தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாகுபலி படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து சரித்திர கால படத்தை தயாரிக்க பலரும் முன்வந்துள்ளனர்.
இதில் எவருமே எதிர்பாராத வகையில் மகாபாரத கதையை ரூ. 1000 கோடியில் தயாரிக்க திட்டமிட்டுள்ளார் பி.ஆர்.ஷெட்டி.
எம்.டி.வாசுதேவனின் விருது பெற்ற பிரபல நாவலான ரண்டாமூழம் என்ற நாவலின் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகவுள்ளது.
இப்படத்தில் பீமன் வேடத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க மற்றொரு கேரக்டரில் நாகார்ஜீனா நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்திதை மகாபாரதம் என்ற பெயரில் வெளியிடக்கூடாது என கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எனவே, இப்படத்தை இந்தியாவில் ரண்டாமூழம் என்ற நாவலின் தலைப்பிலும், உலகம் முழுவதும் மகாபாரதம் என்ற பெயரிலும் திரையிடவிருக்கிறார்களாம்.
இதே வேளையில் தயாரிப்பாளர் பி.ஆர். ஷெட்டிக்கு தனது முழு ஆதரவை தருவதாக கூறி கடிதம் ஒன்றை எழுதியுள்ளாராம் பாரத பிரதமர் நரேந்திர மோடி.
அதில்.. “நமது தேசத்தின் பெருமையை சொல்லப்போகும் மகாபாரதம் படத்தினை காண நான் காத்துக் கொண்டிருக்கிறேன். என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள படக்குழு வருகிற ஜூலை 7 ம் தேதி பிரதமரை சந்திக்கவிருக்கிறார்களாம்.
இரண்டு பாகங்களாக தயாராகவுள்ள இப்படத்தின் சூட்டிங் அடுத்த 2018ம் ஆண்டு தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
Prime Minister Modi supports Rs 1000cr movie Mahabharata and calls it pride of the India