed

என் தகுதிக்கு மீறிய செயல்.; 8 படங்களை ——- பண்றேன்.; மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கிய KPY பாலா

என் தகுதிக்கு மீறிய செயல்.; 8 படங்களை ——- பண்றேன்.; மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கிய KPY பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலா. இவர் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று தன் திறமைகளை நிரூபித்து தற்போது சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரைட் நாயகனாக உயர்ந்திருக்கிறார்.

இவரது காமெடிக்கு சிரிக்காதவர்களே இல்லை என்னும் அளவுக்கு காமெடியனாகவும் உயர்ந்து வருகிறார்.

சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 17 ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மலைவாழ் பகுதி மக்களுக்கு நடமாடும் ஐ சி யு ஆம்புலன்ஸ் ஒன்றை தனது சொந்தப் பணத்தின் மூலம் வழங்கியுள்ளார்.

இது குறித்து பாலா பேசியதாவது..

“எனது தகுதிக்கு மீறிய செயலாக இந்த ஆம்புலன்ஸ் வழங்கியதை கருதுகிறேன். நிறைய பிரபலங்கள் நிறைய உதவிகளை செய்து வருகிறார்கள். சமூக ஆர்வலர்களும் செய்து வருகிறார்கள். அதை ஒப்பிடும்போது இது பெரிய விஷயம் இல்லை.

ஆனால் என்னுடைய சக்திக்கு மீறி என்னுடைய தகுதிக்கு மீறி நான் இந்த ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளேன்.

இந்த ஈரோடு மாவட்ட மலை பகுதிகளில் கிட்டத்தட்ட 12 கிராமங்களில் சுமார் 8,000 மக்கள் வசிப்பதாக தெரிவித்தனர்.

மேலும் இரவில் புழு பூச்சி பாம்பு மற்றும் மிருகங்களால் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல கிட்டத்தட்ட 18 கிலோமீட்டர் செல்ல வேண்டி உள்ளதாகவும் தங்களுக்கு ஒரு ஆம்புலன்ஸ் தேவை எனவும் தெரிவித்திருந்தனர்.

எனவே அவர்களின் கருத்தை மனதில் கொண்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நிறைய நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் பெற்ற வருமானத்தை கொண்டு இந்த ஆம்புலன்ஸை வழங்கியுள்ளேன்.

இந்த 2023 வருடத்திற்குள் இது போன்ற 10 ஆம்புலன்ஸ் வழங்க நினைக்கிறேன். அதற்கு மக்களுடைய ஆதரவு வேண்டும். மக்கள் ஆதரவினால் தான் நான் இன்று நல்ல நிலைக்கு உயர்ந்து வருகிறேன்.

எனவே மக்களுக்காக அவர்கள் கொடுத்ததை நான் திருப்பி கொடுத்து வருகிறேன். மேலும் ஏழை மாணவர்களின் கல்விக்கும் உதவி வருகிறேன்.

நான் ஒரு சாதாரண ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது தந்தை பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். எனது தாயார் வீட்டு வேலைகளை செய்து வருகிறார்.

எட்டு படங்கள் பண்ணிக் கொண்டிருக்கிறேன் என கலாய்த்து விட்டு 8 படங்களை டவுன்லோட் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.

தற்போது சின்ன திரையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.”
என்றார் KPY பாலா.

KPY Bala donated ICU Mobile Ambulance to Erode Peoples

More Articles
Follows