தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காந்திய மக்கள் இயக்கம் சார்பாக திருச்சியில் ஒரு மாநாட்டை நடத்தினார் தமிழருவி மணியன்.
மாநாட்டிற்கு மாநில பொதுச்செயலாளர் ஏ. கணேசன் தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட தலைவர் வி. சந்திரன் மற்றும் நடிகர் ஜீவா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
அப்போது தமிழருவி மணியன் பேசியதாவது…
தமிழகத்தில் அரசியல் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியபோதுதான் என் பார்வை அவர் மீது திரும்பியது.
அதன்பின்னர் ஒரு முறை என்னை சந்திக்க விரும்பிய அவர் என் வீட்டிற்கு வரவா? அல்லது நீங்கள் வருகிறீர்களா? எனக் கேட்டார்.
ஒரு பக்குவப்பட்ட ஆன்மிகவாதியால்தான் இப்படி பேச முடியும். நான் அவரை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தேன்.
அவரை சந்தித்த உடன் முதலில் நான் அவரிடம் கேட்டது…. 20 வருடங்களாக அரசியலைப் பற்றி பேசுகிறீர்கள். அரசியலுக்கு வருவீர்களா? எனக் கேட்டேன்.
அரசியலுக்கு வருவதை பற்றி முடிவு செய்துவிட்டேன். கடவுள் சொல்லிவிட்டார் என்றார்.
அரசியலுக்கு அவர் வர 3 கனவுகள் பற்றி சொன்னார்.
இன்னும் 10 ஆண்டுகளில் நதிகளை இணைக்க வேண்டும். அது நிச்சயம் ஒரு மாநில அரசால் செய்ய முடியாது. மற்ற மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுடன் என் செல்வாக்கை பயன்படுத்தி பேசுவேன்.
காமராஜர் மற்றும் அண்ணா இருவரும் என் ரோல் மாடல்கள். மிகவும் எளிமையாக வாழ்ந்தார்கள். அவர்களை போலவே ஒரு ஊழலற்ற ஆட்சியை கொடுப்பேன்.
முக்கியமாக தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் மக்கள் இந்த ஆட்சியை பற்றி தெரிந்து கொள்ள ஒரு வெளிப்படையான ஆட்சியை கொடுப்பேன் என்றார்.
இதுதான் அவரின் 3 கனவுகள். அதுநாள் வரை நான் அவரை ஒரு நடிகராகதான் பார்த்தேன். ஆனால் அவர் சிறந்த மனிதர் என்பதை அவர் பேச பேச உணர்ந்தேன்.
அப்படி நல்ல உள்ளம் படைத்த மனிதர் ரஜினிகாந்த் முதல்வர் நாற்காலியில்அமர வேண்டாமா? என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று தமிழருவி மணியன் பேசினார்.
Rajini entering in politics to make 3 dreams true