‘மன்மதலீலை’ & ‘செல்ஃபி’ & ‘இடியட்’ படங்களுடன் மோத வரும் ‘பூசாண்டி வரான்’

‘மன்மதலீலை’ & ‘செல்ஃபி’ & ‘இடியட்’ படங்களுடன் மோத வரும் ‘பூசாண்டி வரான்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம்பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இடியட்’ படம் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தில் மிர்ச்சி சிவாவுடன், நிக்கி கல்ராணி, ஊர்வசி, அக்ஷரா கவுடா, மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர்.

இதே நாளில் ‘செல்ஃபி’ படமும் வெளியாகவுள்ளது.

ஜிவி பிரகாஷ், கௌதம் மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘செல்ஃபி’.

சென்சாரில் ‘யுஏ’ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இயக்குநர் வெற்றிமாறனுடன் உதவி இயக்குநராக பணியாற்றிய மதிமாறன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

நீட் தேர்வை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாம்.

இந்த நாளில் இணைந்துள்ளது மற்றொரு படம். அதன் விவரம் வருமாறு…

ட்ரையம் ஸ்டுடியோ மலேசிய பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆண்டி தயாரித்துள்ள பூச்சாண்டி என்ற தமிழ் படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி “பூசாண்டி வரான்” என்ற பெயரில் தமிழ்நாட்டில் வெளியாக இருக்கிறது.

இப்படம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி மலேசியாவில் பூச்சாண்டி என்ற தலைப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

JK விக்கி எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு டஸ்டின் இசை அமைக்க, அசலிஷாம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

எடிட்டிங் பணியை இயக்குநர் JK விக்கியே செய்துள்ளார்.

இப்படத்தில், லோகன், தினேஷ், எஸ்.கிருஷ்ணன், கணேசன், மனோகரன், ரமணா, ஹம்ஷினி பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர்.

வெள்ளித்திரை டாக்கீஸ் தயாரிப்பாளர், நடிகர் முஜீப் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடும் “பூ சாண்டி வரான்”.

வரலாற்று நிகழ்வுகள் மற்றும் சில உண்மை சம்பவங்கள் பிண்ணணியோடு உருவாக்கப்படுள்ள இந்த திரில்லர் படத்தை மலேசிய தமிழ் மக்கள் வெகுவாக ரசித்ததை போல தமிழக மக்களும் ரசித்து மகிழ்வார்கள் என்று நம்புகிறது படக்குழு…

வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘மன்மதலீலை’ படமும் ஏப்ரல் 1-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

வெங்கட் பிரபுவிடம்
உதவி இயக்குநராக பணியாற்றிய மணிவண்ணன் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இப்படத்தில் அசோக்
செல்வனுடன் நாயகிகளாக சம்யுக்தா ஹெக்டே,
ஸ்மிருதி வெங்கட்,
ரியா சுமன் ஆகியோர்
நடித்துள்ளனர். பிரேம்ஜி இசையமைத்துள்ள இப்படத்துக்கு தமிழ்
ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

4 Tamil movies clash on April 1st week

ராதே ஷ்யாம் படு தோல்வி.. பாதி சம்பளத்தை திருப்பிக் கொடுத்தாரா பிரபாஸ்.?

ராதே ஷ்யாம் படு தோல்வி.. பாதி சம்பளத்தை திருப்பிக் கொடுத்தாரா பிரபாஸ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பாகுபலி’ புகழ் பிரபாஸ் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘ராதே ஷ்யாம்’.

இந்த படம் பான் இந்திய படமாக ஐந்து மொழிகளில் வெளியானது.

இதில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.

இப்படத்திற்கு பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்களே வந்தன.

இதனால் படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை. இதனால் தயாரிப்பாளருக்கு 150 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதனால் ராதே ஷ்யாம் படத்துக்காக வாங்கிய ரூ.100 கோடி சம்பளத்தில் ரூ.50 கோடியை தயாரிப்பாளரிடம் பிரபாஸ் திருப்பி கொடுத்துவிட்டதாக சொல்லப்படுகின்றது.

Radhe Shyam is a Big ‘Loss’ for Actor Prabhas

‘சூது கவ்வும்’ தர்மத்தை மீட்கும் க்ரைம் த்ரில்லர் ‘பேட்டரி’

‘சூது கவ்வும்’ தர்மத்தை மீட்கும் க்ரைம் த்ரில்லர் ‘பேட்டரி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை, நுங்கம்பாக்கம் ஏரியாவில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடக்கின்றன. அதை கண்டு பிடிக்கும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக புகழ் வருகிறார்.

