தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தன் அரசியல் பிரவேசத்தை பற்றி ரஜினிகாந்த் இன்று உறுதிப்படுத்தும் விதமாக பேசியிருந்தார்.
தன் ரசிகர்களை போர்களத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என அவர் கூறியிருந்தார்.
இதுகுறித்து சற்றுமுன் விடுத்தை சிறுத்தை கட்சிகள் தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது…
தன்னுடைய அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தி ரஜினிகாந்த் பேசியிருக்கிறார். அவரை அரசியலுக்கு வரவேற்கிறேன்.
கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை அதிமுக திமுக கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்தன.
ரஜினிகாந்த் எந்த கட்சியிலும் இணையாமல் தனித்து போட்டியிட வேண்டும்.
அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் திருப்புமுனையாக அமையும்.
அதிமுக பலவீனப்படுத்தப்பட்டத்தாக ஒரு தோற்றம் உருவாகியுள்ளது.
சாதி, மதம் என அனைத்தையும் தாண்டி எம்ஜிஆர் கருணாநிதி ஜெயலலிதா செயல்பட்டனர்.
திமுக கட்டமைப்பு ரீதியில் பலமாக இருந்தாலும், அந்த கட்சியை வீழ்த்த மதவாக சக்திகள் களம் இறங்கியுள்ளன.
அனைத்து தரப்பு மக்கள் ஏற்றுக் கொள்ளும் தலைவராக ரஜினி நிச்சயம் இருப்பார்.
அரசியல் சிஸ்டம் சரியில்லை என்று எந்த அர்த்தத்தில் ரஜினி சொன்னார் எனத் தெரியவில்லை.
ஆனால், இந்தியா முழுக்கவே இந்த சிஸ்டம் சரியில்லை என்பது உண்மைதான்.” என்று பேசினார்.
Rajini entry will be a turning poing in Tamilnadu politics says Thirumavalavan