மருத்துவ ஆராய்ச்சி மாணவியான ஆஷா, வசதியில்லாத இதய நோயாளிகளை கண்டு பிடித்து, அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்கிறார்.

தன் ஒரே மகளை கொலை செய்த கொலைக்காரனை தேடி அலையும் அசிஸ்டன்ட் கமிஷனராக விக்டர் வருகிறார்.

இந்த மூன்று கதா பாத்திரங்களையும் இணைத்து சொல்லப்பட்ட இப்படத்தின் திரைக்கதை பார்வையாளர்களின் இதயத் துடிப்பை எகிறச் செய்யும்.

கல்வியும், மருத்துவமும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமானது. அதில் கற்று தேர்ந்தவர்கள், சேவை மனப்பான்மையுடன் பணியாற்றியது போய், இன்று அதை பணம் சம்பாதிக்கும் வியாபார தளமாக்கி விட்டனர்.

‘சூது கவ்வும்’ தர்மத்தை, அதனிடமிருந்து மீட்கும் க்ரைம் த்ரில்லர் படமே பேட்டரி. பொதுவாக, க்ரைம் கதை என்றாலே எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். இப்படத்தில் வரும் திருப்பங்கள், ஒரு புதிர் விளையாட்டு போல, ஏன்? எதற்கு? எப்படி? என்கிற ஆர்வத்தை தூண்டும் படியாக இருக்கும்

கதாநாயகனாக செங்குட்டுவனும், கதாநாயகியாக அம்மு அபிராமியும் நடித்திருக்கிறார்கள். அவர்களுடன் கன்னட நடிகர் ராஜ் தீபக் ஷெட்டி அறிமுகமகிறார்.

மற்றும் யோக் ஜப்பி, எம். எஸ் பாஸ்கர், நாகேந்திர பிரசாத், அபிஷேக், ராஜ்குமார், ஜார்ஜ் மரியம், கிருஷ்ண குமார், ராம, பேபி மோனிகா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

மக்கள் தொடர்பு ஜான்சன், நிர்வாக தயாரிப்பாளர்கள் நவீன் – ஜெய் சம்பத், பாடல்கள் நெல்லை ஜெயந்தா – தமயந்தி, சண்டை பயிற்சி ஹரி தினேஷ், நடனப் பயிற்சி தினேஷ், படத்தொகுப்பு ராஜேஷ்குமார், கலை சிவா யாதவ், திரைக்கதை – வசனம் ரவிவர்மா பச்சையப்பன் , ஒளிப்பதிவு கே.ஜி. வெங்கடேஷ், இசை சித்தார்த் விபின், கதை – இயக்கம் மனிபாரதி, இணைத் தயாரிப்பு எம். செங்குட்டுவன், எம். கோபிநாத், தயாரிப்பு சி. மாதையன்.

இப்படம் மே மாதம் திரைக்கு வருகிறது.

Battery scheduled for release in May 2022

ராஜமௌலி ராம்சரண் ஜூனியர் என்டிஆர் இணைந்த RRR படத்தை 550 தியேட்டர்களில் வெளியிடும் லைக்கா

ராஜமௌலி ராம்சரண் ஜூனியர் என்டிஆர் இணைந்த RRR படத்தை 550 தியேட்டர்களில் வெளியிடும் லைக்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிவிவி தானய்யா தயாரிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தை நாளை (மார்ச் 25-ஆம் தேதி) தமிழ்நாட்டில் 550 அரங்குகளில் சுபாஸ்கரனின் லைகா நிறுவனம் வெளியிடுகிறது.

தமிழ் (2டி)(3டி), தெலுங்கு (2டி)(3டி)(ஐமாக்ஸ்), ஹிந்தி (2டி)(3டி) ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது.

பிரம்மாண்ட படங்கள் மூலம் தனக்கென தனியிடம் பிடித்துள்ள லைக்கா, இத்திரைப்படத்தையும் தனக்கே உரிய பாணியில் மிகப்பெரிய முறையில் வெளியிடுகிறது.

தமிழகத்தில் மட்டும் இப்படம் 550 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைக்கவுள்ளது. மொழி பெயர்க்கப்பட்ட ஒரு படத்தை இத்தனை திரையரங்குகளில் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.

இது ராஜமௌலியின் முந்தைய வெளியீடான பாகுபலியை விட 150 திரையரங்குகள் அதிகமாகும்.

படத்தில் ராம் சரண் அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர் ஆவார்.

ஜூனியர் என்டிஆர் கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். கொமரம் பீம் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார்.

இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே ‘ஆர்ஆர்ஆர் ‘ படத்தின் மையக்கரு என இயக்குநர் ராஜமௌலி கூறியுள்ளார்.

ராம் சரணின் காதலி சீதாவாக ஆலியா பட் நடித்துள்ளார். இதை தவிர ஒளிவியா மோரிஸ், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

Lyca will release RRR movie in 550 screens

குட் டச் பேட் டச் போல IPC சட்டங்களையும் குழந்தைகளுக்குச் சொல்ல வரும் ‘ஹரா’

குட் டச் பேட் டச் போல IPC சட்டங்களையும் குழந்தைகளுக்குச் சொல்ல வரும் ‘ஹரா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரித்து, விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் வெள்ளி விழா நாயகன் மோகனின் ‘ஹரா’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

இயக்குநர் விஜய் ஸ்ரீ, தயாரிப்பாளர்கள் எஸ்பி மோகன் ராஜ், ஜெயஸ்ரீ விஜய், தொழில்நுட்ப கலைஞர்கள், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் சண்டைக்காட்சி படம்பிடிக்கப்பட்டது. இதில் மோகன் உற்சாகமாக கலந்துக் கொண்டார் .

சென்னையில் படப்பிடிப்பு முடிந்தவுடன், கோயம்புத்தூர் மற்றும் ஊட்டியில் படப்பிடிப்பை குழுவினர் தொடருவார்கள்.

இதுவரை மோகனை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடியது போல, ‘ஹரா’ படத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்படும்.

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, IPC சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே இந்த படத்தின் முக்கிய கருத்தாகும்.

இயக்குநர் விஜயஸ்ரீ அதிரடி மேக்கிங்கில், வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிக்கும் ‘ஹரா’ திரைப்படத்தை கோவை எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.

Mohan takes action hero avatar in Haraa with Vijay Sri

மாஸ்டர் மகேந்திரனின் ‘அமீகோ கேரேஜ்’-ஜில் இணைந்த ஜிவி பிரகாஷ் & ஷிவாங்கி

மாஸ்டர் மகேந்திரனின் ‘அமீகோ கேரேஜ்’-ஜில் இணைந்த ஜிவி பிரகாஷ் & ஷிவாங்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘அமீகோ கேரேஜ்’.

இப்படத்திற்காக இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இசையில், இசையமைப்பாளர், நடிகர் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் சிவாங்கி இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளனர்.

சமீபத்தில் இசையமைப்பாளர் தேவா இப்படத்தின் முதல் பாடலை பாடியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் சிவாங்கி இணைந்து இப்படத்தின் இரண்டாவது மெலோடி பாடலை பாடியுள்ளனர்.

திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் காந்தக்குரலும், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கியின் வசீகர குரலும் இணைந்து, இப்பாடலை மிக அற்புத அனுபவமாக மாற்றியுள்ளது.

அனைவர் மனதையும் கொள்ளை கொள்ளும் அருமையான மெலடி கீதமாக, விரைவில் இப்பாடல் வெளியிடப்படவுள்ளது.

கேங்ஸ்டர் வாழ்வை சுற்றிய ஒரு இளைஞனின் பயணமாக, சுவாரஸ்யமான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது அமீகோ கேரேஜ். இப்படத்தில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, GM சுந்தர் தசரதி, தீபா பாலு, ஆதிரா ராஜ், ஶ்ரீக்கோ உதயா, முரளிதரன் சந்திரன், மதன் கோபால், சக்தி கோபால், முரளி கமல் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை முரளி ஶ்ரீனிவாசன் தயாரித்துள்ளார்.

ராமசந்திரன் பெருமாள், பிரியா கதிரவன், அஷ்வின் குமார் VG இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைக்க, கு.கார்த்திக் படத்தின் அனைத்து பாடல்களையும் இயற்றியுள்ளார்.

விஜய குமார் சோலைமுத்து ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டிங் செய்துள்ளார். படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

GV Prakash and Sivaangi joins for Amigo garage

More Articles
Follows